Tuesday, May 22, 2012

Web designed By - S.Gandhi  gandhi2221976@gmail.com ,gandhi_ril@yahoo.com ,gandhi_palani@hotmail.com
Cell no 9976517333

Alternative Medicine and Therapies

Unit-1


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது பழமொழி. உடல் ஆரோக்கியம்தான் மற்ற எல்லாச் செல்வங்களைவிடவும் சிறந்தது. இன்னும் சொல்லப்போனால் மற்ற செல்வங்களைப் பெறவும், பெற்ற செல்வத்தை அனுபவிக்கவும் ஆரோக்கியம் இன்றியமையாததாய் திகழ்கிறது. உயர்பதவி வகிப்பவர்கள், கல்வி ஞானம் உடையோர் நாவன்மைமிக்கோர், உழைப்பாளிகள் போன்றோருக்கு ஆரோக்கியம் இல்லையெனில் அவர்களது கல்வியும், உழைப்பும், நாவன்மையும் இவ்வுலகுக்கு பயன்படாமலேயே போய்விடும். அதேபோன்று குழந்தைச் செல்வங்கள்தான் நாளைய உலகை வழி நடாத்துபவர்கள். நோயற்ற குழந்தைகள்தான் கல்வியிலும் மார்க்கத்திலும் உயர்ந்து நின்று சமூகத்திற்கு பெரும் தொண்டாற்றிட முடியும். மறுமையை நம்பும் முஸ்லிம்களுக்கு பரீட்சைக் கூடமாகிய இவ்வுலகில் ஆரோக்கியம் இல்லையெனில் திறம்பட செயலாற்ற முடியாது. "சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்" என்பார்கள். எனவே நோயற்ற வாழ்வுக்கு இக்கட்டுரை உங்களுக்கு உதவிபுரியும் என்ற நன்னோக்கோடு தொகுக்கப்பட்டுள்ளது.

எனவே எல்லா நோய்களுக்கும் மருந்துண்டு இன்னும் மது, மாது போன்ற தீயவைகளைவிட்டும் நம்மை விலகியிருக்கச் சொல்லி வருமுன் காக்கும் யுக்தியை ஆன்மீக நிழலின் கீழ் எடுத்துரைத்து ஆரோக்கிய வாழ்விற்கு வழிகாட்டுகிறது இஸ்லாம்.


நோய்களும் அதற்கெதிரான போராட்டமும்

நோய்களை வென்று மரணத்தை முறியடிப்போம் என்று மருத்துவ உலகம் முயற்சித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் தினமும் புதுப்புது வியாதிகள் முளைத்த வண்ணமாய் இருக்கின்றன. இன்னும் மனிதன் மூப்படைவதை தடுத்து நோயில் தத்தளிக்கும் முதியவர்களை, "என்றும் 16" ஆக்குவோம் என்று அமெரிக்காவின் ஃபீனிக்ஸ் நகரில் இயங்கும் "க்ரானோஸ்", இன்னும் கேம்ப்பிரிட்ஜ்'ன் "சென்ட்டா ஜெனடிக்கஸ்", போன்ற ஆயுள் ஆய்வு மையங்கள் அறைகூவல் விடுக்கின்றன. மேலும் "ஸ்டெம் செல்"களை கண்டறிந்து உடலியல் குறைபாடுகளைக் களைவோம் என்று மரபியல் ஆய்வாளர்களும் மார்தட்டிக் கொள்ளத்தான் செய்கின்றனர். என்றாலும் இந்த நவீன உலகில் தோன்றும் புதுப் புது நோய்கள் அவர்களைத் திகிலடையச் செய்யாமலில்லை. எழுபதுகளில் 54ஆக இருந்த இந்திய ஆயுள் சராசரி விகிதம் தற்போது 64ஆக உயர்ந்துள்ளது என்னவோ உண்மைதான். என்றாலும் இது ஒரு ஆரோக்கிய வாழ்வின் சான்று என்று எடுத்துக்கொள்ள இயலாது. இதைத்தான் மனித ஆர்வலர் நெல்லை சு.முத்து இப்படிக் கூறுகிறார். "தொற்று நோய்களைத் தோற்கடித்தோம் அதனால் நீண்ட நாள் வாழ முடிகிறது. இது கிருமிகளுக்கு எதிரான போராட்டமே யன்றி மூப்புக்கு எதிரான வெற்றியல்ல" என்று. (நன்றி : தினமணி 15-02-2005). ஆக நாம் செய்ய வேண்டியதுதான் என்ன?!


வருமுன் காப்போம்!

நோயும் மனிதனும் மிக நெருக்கமாக வாழும் காலச் சூழல் இது. காய்ச்சல் தலைவலி போன்ற சாதாரண வியாதிகளைக் கடந்து இன்று நாளொரு வியாதியும், பொழுதொரு மருந்துமாய் மனித வாழ்க்கை நகர்கின்றது. ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த M.B.B.S. மருத்துவர்கள் எல்லாம் இன்று Traffic Police-களைப் போன்றும் பிரச்சனைகளைக் கேட்டறிந்து சிறப்பு மருத்துவர்களை பரிந்துரைக்கும் வழிகாட்டிகளைப் போன்றும்தான் செயல்படுகின்றனர். அக்கு பஞ்சர், சித்த மருத்துவம், ஹோமியோபதி, யுனானி மற்றும் ஆயுர்வேதம் என்று மருத்துவத் துறைப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. தீராத மூட்டு நோய்க்கு நிரந்தரத் தீர்வு, மூன்றே மாதங்களில் மூல நோய்க்கு முற்றுப்புள்ளி வைப்போம், ஆண்மைக் குறைவை நீக்க அவசர சிகிச்சை போன்ற பயமுறுத்தும் பத்திரிக்கை விளம்பரங்கள் ஒருபுறம் இருக்க, ஆங்கில மருந்துகளை உண்ணாதீர்கள் அதில் பக்கவிளைவுகள் அதிகம் என்ற பத்திரிக்கை உபதேசங்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இத்தனை குழப்பங்களுக்கு மத்தியில் ஆரோக்கிய வாழ்வை நாடும் நம் உள்ளங்களில் எழும் கேள்வி நோயற்ற வாழ்விற்கு வழிதான் என்ன? என்பதுதான்.


ஆரோக்கிய வாழ்வின் அவசியத் தேவைகள்

ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் நம் உடல் இயக்கம் பற்றிய தெளிவு நமக்கு ஓரளவிற்கு அவசியம். தொழில் துறையில் முன்னேறிவிட்ட இந்த இயந்திர உலகத்தில் மனிதன் சுவாசிக்கும் காற்றிலிருந்து குடிக்கும் குடிநீர்வரை எல்லாம் சுகாதாரமற்றதாகவே இருக்கின்றது. மேலும் நவீன இயந்திரங்களும் தானியங்கிகளும், கணினியும், மோட்டார் வாகனங்களும் நமது உடல் உழைப்பை வெகுவாகக் குறைத்துவிட்டன. என்றாலும் நமது வசதியைக் கருதி சுவைமிக்க வகைவகையான உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்கின்றோம். உடல் உழைப்பும், உட்கொள்ளும் உணவும் சரிசமமாய் அமைய வேண்டும் என்ற உடலியக்கச் சூட்சுமம் நமக்குத் தெரிவதேயில்லை. உட்கொள்ளும் உணவைவிட உடல் உழைப்பு குறையும் போது மேல் மிச்ச உணவுகள் உடலில் கொழுப்பாக படிந்துவிடுகின்றன. விளைவு.. இரத்த அழுத்த நோய், இதய நோய், புற்று நோய், இரைப்பை புண், நீரிழிவு நோய் போன்ற கொடிய நோய்களுக்கு மனிதன் இரையாகின்றான். இத்தகைய நோய்கள் கிருமிகள் மூலமாக பரவுவதில்லை. மாறாக மனிதன் தானாகவே தேடிக்கொள்ளும் வியாதிகள். மொத்தத்தில் நோயற்ற வாழ்விற்கு நாம் கடைபிடிக்க வேண்டியவை உடற்பயிற்சியும் நல்ல உணவுப் பழக்கமும்தான். எனவே இவ்விரண்டையும் பற்றி சற்று விரிவாகக் காண்போம்.


உடற்பயிற்சி

உடற்பயிற்சியின் நோக்கம் உடலை வலிமைப் படுத்துவது மட்டும்தான் என நினைக்கின்றோம். அது உடலின் இயக்கங்களையும், உள்ளத்தையும் சீரடையச் செய்து நோய்களிலிருந்து நம்மைக் காக்கிறது, என்ற உண்மை நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. உடற்பயிற்சி என்றதும் "பளு" தூக்குவதும், "தண்டால்" எடுப்பதும்தான் நம் ஞாபகத்திற்கு வருகிறது. அன்றாட வீட்டுச் சாமான்களை நாமே சென்று வாங்கிவருவது, ஐவேளைத் தொழுகைகளை நடந்தே சென்று தொழுவது. சைக்கிள் பயணம், நீச்சல் போன்றவைகள் அனைத்துமே ஒரு வகை உடற்பயிற்சிதான். என்றாலும் இவை முழுப்பலனையும் தராது. வயது வித்தியாசமின்றி அனைவரும் மேற்கொள்ள ஏற்ற உடற்பயிற்சியில் ஒன்றுதான் மெல்லோட்டம் (Jogging) ஆகும்.


மெல்லோட்டத்தின் (Jogging) பயன்கள்

மெல்லோட்டத்தின் செய்முறையை அறிவதற்கு முன்பு அவற்றின் பலன்களைத் தெரிந்து கொள்வது அவசியம்.


1) நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுகிறது.
2) கிருமிகளை எதிர்த்துப் போராடும் இரத்த வெள்ளையணுக்களை வீரியத்துடன் செயல்படச் செய்கிறது.
3) நம் உணவின் மூலம் நம் உடலில் தோன்றும் கிடோன், யூரியா, லாக்டிக் அமிலம், ஹிஸ்டோமைன், பிராடி ஹிஸ்டோமைன் போன்ற கழிவுப் பொருட்கள் வெளியேற வழி செய்கிறது.
4) இரத்த ஓட்டம் சீரடைவதுடன் மயிரிழையை விட பத்து மடங்கு நுண்ணிய தந்துகிகள் வரை பாய்ந்து இறந்த செல்களை உயிர்பிக்கின்றது.
5) மெல்லோட்டத்தின் போது உடலின் அதிக அளவு கொழுப்பு கரைகிறது.
6) நுரையீரல், சிறுநீரகம், ஜீரண மண்டல உறுப்புக்கள், பித்தப் பை, கணையம், கல்லீரல் போன்ற உறுப்புக்கள் சீராக இயங்கத் தொடங்குகின்றன.
7) மெல்லோட்டத்தின் போது நம் உடலில் சுரக்கும் Endorphins என்னும் திரவம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.


கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள்

1) மெல்லோட்டம் என்பது ஓட்டத்திற்கும், நடைக்கும் இடைப்பட்டதாகும்.
2) ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் மெல்லோட்டம் செல்வது சிறந்து
3) ஓடும் போது நிதானமாக ஒரே சீரான வேகத்தில் ஓட வேண்டும்.
4) வேகம் வயது மற்றும் உடல் அமைப்பிற்குத் தகுந்தவாறு இருக்க வேண்டும்.
5) மூச்சிரைக்க ஓடக் கூடாது.
6) குறைந்த வேகத்தில் ஆரம்பித்து படிப்படியாக நேரத்தைக் கூட்ட வேண்டும்.
7) கை, கால்களில் விரைப்பாக வைக்காமல் தளர விட வேண்டும்.
8) மெல்லோட்டத்தின் போது நம் உடலில் ஏற்படும் உஷ்ணம் வெளிக் காற்று பட்டு குளிர்ந்து விடாத வாறு உரத்த ஆடைகளை அணிவது நல்லது.
9) இடைவிடாமல் தொடர்ச்சியாக ஓடினால்தான் உடலில் உஷ்ணம் ஏற்படும். இடையில் நிற்கக் கூடாது.
10) 30 நிமிட மெல்லோட்டத்திற்குப் பின் தசைகள் மற்றும் உறுப்புக்களை தளர்வடையச் செய்யும் Callisthanic Exercise பத்து நிமிடங்கள் செய்வதன் மூலம் தசை வலிகள் ஏற்படாது.
11) நாள்தோரும் மெல்லோட்டம் செல்ல வேண்டும்.
12) மெல்லோட்டம் செல்ல காலை வேளையே சிறந்தது.


உணவும், உடற் பருமனும்

வாழ்வதற்காகவே உண்பவர்கள் இருக்கிறார்கள், உண்பதற்காகவே வாழ்பவர்களும் இருக்கின்றார்கள். இரண்டாம் வகையினர்தான் பல வியாதிகளையும், உடற்பருமனையும் விலைகொடுத்து வாங்கிக் கொள்கின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் (W.H.O) அறிக்கையின் படி உலகம் முழுவதும் 100 கோடி பேர் அளவுக்கதிகமான எடையுடையோர்கள், 40 கோடி பேர் மிக அதிக எடையுடையோர், 30 கோடி பேர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர். நம் தமிழகத்தில் சென்னையில் மட்டும் 49% பேர் அளவுக்கு அதிகமான எடையுடையோர் (நன்றி : தினமணி, 09-03-2005)

பெரும்பாலான நோய்களுக்கு காரண கர்த்தாவாக அமையும் இந்த உடற் பருமனால் இரத்தக் குழாய் சம்பந்தப்பட்ட நோய்கள், இரத்த அழுத்த நோய், மாரடைப்பு, சில வகைப் புற்று நோய்கள், Type - 2 வகை நீரிழிவு நோய், கணைய நோய், பால் உணர்வில் நாட்டமின்மை, போன்ற கொடிய நோய்கள் ஏற்படுகின்றன.


தேவை சரிவிகித உணவு

உணவின் ருசி கருதி தனக்குப் பிடித்த உணவை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்த்து பல உணவுகளைக் கலந்து உண்ணப் பழகிக் கொள்ள வேண்டும். புரோட்டீன், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள், மாவுச் சத்து, நார்ச் சத்து போன்ற எல்லாம் கலந்து உணவை சரிவிகித உணவு எனலாம். அத்தோடு உட்கொள்ளும் உணவுப் பொருளின் வெப்ப வெளிப்பாட்டுத் திறன் (கலோரி)"ஐயும் கணக்கிடத் தெரிந்து கொள்ள வேண்டும்.


தவிர்க்க வேண்டியவை


போதைப் பொருட்களான மது, புகைபிடித்தல் குட்கா வகைகள், போதை மருந்து போன்றவற்றை முற்றாகத் தவிர்க்க வேண்டும். துரித உணவு வகைகள் (Fast Food) , ஐஸ் கிரீம், சாக்லேட், செயற்கை குளிர்பான வகைகள் போன்றவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதில் ப்ரிசர்வேட்டர் போன்ற வேதிப் பொருட்கள் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும். வனஸ்பதி போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவு (Refined Foods) களையும், வெள்ளை மைதா போன்ற மிகச் சுத்திகரிக்கப்பட்ட (Processed Food) களையும் குறைத்துக்கொள்வது நல்லது. ஒரே எண்ணையை பல முறை உபயோகப்படுத்தக் கூடாது.


சமையல் எண்ணை ஓர் தெளிவு

சமையல் எண்ணையில் கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது. கொழுப்புச் சத்துக்களை இரண்டுவகையாகப் பிரிக்கலாம்.
1) முழுமையடையாத கொழுப்பு (Poly unsaturated Acid)
2) முழுமையடைந்த கொழுப்பு (Saturated Fatty Acid)

இதில் முதல்வகைக் கொழுப்பில் அதிக தீங்குகள் இல்லை. இவை இரத்தக் குழாயில் படியாது. இதிலுள்ள Linolic Acid கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையுடையது.

இரண்டாம் வகைதான் மிக ஆபத்தானது. இதில் உள்ள கொழுப்புக்கள் இரத்தக் குழாயில் படிந்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது.

எனவே முழுமையடைந்த கொழுப்புக்கள் அதிகமாக உள்ள தேங்காய் எண்ணெய், நெய், பாம் ஆயில் போன்றவற்றை தவிர்த்துக் கொள்வதோடு சபோலா கார்டி ஆயில், கார்ன் ஆயில், சன் ஃபிளவர் போன்ற சமையல் எண்ணைகளை பயன்படுத்தி ஆரோக்கிம் காப்பீர்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
மனித வாழ்க்கையில் மரணம் என்பது தடுத்து நிறுத்த முடியாத ஒன்று, எனினும் நாம் உடல் நலத்துடன் வாழ முயற்சித்தல் வேண்டும். இவ்வளவு விஷயங்களை நம் வாழ்வில் நடைமுறைப்படுத்துவது சாத்தியம் தானா? முயன்றால் நம்மால் முடியும். அதே நேரம் மார்க்கக் கண்ணோட்டத்தோடு நோக்கினால் நிச்சயம் முடியும்.

ஐந்துக்கு முன் உள்ள ஐந்தினைப் பேணிக் கொள்ளுங்கள்.

1) முதுமைக்கு முன் உள்ள வாலிபம்

2) வறுமைக்கு முன் உள்ள செல்வம்

3) நோய்க்கு முன் உள்ள ஆரோக்கியம்

4) வேலைக்கு முன் உள்ள ஓய்வு

5) மரணத்திற்கு முன் உள்ள வாழ்வு


எனவே மேலே கூறியது போன்று நோய்க்கு முன் உள்ள ஆரோக்கிய வாழ்வினைப் பெற்று அதனைத் தக்க வைத்துக் கொள்ள மரணத்திற்கு முன் உள்ள வாழ்வில் வேலைக்கு முன் உள்ள ஓய்வினை உண்பதற்கும் உறங்குவதற்கும் மட்டுமே பயன்படுத்தாது நமக்கும், நம் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், படைத்த இறைவனுக்கும் ஆற்ற வேண்டிய நற்செயல்களை கருத்தில் கொண்டு உணவுக் கட்டுப்பாட்டுடன் கூடிய உடற்பயிற்சி செய்து நோயற்ற வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவன் நமக்கு உதவி செய்வானாக!


 

 

ஆயுர்வேத வைத்திய முறைகள்



“வாழ்க்கையின் விஞ்ஞானம்” என்பதுதான் ஆயுர்வேதம். கிறிஸ்து பிறப்பதற்கு 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் ஆயுர்வேத முறை பயன்பாட்டில் இருந்துள்ளது. மிக நீண்ட வரலாறு கொண்ட ஆயுர்வேதம் பல்வேறு நிலைகளில் பல மாற்றங்களைக் கண்டு வந்துள்ளது.
 வேத காலத்தில் இந்தியாவில் சிறந்து விளங்கிய ஆயுர்வேதம் இந்தோனேஷியா, கிரேக்கம் போன்ற நாடுகளுக்கும் பரவியது. பிற நாடுகளில் இந்திய ஆயுர்வேதத்தை ஏற்றுக் கொண்டவர்கள், அதை தங்களுடைய தேவைகளுக்குத் தகுந்தவாறு மாற்றிக் கொண்டனர்.
 இன்றைய உயரிய வசதிகள் இல்லாத அந்த காலக்கட்டத்தில் ஓலைச் சுவடிகளில் பெரும்பாலும் எழுதி வைக்கப்பட்ட இந்திய ஆயுர் வேத நூல்கள் அழகாக தெரிவிக்கின்றன. நோய் வரும் முன் காப்பதையும், நோய் வந்த பின் என்னென்ன சிகிச்சை முறைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் பழங்கால ஆயுர்வேத நூல்கள் அழகாக தெரிவிக்கின்றன.
 நோய்கள் தோன்றி மனிதகுலம் அவதிக்குள்ளாவதைக் கண்ட ரிஷிகளும், முனிவர்களும் தீவிரமாக யோசித்ததன் விளைவுதான் ஆயுர் வேதம் பிறப்பு.


புனர்வசு ஆத்திரேயர் என்ற ரிஷியான சீடரான அக்னி வேசர் எழுதிய அக்னிவேச சம்ஹிதையே சரக சம்ஹிதை என்று அழைக்கப்படுகிறது.
 ஆயுர்சேத நூல்களில் மற்றொரு மிகச்சிறந்த நூலாகத் திதழ்கிறது. சுஷ்ருதரால் இயற்றப்பட்ட “சஷ்ருத சம்ஹிதை”. புத்தர் வாழ்ந்த காலத்துக்கும் முற்பட்டவர் இந்த சுஷ்ருதர்-இப்படித் தான் ஆயுர்வேதம் தோன்றி வளர்ந்துள்ளது.


 இதே ஆயுர்வேத முறையை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதத்திலும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை கேரள ஆயுர்வேத சிகிச்சை முறைகள் நம் நாட்டவரை மட்டுமின்றி, வெளிநாட்டவரையும் வெகுவாக ஈர்த்துள்ளன. இதனால்தான், இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்கள் கேரளாவுக்குச் சென்று கேரள ஆயுர் வேத சிகிச்சை எடுத்துப் புதுப்பொலிவோடு திரும்புகின்றனர். இதனால், ஆரோக்கிய சுற்றுலாவில் முதன்மையாகத் திகழ்கிறது கேரளா.
 கேரளாவில் அப்படி என்ன ஆயுர்வேத சிகிச்சைகள் அளிக்கிறார்கள்?


அப்யங்க ஸ்வேதனா
 மிக எளிமையான சிகிச்சை முறைதான் இது. குறிப்பிட்டகால ஆரம்பக்கட்ட சிகிச்சைக்குப் பிறகு மூலிகை மருந்து கலந்த எண்ணெய் மற்றும் நீராவி குளியலுடன் மசாஜ் சிகிச்சை அளிப்பார்கள். இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், உடலை வலுப்படுத்தும், உடல் திசுக்களை உறுதிப்படுத்தும், நல்ல -ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும்.


பிழிச்சில்
 ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம்வரை உடலில் இளஞ்சூட்டில் எண்ணெய் விட்டு சிகிச்சை அளிக்கும் முறை இது. எலும்பு முறிவுகள், மூட்டு பிசகு, கை-கால் வலிமற்றும் விரைப்புத்தன்மை, பக்கவாதம், ருமாடிக் காய்ச்சல், ருமாய்ட்டோடு ஆர்த்தரைட்டிஸ் போன்ற பிரச்சனைகள் இந்க சிகிச்சையால் விலகும்.


தாரா
 ஒரு குறிப்பிட்ட மூலிகை எண்ணெய், மருந்து கலந்த பாலை தினமும் 45 நிமிடங்கள் முன் நெற்றியில் விசேஷசமான முறையில் ஊற்றி சிகிச்சை அளிக்கும் முறையே இது. உடல், மனம் சமநிலை பெறுவதில் இந்த சிகிச்சை மிகவும் உதவுகிறது. உடல் பலமும், நினைவு திறனும் அதிகரிக்கிறது. அத்துடன் குரல் வளம் தெளிவாகிறது. கண் நோய்கள் தீருதல், தலைவலியில் இருந்து விடுதலை, ஆரோக்கியமான நல்ல தூக்கம், மென்மையான அழகான சருமம் பெறுதல்.... போன்று பல்வேறு நன்மைகளும் இந்க சிகிச்சையால் நமக்கு கிடைக்கின்றன.

நசரக்கிழி
 பல்வேறு மருந்து கலவை கொண்ட துணிப்பை மூலம் உடலில் ஒற்றடம் கொடுத்து சிகிச்சை அளிக்கும் முறையே இது. இதன்மூலம் முழு உடலும் அல்லது உடலின் குறிப்பிட்ட பகுதிகள் வியர்க்க வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக உடலின் இறக்கம் குறைந்து மூட்டுகளின் விறைப்புத்தன்னை நீங்குகிறது. ரத்த ஓட்டமும் மேம்படுகிறது. தேகம் பொலிவு பெறுகிறது. அதிக தூக்கத்தால் உண்டாகும் அசதியும் விலகுவதோடு, நரம்பு சம்பந்கப்பட்ட நோய்களும் குணமாகின்றன.


நஸ்யம்
 இது ஒரு வித்தியாசமான சிகிச்சை முறை. மூலிகைச்சாறையும், மருந்துகள் கலந்த எண்ணெயையும் மூக்கின் வழியே விடுகிறார்கள். இதனால் ரதத ஓட்டம் மேம்பட்டு உடல் உறுப்புகளுக்கு புது தெம்பு கிடைக்கிறது. அத்துடன். பல்வேறு நரம்புகளின் நுனிகள் தூண்டப்பட்டு மைய நரம்பு மண்டலம் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்கிறது.


உதவர்த்தனம்
 இது மசாஜ் முறையிலான சிகிச்சை, மருந்து கலந்த பவுடரை உடலில் தூவி மசாஜ் செய்வார்கள். இதனால் தோற்றம் பொலிவு பெறுவதோடு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அகற்றப்பபடுகிறது. அதன்மூலம் உடல் எடை குறைகிறது. மேலும், நல்ல தூக்கம் கிடைத்து உடலும் புத்துணர்வு பெறுகிறது.
 - வருடம் முழுவதும் உழைத்து மனதாலும், உடலாலும் தேய்ந்து போனவர்கள், கேரள ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. இது கொஞ்சம் அதிகச் செலவுடைய சிகிச்சைதான் என்றாலும், பல நன்மைகளைத் தரக் கூடியது என்பதால் தாராளமாக எடுத்துக் கொள்ள முன்வரலாம்.
 இப்போதெல்லாம் கேரள ஆயுர்வேத சிகிச்சை முறைகள் சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் அளிக்கப்படுகின்றன. ஆனால், கேரளாவுக்குச் சென்று இந்த சிகிச்சையை எடுத்துக் கொண்டால், அங்குள்ள இயற்கையோடு ஒன்றி லயிக்கலாம். கூடுதல் பலனும் கிடைக்கும்.


 Yoga and Naturopathy



யோகம் என்றால் என்ன?

யோகம் என்ற சொல் 'யுஜ்' என்ற சமஸ்கிருத மொழியில் உள்ள சொல்லின் வழியே பிறந்ததாகும். யோகம் என்ற சொல்லுக்கு "ஒருங்கிணைத்தல்" அல்லது "எல்லாவற்றையும் எந்தவிதமான வேறுபாடுமின்றி முழுமைப்படுத்துதல்" என்றும் பொருள் கூறுகின்றனர். யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர். யோகம் தமிழில் தவம் அல்லது ¦cஜபம் எனப்படும். சிவபெருமானுக்கு யோகி என்று மற்றொரு பெயரும் உண்டு. எனவே யோகத்தின் தலைவனாகவும், பிறப்பிடமாகவும் சிவபெருமானைக் குறிப்பிடலாம். சிவபெருமான் ஆதியில் மகேந்திர மலையில் தமிழ்நாட்டு முனிவர்கள் நால்வருக்கு ஒரு மரத்தின் கீழ் இருந்து அறம் உரைத்தார் என்று தேவாரத்திலும் திருவாசகத்திலும் நன்கு எடுத்துக் காட்டப் பெற்றுள்ளது. சிவபெருமான் இந்த நான்கு முனிவர்களுக்கு காட்சி அளித்தது. தட்சிணாமூர்த்தம் என்று கூறப்படும். அந்த தட்சிணாமூர்த்தம் ஆறில் சிவபிரான் ஞானதட்சிணாமூர்த்தியாகவும், யோக தட்சிணாமூர்த்தியாகவும் காட்சி அளித்துள்ளார். யோக தீட்சை என்பது குரு யோக மார்க்கத்தால் சீடனது உடலுள் பிரவேசித்து அவனது ஆன்மாவைக் கிரகித்து சிவன் திருவடியில் சேர்ப்பிக்கும் தீட்சை வகையாகும்.

அறிவியல் கலை

யோகம் என்பது மக்கள் தம் உடலையும் உள்ளத்தையும் அடக்கியாளக் கண்ட ஓர் அறிவியல் கலையாகும். யோகப் பயிற்சியில் சித்திபெற்ற அறிஞர்கள் இயற்கையைத் தன்வயப்படுத்தும் ஆற்றலை அடைவார்கள். யோகக் கலை சாகாக் கலை என்று பல அறிஞர்கள் கூறுவர். யோகப் பயிற்சியால் நீண்ட நாள் வாழலாம். யோகம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய கலையாகும்.

யோகக் கலை

யோகம் பயில்வதற்கு ஆசனப்பயிற்சி இன்றியமையாதது. யோகப் பயிற்சிகளில் யோகாசனம் முக்கியமானது. யோகம் ஒரு கலை கல்வி பயில்வதற்கு எழுத்து எவ்வளவு இன்றியமையாததோ, அவ்வளவு இன்றியமையாதது யோகம் பயில்பவர்களுக்கு யோகாசனம் பயில்வது என்று கூறினால் அது மிகையாகாது.

சிவயோகம்

இந்த யோகம் என்னும் அரும்பெரும் ஆன்மீகக்கலை நம் முன்னோர் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்ட அரும்பேரும் கலை. இக்கலை இன்று சைவ சமய சாத்திரங்களில் அழகுற மிக நுணுக்கமாக எடுத்துக் காட்டப் பெற்றுள்ளது. யோகத்தை சிவயோகம் என்பதும், இது சிவனார் மக்களுக்கு உபதேசித்துக் கொடுத்து கலை என்பதும் தொ¢ந்தே. உலகிலே முதன் முதலாக யோகக் கலையைக் கண்டவர்கள் சிவனை வழிபடும் சிநெறியாளர்களே.

பாதார விந்தத்தை அடைதல்

சுமார் 1900 ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்து பெருமான் தன் இனம் பிராயத்தில் இந்தியாவிற்கு வந்து இந்த யோகக் கலையைப் பயின்று சென்றிருக்கலாம் என்று பல அறிஞர்கள் கருதுகிறார்கள்.

"தன் அறைகளை (ஐம்பொறிகளை) அடைத்துக்கொண்டு என்னை அந்தரங்கத்தில் தேடுகிறவன் கண்டடைவான்" என்று அவரது உபதேசமும் மலையில் அவர் 40 நாள் உண்ணாது உறங்காது யோக நிலையில் அமர்ந்து ஞான நிலையை அடைந்து (சித்தி பெற்று) அப்பால் அவர் ஆற்றிய மலைப பிரசங்கத்தின் மாண்பும் ஏற்ற எடுத்துக்காட்டாகும் என்று இயம்புகின்றனர். யோக நிலையைப் பற்றியும் இறைவனுடைய பாதாரவிந்தத்தை யோகம் மூலம் எளிதில் அடையாளம் என்பதையும் விளக்கித் தமிழில் சைவ சமய நூல்களில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. சைவ நூல்கள் யோக நிலைக்குச் சிறப்பான இடத்தை அளித்துள்ளன.

யோக முறை

யோகாசன முறைகளை முறையோடு பின்பற்ற வேண்டும் உள்ளுறுப்புகள்தான் யோகாசனத்தில் முழுக்கப் பயன்படுகின்றன. உள்ளுறுப்புகள் தூய்மை பெறவும் வலிமை பெறவும் பயிற்சி செய்யும் நேரத்தில் மிகவும் நியமத்துடன் பயபக்தியுடன் நெறி பிறழாது செய்ய வேண்டும்.

யோகப் பயிற்சியின் சிறப்புகள்

தேகத்திற்கு வந்த நோய்களைப் போக்கியும் இனி நோய்கள் வராமல் காத்தும் ஒருவருக்கு உகந்த உடலை உருவாக்குகிறது.

உள்ளுறுப்புகளையும் வெளியுறுப்புகளையும் தூய்மைப்படுத்தி அது தன் பணிகளை அருமையாகவும் திறமையாகவும் அயராமல் செயல்படுத்தத் தூண்டுகிறது.

சாதராணமாகச் செயல்படும் ஒருவனுடைய செயலாற்றலை மிகுதிப் படுத்துவதுடன் உடல் நலமும், மனவளமும் பெற்று வாழ உற்சாகப்படுத்துகிறது.

அன்றாடம் உடலில் உண்டாகும் கழிவுப் பொருட்களை வெகுவிரைவாக வெளிப்படுத்தவும், உடலைக் கசடற்ற முறையில் வைத்துக்காக்கின்ற சக்தியினையும் உடலுக்குத் தருகின்றது. அதாவது நரம்புகள், மூளை, நுரையீரல், இதயம், ஜீரண உறுப்புகள் மற்றும் குண்டிக்காய் போன்ற அவயவங்களுக்குத் திறமையுடன் வேலை செய்கின்ற ஆற்றலை அளிக்கிறது.

நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் துணை பு¡¢கிறது. மனதாலும், செயலாலும், உயர்ந்த வாழ்வு வாழத் தூண்டுகிறது. இவ்வாறு தேகநலனைப் பற்றியும், சிறந்த ஆரோக்கிய வாழ்வு முறையைப் பற்றியும் யோகமுறை உடற்பயிற்சி முறைகள் நிறைந்து செயல்படுகின்றன.

ஆசனம் செய்வதால் உண்டாகும் பயன்கள்:

ஆசனங்களை முறையோடு செய்து வந்தால் உடல்வளம் பெறுவதுடன் மிகவும் சுறுசுறுப்போடும் விரைவாகவும் அன்றாட வாழ்வில் இயங்க முடியும்.

முதுகெலும்பு எளிதில் வளைந்து இயங்கும் ஆற்றலைப் பெறுவதால், எதனையும் சிறப்பாகப் பணியாற்றும் வகையில் உடலில் ஒத்துழைப்பு உயர்ந்த அளவில் கிடைக்கிறது.

பசி நன்றாக எடுக்கிறது. உடலில் பற்றிக் கொள்கின்ற நோய்கள் தொடக்க நிலையிலேயே முறியடிக்கப்படுகின்றன.

மிகவும் முக்கிய உறுப்புகளான இதயம், நுரையீரல்கள் மற்றும் மூளைப்பகுதிகள் செழிப்படைந்து சிறப்புடன் பணியாற்ற முடிகிறது.

தங்கு தடை இல்லா இரத்த ஓட்டம் உடலெங்கும் இயல்பாக ஓடி, உடலைப் பூரணப் பொலிவு பெற வைக்கிறது.

உடல் அவயவங்கள் எல்லாம் விறைப்பாக இருக்காமல், எளிதில் செயலுக்கு இணங்கும் தன்மையின் இருந்திட வழி அமைகிறது.

தோல், நரம்பு, மற்றும் அனைத்துப் பகுதிகளுக்கும் ஆசனப் பயிற்சிகள் உரமூட்டுகின்றன.

"மூளைக்குப் போதிய பிராணவாயு கிடைக்காவிட்டால் படபடப்பும் பதைபதைப்பு உணர்வும் எழுச்சியும் உண்டாவதோடு உடல் அமைப்பையும் மாற்றி, செயல்களையும் சின்னாபின்னாப்படுத்துவதுடன் நோயுற்றவராகவும் ஆக்கிவிடுகிறது." என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். இந்தப் பிராணவாயுவின் பெருமைகள் எல்லாம் நம்முடைய பிராணாயாமம் என்பதில் அடங்கியுள்ளது. உடலுக்குள்ளே பிராணவாயு என்கிற உயிர்க் காற்றைச் சேர்த்து வைத்து, பேராண்மைமிக்க சக்தியினைப் பெருக்கும் வழிதான் பிராணாயாமம் என்றனர்.

 Naturopathy



உலகில் பல்வேறு வகையான மருத்துவ முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் என ஒவ்வொரு வரும் தங்களது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட மருத்துவமுறையை நாடுகின்றனர். சமீபகாலமாக ‘இயற்கை மருத்துவம்’ என்னும் புதிய மருத்துவமுறை, உலக அளவில் பிரபலமடைந்து வருகிறது.
இயற்கை மருத்துவம் என்றால்…? தாவரங்கள் ஊசி போடுமா…? மரங்கள் மருந்து தடவுமா…? என்றெல்லாம் கேலியாகக் கேட்கலாம். ஆனால் இயற்கை மருத்துவத்தின் தார்பாரியம் அதுவல்ல.மனிதன் ஆரோக்கியமாக வாழவும், அவனது உடலில் ஏற்படும் பிரச்னை களைச்சரி செய்யவும் இயற்கையிலேயே எண்ணற்றத் தீர்வுகள் இருக்கின்றன.
மருத்துவ மாத்திரைகளை நம்பி வாழும் நவநாகரிக மனிதனுக்கு வேண்டுமானால் இயற்கை மருத்துவம் என்பதும், அதன் தார்பாரியங்களும்  புதிதாக, புதிராக இருக்கலாம். ஆனால் ஆதி மனிதனுக்கு இது ஒன்றும் புதிதான விஷயமல்ல.
மனிதன் படைக்கப்பட்ட புதிதில் இயற்கையோடு கை கோத்துக்கொண்டுதான் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தான். அப்போது அவனது வாழ்க்கை இன்பம் நிறைந்ததாக இருந்தது. ஆதிமனிதனின் ஆரோக்கியத்திலும் எந்தக் குறையும் இல்லை. அதில் குறைபாடு ஏற்பட்டாலும் இயற்கையில் இருந்தே அவனது பிரச்னைகளுக்கான தீர்வு கிடைத்தது.
நாகரிகமும் விஞ்ஞானமும் வளர வளர மனிதன் இயற்கையில் இருந்து விலக ஆரம்பித்தான். பிரச்னைகளுக்கான தீர்வுகளை மனிதன், தனது தாரமான இயற்கையில் தேடாமல், செயற்கையாக உருவாக்க ஆரம்பித்தான். அதில் அவனுக்கு வெற்றியும் கிடைத்தது. அந்த வெற்றியின் காரணமாக இயற்கையே வெல்லமுடியும்’ என்கிற ஆசையும்,நம்பிக்கையும் அவனிடத்தில் உருவாகின. அதன் விளைவாகக் கண்டுபிடிப்புகள் பெருகின. இயந்திரங்கள் அதிகரித்தன. மனிதன், இயற்கையில் இருந்து முற்றிலுமாக அந்நியப்பட்டுப்  போனான்
இயந்திரங்களின் பெருக்கத்தால் காற்று, நீர், அண்டவெளி, மண் போன்ற இயற்கையின் செல்வங்கள் அனைத்தும் மாசடைந்தன. அதன் விளைவாக, மனிதன், விலங்கு, பறவை, தாவரங்கள் மற்றுமுள்ள உயிரினங்கள் அனைத்தும் தத்தம் இயல்புக்கு மாறான தோற்றங்கொண்டு, நோய்களைப் பெற்றுக் கொண்டன.
தமிழ் மருத்துவ ஆவணங்களைப் பார்க்கும்போது, மொத்தமுள்ள நோய்களின் எண்ணிக்கை 4448 என்று தெரிய வருகிறது. அக்கணக்கு சுமார் ஆயிரம் ஆண்டுக்கும் முற்பட்டது. இப்போது இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்திருக்கும். ஆனால், இன்றைய மருத்துவர்களை நோய்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கேட்டால், விழிக்கின்றனர். தினந்தோறும் புத்தம்புதிய நோய்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
அவற்றுக்கான மருந்துகளைக் கண்டுபிடிக்க உலகம் போராடிக்கொண்டிருக்கிறது. ஆனாலும், பல நோய்களுக்கு மருந்துகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது தான் சோகம்.
வளமாகவும் நலமாகவும் வாழ வேண்டிய உயிரினம், நோய்களுடன் போராடிக் கொண்டிருக்கிறது. எந்த மருந்தாவது, எந்த நோயைத் தீர்த்து வைக்காதா? என்ற ஏக்கம் அனைத்து உயிரினங்களின் முகத்திலும் தெரிகிறது.
விலங்குகளையும் பறவைகளையும் தாவரங்களையும் காப்பாற்ற முடியாவிட்டாலும் மனித இனத்தையாவது காப்பாற்றியாக வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றது, மருத்துவம். அதனால்தான் பல்வேறு மருத்துவமுறைகள் உருவாக்கப்பட்டன. பல்வேறு வாகளைக் கையாண்டு மனிதன் தன்னைத் தாக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வுகளைக் கண்டுபிடித்தான். அத்தகைய வழிகள் தான் சித்தா, ஆங்கிலம், ஆயுர்வேதம் எனப் பிரிந்தன.
இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்த பழங்கால மனிதன், ஆரோக்கியம்  பாதிக்கப்படாத வகையில் தனது வாழக்கை முறையை அமைத்துக் கொண்டான். அதையும் மீறிஉடல் நிலை பாதிக்கப்பட்டபோது, இயற்கையில் கிடைத்த பொருள்களைக் கொண்டே அவற்றைச் சரிசெய்து கொண்டான். அவனது வாழ்க்கை முறையையும், தனக்குத்தானே அவன் செய்து கொண்ட சிகிச்சைகளையும் ஒழுங்குபடுத்தி, நெறிப்படுத்தித்தான் இயற்கை மருத்துவம் உருவாக்கப்பட்டது.
இயற்கையிலிருந்து உருவான என்பதால்தான் மற்ற மருத்துவமுறைகளை விட, இது மேலானதாகவும், சிறந்ததாகவும் கருதப்படுகிறது. பரம்பரை நோய், ஓட்டு நோய், தொற்று நோய், உணவு நோய், உடை நோய், உறவு நோய், உவகை நோய் போன்ற எல்லாவிதமான நோய்களில் இருந்தும் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளைச் சொல்வதுதான் இயற்கை மருத்துவம்.
தற்போது பூமியில் நிலவிவரும் சுற்றுச்சூழல் மாறுபாடுகளால் உருவாகிற நோய்ப்பெருக்கம் மனித இனத்துக்கே பெரும் சவாலாக இருந்து வருகிறது. தன்னையும் தன்னினத்துச் சந்ததிகளையும் பாதுகாக்கும் வல்லமையை இயற்கை மனிதனுக்கு அளித்திருக்கிறது. இயற்கை மருத்துவம் அந்த வல்லமையைத்தான் உலகுக்குப் புரிய வைக்கிறது.
உண்மையில் இயற்கை மருத்துவத்தின் அடிப்படை என்ன?
மனிதன் உயிர் வாழவதற்கு வேண்டிய முதன்மை உணவாக சூரிய ஒளி, காற்று, நீர் ஆகியவை உள்ளன. இவை இருக்கும் வரை, மனித உடல் இயங்குவரை பட்டினி என்பதே இருக்காது-. மனிதன் உண்ணும் உணவெல்லாம், மனித உடலுக்குத் தேவைப்படாதவை. சூரிய சக்தியே உலகிலுள்ள உயிர்கள் அனைத்துக்கும் தேவையான முதன்மை உணவு. அதுவே, ஆற்றலின் இருப்பிடம்.
இம்மண்ணில் பட்டினியால் இறப்போரைவிட, முறையட்ட உணவுப்பழக்கதால் இறப்போரின் எண்ணிக்கையே அதிகம். உணவுப்பழக்கத்தால், உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றத்தால் உண்டாகும் நச்சுகளை வெளியேற்றத் தெரியாமலும் பலர் இறக்கிறார்கள்.
உணவுப்பொருள்களினால் உடம்பில் ஏற்படும் நச்சுத்தன்மையை வெளியேற்றி, உடலைத் தூய்மைப்படுத்தி, உடல் உள்ளுறுப்புகள் அவற்றின் இயல்பு நிலை மாறாமல் பாதுகாக்கும் முறையே காய சுத்தி அல்லது அக சுத்தி எனப்படுகிறது. காய சுத்தி முறையைக் கற்றவர்களுக்குப் பட்டினி என்பதே கிடையாது.
மேலே சொல்லப்பட்டவை அனைத்துமே இயற்கை மருத்துவத்தின் கூறுகளே. காயசுத்தி முறையில் உடலைச் சுத்தம் செய்து, சூரிய ஒளி, காற்று, நீர் ஆகியவற்றை உண்டு வாழந்து ஆரோக்கியத்தைப் பராமரிப்பதே இயற்கை மருத்துவத்தின் மையமான அம்சம்.
பெருவாழ்வு ரகசியம்
நியாயமாகப் பார்த்தால் மனிதன் 300 ஆண்டுகள் வாழ வேண்டும். பழங்கால மனிதன் 300 ஆண்டுகள் வாழ்ந்தான் என்பதற்குரிய சான்றுகள் கிடைத்திருக்கின்றன. சமைக்காத இயற்கை உணவை உண்டுவாழும் முயல் இனத்தில், முயல்குட்டி, பிறந்த 3 மாதத்தில் பருவத்துக்கு வந்து குட்டி போடுகிறது. முயலின் வாழ்நாள் 60 மாதங்கள்.
ஆட்டுக்குட்டி, 6 மாதத்தில் பருவத்துக்கு வந்து குட்டி போடுகிறது. ஆட்டின் வாழ்நாள் 120 மாதங்கள். பசு மாட்டின் கன்று, ஓர் ஆண்டில் பருவத்துக்கு வந்து கன்று போடுகிறது. பசுவின் வாழ்நாள் 240 மாதங்கள்.
மனித இனம் 15 ஆண்டுகளில் பருவம் எய்தி குழந்தை பெறத் தயாராவதால், மனித இனத்தின் வாழ்நாள் 3600 மாதங்களாக இருக்க வேண்டும்.
முயல்: 20*3=60/12=5 ஆண்டுகள்
ஆடு: 20*6=120/12=10 ஆண்டுகள்
பசு: 20*12=240/12=20 ஆண்டுகள்
மனிதன்: 20*180=3600/12=300 ஆண்டுகள்
மனிதனும் விலங்கும் பருவம் எய்தும் காலத்தைக் கொண்டு ஆயுள்காலம் கணிக்கப்படுகிறது. இதுவே இயற்கை நியதியாகக் கருதப்படுகிறது.
உணவாகக் கருதப்படும் காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றின் இயல்புநிலை மாறாமல், ஆவியில் வேகவைத்து உண்டால் நீண்ட நாள் வாழலாம். ஆனால், நாம் அப்படிச் செய்வதில்லை. முறையற்ற உணவுப் பழக்கத்தையே நாம் பின்பற்றுகிறோம்.
நமது உணவில் பெரும்பான்மையாக இடம்பெறும் தாளித்த, வறுத்த உணவுகள் நமது வாழ்நாளைக் குறைக்கின்றன. அதோடு அசுத்தமான காற்றும் அசுத்தமான குடிநீரும் வாழ்நாளைக் குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன.
மேலும் புகை, மதுப்பழக்கம் கொண்டவர்களுக்கு 60 வயதுக்கும் குறைவாகவே வாழ்நாள் அமைகிறது. இவற்றையெல்லாம் மீறி நாம் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்?
இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழவேண்டும்

UNANI MEDICINE


யுனானி கிரேக்க-அராபிய வைத்திய முறையாகும்.

[1] இவ்வைத்திய முறைமை மனித உடலில்காணப்படும் நான்கு வகையான பாய்மங்களான Phlegm (Balgham), குருதி (Dam), Yellow bile(Safra), Black bile பற்றிய இப்போகிரடிசின் படிப்பினைகளை மையமாகக் கொண்டுள்ளது.

[2]அரபு இந்துஸ்தானி, பாரசீக உருது மொழிகளில் கிரேக்கம் எனப் பொருள். இது சிறிய ஆசியாவின் கடற்கரைக்கு வழங்கிய கிரேக்க மொழிப் பதமான லோனியா என்பதில் மருவியதாகும். யுனானி வைத்திய முறை பற்றிய தகவல்கள் இரண்டாம் நூற்றாண்டு முதல் கிடைக்கிறதாயினும் யுனானி வைத்தியம் பற்றி சிதறிக்கிடந்த தகவல்கள் பாரசீகரான அக்கீம்

யுனானி மருத்துவம், அதன் பெயரின் மூலம் கிரீஸ் நாட்டில் இருந்து தோன்றியது என தெரிகிறது. அரபு மொழியில் யுனான் என்ற சொல்லுக்கு கிரீஸ் என்று அர்த்தம். அச்சொல்லே பிறகு யுனானி என்று வழங்கலாயிற்று.

கிரேக்க தத்துவஞானியும் மருத்துவருமான ஹிப்போகிரேட்ஸ் (அரபு மொழியில் புக்ராத்) கி.மு. 460-377, ஆதாரமற்ற மாயையான மருத்துவ முறையை மாற்றி புதிய அறிவியற்பூர்வமான முறையைக் கொண்டு வந்தார். யுனானி மருத்துவத்தின் ஆதாரப்பூர்வ முறையானது ஹிப்போகிரேட்ஸின் தத்துவமே ஆகும்.

ஹிப்போகிரேட்ஸுக்கு பிறகு எண்ணற்ற பண்டிதர்கள் யுனானி மருத்துவத்தை கவனிக்கத்தக்க சிறப்படையச் செய்தனர். அவர்களில் காளென் (அரபு மொழியில் ஜாலினெஸ் கி.பி. 131-210) என்பவர் நல்ல அடித்தளம் அமைக்க உதவினார். ராசஸ் (அரபு மொழியில் அல்ரசி) கி.பி. 850-925, அவிசென்னா (அரபு மொழியில் இப்பன் - சினா கி.பி. 980-1037) போன்ற அரபு மற்றும் பெர்சிய மருத்துவர்கள் யுனானி மருத்துவம் சிறப்பாக வளர உதவினார்கள்.

காளென் யுனானி முறை மருத்துவத்தை எகிப்து நாட்டில் அறிமுகம் செய்து வைத்தியம் பார்த்து வந்தார். எகிப்து நாட்டின் அரசவை மருத்துவராக பதவி வகித்தார். எகிப்து நாட்டு அரசரின் ஆதரவில் இருந்தபொழுது ஏறக்குறைய அனைத்து வியாதிகளுக்கும் நுற்றுக்கணக்கான புதிய மருந்துகளை கண்டுபிடித்தார்.

ஒரே காலத்தில் எகிப்து, சிரியா, பெர்சியா, இந்தியா, சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பாரம்பரிய மருத்துவமாக யுனானி மருத்துவம் இருந்துள்ளது. எனவேதான் கிரேக்க அரபு மருத்துவம், அயனியன் மருத்துவம், பாரம்பரிய மருத்துவம் மற்றும் கிழக்கத்திய மருத்துவம் என பல பெயர்களை யுனானி மருத்துவம் பெற்றது.

நன்கு வேரூன்ருவதற்கு முன்பே யுனானி மருத்துவம், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டில்லி சுல்தான்கள், கில்ஜிக்கள், துக்ளக்கள் மற்றும் முகலாய மன்னர்கள் பண்டிதர்களுக்கு ஆதரவு அளித்தனர். சிலரை அரசு ஊழியர்களாகவும், அரசவை மருத்துவர்களாகவும் நியமித்தனர். இம்முறை வெகுவிரைவில் நல்ல ஆதரவு பெற்று நாடு முழுவதும் பரவியது.

13 மற்றும் 17ம் நூற்றாண்டின்போது யுனானி மருத்துவம், இந்தியாவில் மிகவும் செழிப்பானது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் யுனானி மருத்துவம் அரசர்களின் ஆதரவை இழந்தது. ஆனால் மக்களின் நம்பிக்கையால் பழக்கத்தில் இருந்து வந்தது. பிரபல மருத்துவரும், யுனானி பண்டிதருமான ஹக்கீம் அஜ்மல் கான் (1868-1927) இம் முறை இந்தியாவிற்கு வர பெரிதும் காரணமாக இருந்தார்.

இந்திய சுதந்திரத்திற்குப் பின் யுனானி மருத்துவம் இந்திய மருத்துவ முறைகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு இம்முறையை இந்தியாவில் மேலும் செழிப்புறச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மக்காச்சோளக் கதிர் மருத்துவம்: யுனானி முறை

நாம் உணவாகப் பயன்படுத்தும் மக்காச் சோளம் தவிர அக்கதிரின் ஜடைநார், சக்கை ஆகியவை மகத்தான மருத்துவக் குணம் கொண்டவை என யுனானி மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது. இறைவனின் படைப்பின் வியப்பூட்டும் விந்தைச் செய்திகளைப் படித்துப் பயன்பெறுங்களேன்.


மக்காச்சோள விதை:

இதை உணவாகப் பயன்படுத்த யுனானி மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். தாய்ப்பால் பெருகும். மக்காச்சோள கஞ்சி சீதபேதியைக் குணப்படுத்தும்.


மக்காச்சோளக் கதிர்ஜடை நார்:

சோளக்கதிர் ஜடை முடியை நிழலில் உலரவைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீரில் 12 கிராம் மக்காச்சோளக் கதிர் ஜடைநாரைப் போட்டுக் கொதிக்க வைத்து 'டீ' போன்று தினம் இருமுறை குடித்து வந்தால்

1 .சிறுநீரகவலி

2. சிறுநீர் அடைப்பு

3. சிறுநீர்ப்பாதைப்புண்

4. வீக்கம் குணமடையும்

5. தாராளமாகச் சிறுநீர் பிரியும்

6. சிறுநீர்க் கற்களைக் கரைத்து வெளியேற்றும்.

ஆறு கிராம் சோளக்கதிர் ஜடைநாரை ஒரு கப் நீரில் கொதிக்க வைத்துக் குடித்தால் குணமாகும் நோய்கள்:

1. இதய நோய்கள்

2. இந்திரியப்பை புண், வீக்கம்

3. குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தல்

4. பித்தப்பை கற்கள்

5. மஞ்சள் காமாலை

6. கல்லீரல் வீக்கம்

7. கல்லீரல் செயலிழப்பு

8. ரத்தக்கொதிப்பு, ரத்த அழுத்தம்



மக்காச் சோளக் கதிர் சக்கை:

விதைகளை எடுத்தபின் சக்கையை வீசி விடுகிறோம். ஆனால் அதிலும் புதைந்து கிடக்கும் மருத்துவ குணங்களைப் படியுங்கள்.
சோளக்கதிர் சக்கையை எரித்துச் சாம்பலாக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு கிராம் எடுத்து தேனில் கலந்து தினம் இருவேளை சாப்பிட,

1. மூலக்கட்டியில் இருந்து அதிகளவில் வெளியேறும் ரத்தம் கட்டுப்படுத்தப்படும்.

2. அதிகளவு மாதவிலக்கு ஏற்படுவதையும் தடுக்கும். இச்சாம்பலைச் சிறிது உப்பு கலந்து சாப்பிட,

1. இருமல் நீங்குகிறது

2. சிறுநீரைத் தாராளமாகப் பிரியச் செய்கிறது

3. சிறுநீர்க் கற்களைக் கரைத்து வெளியேற்ற உதவுகிறது.

இவையெல்லாம் யுனானி மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளன. பயன்படுத்திப் பாருங்களேன்


ஹோமியோபதி


ஜெர்மன் நாட்டின் மருத்துவப் புரட்சியாளர், மருத்துவச் சீர்திருத்தவாதி, ஹோமியோபதி மருத்துவத் தந்தை டாக்டர் ஹானிமன் ஒரு சிரஞ்சீவி (1755-1843). அவர் நிறுவிய புதிய மருத்துவ முறையின் பெயரை "ஹோமியோபதி" என்றார். அவர் காலத்தில் பின்பற்றப்பட்ட மருத்துவத்திற்கு "அலோபதி" என்று புதுப்பெயரிட்டார். இன்றளவும் இம்மேதை இட்ட பெயரை உலகம் பயன்படுத்தி வருகிறது. எனவே ஹானிமன் இன்றும் வாழ்கிறார்.

1810 இல் தமது வேதப்புத்தகமான (Bible of Homeopaths) ஆர்கனான் நூலை வெளியிட்டார். எனவே ஹோமியோபதியின் வயது 191. "நவீன மருத்துவம்" (Modern Medicine) என்ற பெயர் ஹோமியோபதிக்குத்தான் பொருந்தும். இதற்கு மாறாக, அலோபதி மருத்துவர்கள் தமது பாராட்மபரிய மருத்துவத்தை "நவீன மருத்துவம்" என்றும், ஹோமியோபதியை விஞ்ஞான அடிப்படையற்ற, மறைந்து வரும் பழைய மருத்துவம் என்றும் கூறுகின்றனர். எனவே ஹோமியோபதி மருத்துவ முறையில் அடைந்துள்ள வெற்றிகளை அலட்சியப்படுத்திப் பேசுகின்றனர்! அலோபதி மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்கள் மருந்தில்லாத மாத்திரைகளை நோயாளிகளைச் சமாதானப்படுத்துவதற்காகக் கொடுக்கும் போது "ஹோமியோபதிக் டோஸ்" என்று கூறுவது வழக்கம். இருப்பினும் தற்போது ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பை அனுபவித்து கற்றுணர்ந்த அலோபதி மருத்துவர்கள் பலரும் ஹோமியோபதி மருத்துவர்களாக மாறியுள்ளனர். M.B.B.S பட்டம் பெற்ற சில மருத்துவர்களின் பெயர் பலகைகளில் "ஹோமியோபதி கிளினிக்" என்று காணப்படுகிறது. ஹானிமன் இன்றும் வாழ்கிறார்!

ஹோமியோபதியின் வித்து ஹானிமன் வாழ்ந்த காலத்திலேயே இந்திய மண்ணில் விழுந்து விட்டது. அதுவும் ஆங்கில ஆட்சியும் ஆங்கில மருத்துவத்தின் (அலோபதி) ஆதிக்கமும் இருந்த காலத்தில் பஞ்சாப், வங்காளம், தமிழ்நாடு ( தஞ்சை) ஆகிய பகுதிகளில் விதைக்கப்பட்ட ஹோமியோபதி மருத்துவம் இந்தியாவில் ஆல் போல் பரந்து அருகுபோல் வேரோடிவிட்டது. அமெரிக்க, ஐரோப்பிய ஹோமியோபதி மருத்துவ மேதைகளின் புத்தகப் பதிப்புரிமைகளை இந்தியர்கள் வாங்கிவிட்டனர். இந்தியாவில் தான் ஹோமியோபதிக்கென தனி மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

ஹானிமன் மருத்துவம் இந்தியக் கலாச்சாரப் பாரம்பரியத்திற்கு ஒத்து வருவதால் ஹோமியோபதிக்கு இந்தியாவில் ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் உண்டு. இருப்பினும் உலகமயமாக்கல் (Globalisation) என்ற இயக்கத்தில் அலோபதி மருத்துவத்தின் ஆதிக்கம் ஓங்கி வருகிறது. பணக்கார நாடுகளுக்கு ஏற்றது அலோபதி மருத்துவம். இந்தியப் பாரம்பரியத்திற்கு எதிரானது. அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவைகளுக்காக அல்லாடும் ஏழை இந்தியக் குடிமக்களுக்கு ஏற்றது ஹோமியோபதி மருத்துவம்தான். உலகமயமாக்கலினால் நமது பாரம்பரிய மருத்துவ மூலிகைகளுக்கு ஆபத்து ஏற்பட்டு வருகிறது.

நேர் மருத்துவத் தத்துவம் மிகக் குறைந்த அளவு மருந்தை வலியுறுத்துகிறது. வீரியப்படுத்தப்படும் (Potency Drugs) மருந்தைக் கொடுக்கிறது. மனிதர்களிடம் பரிசோதனை செய்யப்பட்ட (Proved on Human Beings) மருந்துகளின் குணங்கள் நிரந்தரமானவை. மனநோயாளிகளிடம் இரக்கம் காட்டியவர் ஹானிமன். ஒரு குறிப்பிட்ட உறுப்பை மட்டும் குணப்படுத்துவது இயற்கை விதிகளுக்கு மாறுபாடானது. மனிதனின் கனவுக் குறிகள் உட்பட உடலை நுணுக்கமாக ஆராய்ந்து பதிவு செய்த பின்தான் ஹோமியோபதி மருத்துவர் மருந்தை நாடுவார். மருந்துகள் அனைத்தும் இனிப்பு உருண்டைகள் வடிவில், தூய வெண்ணிறத்தில் அமைந்துள்ளது. இது ஹோமியோபதிக்கே உரிய தனிச்சிறப்பு. சிக்கனம் இதன் அடிப்படையான பலம்.

இஞ்செக்ஷன், ஆபரேஷன், விலை உயர்ந்த மருத்துவக் கருவிகள், பரிசோதனைக் கூடங்கள் முதலியவற்றை பயன்படுத்தி சிகிச்சை செய்வது அலோபதி மருத்துவம். நோயாளிகளைப் பரிசோதித்து விட்டு மருந்தைக் கொடுத்து ஒரு ஹோமியோபதி மருத்துவர் குணப்படுத்திவிட முடியும். ஆனால் எதிர் மருத்துவத்தில் பல விதமான நவீனக் கண்டுபிடிப்புகளின் உதவியின்றி சிகிச்சை செய்ய முடியாது! இது கண்கூடாகக் காணும் உண்மை.

ஹோமியோபதி முறையின் தத்துவம் நியூட்டனின் புவியீர்ப்பு விசைத் தத்துவத்தைப் போல் நிரந்தரமானது . நோயின் பெயரைப் பற்றியோ, கிருமிகளைப் பற்றியோ ஹோமியோபதி கவலைப்படுவதில்லை. மாறாக உடலில் விமரிசையாக இயங்கும் இயற்கை ) சக்திக்கு ஆதரவாக மருந்துகள் மிகக் குறைந்த அளவில், வீரியப்படுத்திய பின் கொடுக்கப்படுகிறது. இதனால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகி நோயைப் போக்குகிறது. ஹானிமனின் இந்தத் தத்துவம் அலோபதிக்கு முற்றிலும் எதிரானது. எனவே ஹோமியோபதி மருத்துவத்தில் குணமாகும் நோய்களை (Wonder Cures) அலோபதி மருத்துவர்கள் நம்ப மறுக்கிறார்கள்! "ஹோமியோபதி மருந்துகளில் மருத்துவச் சரக்கு இல்லை! எனவே வேலை செய்யாது" என்று வாய்கூசாது கூறுகின்றனர். பெனிசிலின் கண்டுபிடிக்கப்பட்ட போது, "சர்வரோக நிவாரணி" என்று புகழப்பட்டது. பிற்காலத்தில் அதன் அபாயகரமான பின்விளைவுகளைக் கண்டு ஒதுக்கப்பட்டது. இந்த மாதிரியான நிலை ஹோமியோபதியில் இல்லை. 100 ஆண்டுகளுக்கு முன் "புரூப்" செய்யப்பட்ட மருந்துகள் இன்றைக்கும் அற்புதமாக வேலை செய்கின்றன! காரணம், ஒத்தது ஒத்ததை குணப்படுத்தும் (Similia Simibilus Curantur) என்ற விஞ்ஞானப் பூர்வமான தத்துவத்தில் டாக்டர் ஹானிமன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பல அற்புதமான நோய்களைக் குணப்படுத்திக் கொண்டிருக்கிறார்.



1810 இல் தமது வேதப்புத்தகமான (Bible of Homeopaths) ஆர்கனான் நூலைவெளியிட்டார். எனவே ஹோமியோபதியின் வயது 191. "நவீன மருத்துவம்" (Modern Medicine) என்ற பெயர் ஹோமியோபதிக்குத்தான் பொருந்தும். இதற்கு மாறாக, அலோபதி மருத்துவர்கள் தமது பாராட்மபரிய மருத்துவத்தை "நவீன மருத்துவம்" என்றும்,ஹோமியோபதியை விஞ்ஞான அடிப்படையற்ற, மறைந்து வரும் பழைய மருத்துவம் என்றும் கூறுகின்றனர். எனவே ஹோமியோபதி மருத்துவ முறையில் அடைந்துள்ள வெற்றிகளை அலட்சியப்படுத்திப் பேசுகின்றனர்! அலோபதி மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்கள்மருந்தில்லாத மாத்திரைகளை நோயாளிகளைச் சமாதானப்படுத்துவதற்காகக் கொடுக்கும்போது "ஹோமியோபதிக் டோஸ்" என்று கூறுவது வழக்கம். இருப்பினும் தற்போது ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பை அனுபவித்து கற்றுணர்ந்த அலோபதி மருத்துவர்கள் பலரும் ஹோமியோபதி மருத்துவர்களாக மாறியுள்ளனர். M.B.B.S பட்டம் பெற்ற சிலமருத்துவர்களின் பெயர் பலகைகளில் "ஹோமியோபதி கிளினிக்" என்று காணப்படுகிறது.

ஹானிமன் இன்றும் வாழ்கிறார்! ஹோமியோபதியின் வித்து ஹானிமன் வாழ்ந்த காலத்திலேயே இந்திய மண்ணில் விழுந்து விட்டது. அதுவும் ஆங்கில ஆட்சியும் ஆங்கில மருத்துவத்தின் (அலோபதி) ஆதிக்கமும்இருந்த காலத்தில் பஞ்சாப், வங்காளம், தமிழ்நாடு ( தஞ்சை) ஆகிய பகுதிகளில் விதைக்கப்பட்ட ஹோமியோபதி மருத்துவம் இந்தியாவில் ஆல் போல் பரந்து அருகுபோல் வேரோடிவிட்டது. அமெரிக்க, ஐரோப்பிய ஹோமியோபதி மருத்துவ மேதைகளின் புத்தகப் பதிப்புரிமைகளை இந்தியர்கள் வாங்கிவிட்டனர். இந்தியாவில் தான் ஹோமியோபதிக்கெனதனி மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. ஹானிமன் மருத்துவம் இந்தியக் கலாச்சாரப் பாரம்பரியத்திற்கு ஒத்து வருவதால் ஹோமியோபதிக்கு இந்தியாவில் ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் உண்டு. இருப்பினும் உலகமயமாக்கல் (Globalisation) என்ற இயக்கத்தில் அலோபதி மருத்துவத்தின் ஆதிக்கம் ஓங்கி வருகிறது. பணக்கார நாடுகளுக்கு ஏற்றது அலோபதி மருத்துவம். இந்தியப்பாரம்பரியத்திற்கு எதிரானது. அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவைகளுக்காக அல்லாடும் ஏழை இந்தியக் குடிமக்களுக்கு ஏற்றது ஹோமியோபதி மருத்துவம்தான். உலகமயமாக்கலினால் நமது பாரம்பரிய மருத்துவ மூலிகைகளுக்குஆபத்து ஏற்பட்டு வருகிறது.

ஹோமியோபதி முறையின் தத்துவம் நியூட்டனின் புவியீர்ப்பு விசைத் தத்துவத்தைப் போல் நிரந்தரமானது . நோயின் பெயரைப் பற்றியோ, கிருமிகளைப் பற்றியோ ஹோமியோபதி கவலைப்படுவதில்லை. மாறாக உடலில் விமரிசையாக இயங்கும் இயற்கை ) சக்திக்கு ஆதரவாகமருந்துகள் மிகக் குறைந்த அளவில், வீரியப்படுத்திய பின் கொடுக்கப்படுகிறது. இதனால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகி நோயைப் போக்குகிறது. ஹானிமனின் இந்தத் தத்துவம் அலோபதிக்கு முற்றிலும் எதிரானது. எனவே ஹோமியோபதி மருத்துவத்தில் குணமாகும் நோய்களை (Wonder Cures) அலோபதி மருத்துவர்கள் நம்பமறுக்கிறார்கள்! "ஹோமியோபதி மருந்துகளில் மருத்துவச் சரக்கு இல்லை! எனவே வேலை செய்யாது" என்று வாய்கூசாது கூறுகின்றனர். பெனிசிலின் கண்டுபிடிக்கப்பட்ட போது, "சர்வரோக நிவாரணி" என்று புகழப்பட்டது. பிற்காலத்தில் அதன் அபாயகரமான பின்விளைவுகளைக் கண்டு ஒதுக்கப்பட்டது. இந்த மாதிரியான நிலை ஹோமியோபதியில்இல்லை. 100 ஆண்டுகளுக்கு முன் "புரூப்" செய்யப்பட்ட மருந்துகள் இன்றைக்கும் அற்புதமாக வேலை செய்கின்றன! காரணம், ஒத்தது ஒத்ததை குணப்படுத்தும் (Similia Simibilus Curantur) என்ற விஞ்ஞானப் பூர்வமான தத்துவத்தில் டாக்டர் ஹானிமன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பல அற்புதமான நோய்களைக் குணப்படுத்திக் கொண்டிருக்கிறார்.


 

Siddha Medicine


சித்த மருத்துவம்
மருத்துவம்

சித்த மருத்துவம் தமிழ் மண்ணில் தோன்றிய திராவிடப் பாரம்பரியத்தின் நாகரீகம், பண்பாடு, கலை, ஞானம் போன்றவற்றில் வேரூன்றி தமிழர்களின் உணர்வில் தழைத்தோங்கி வளர்ந்திருக்கின்ற மருத்துவம் சித்த மருத்துவம் ஆகும்.

ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட உலகப் பொதுமறையான திருக்குறள், திருமந்திரம் போன்ற நூல்களிலும் கி.மு 4500 லிருந்து 1600 வரையிலான காலகட்டங்களில் எழுதப்பட்ட ரிக் வேத நூல்களிலும் சரபேந்திரர் சித்த மருத்துவச்சுடர் என்னும் ஏட்டுச் சுவடிகளிலும் ஓலைச் சுவடிகளிலும் சங்ககால தமிழ் இலக்கியங்களிலும் சித்த மருத்துவம் பற்றிய ஆதாரங்கள் இருப்பதைகாண முடிகிறது. இவ்வாதாரங்களை அறிஞர் பெருமக்கள் பலரும் பல் வேறு நூல்களில் சுட்டிக் காட்டியுள்ளனர்.

குறிப்பாக மேலைநாட்டு நாகரீகம் தோன்றுவதற்கு பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்அதாவது துலாபாரயுகம் இரணடாயிரத்து ஒன்பதுக்கு (நூந்று தொன்னூற்று ஐந்து கோடியே ஐம்பத்து நூறாயிரத்து ஏழுபத்து மூன்று) முன் தன்னிகரில்லா சித்த மருத்துவம் தோன்றியதாக வரையறுக்கப் பட்டுள்ளது. சித்த மருத்துவமானது திராவிடர் மருத்துவம், தமிழர் மருத்துவம், செந்தமிழ் மருத்துவம் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

வரலாற்று வல்லுநர்களின் கூற்றுப்படி உலகிலுள்ள அனைத்து பிரிவினர்களிலும் முந்தியவர்களாக விளங்குகின்ற திராவிடர்கள் பயன்படுத்திய மருத்துவமாதலால் திராவிடர் மருத்துவம் என அழைக்கப்படுகிறது.

மனித உயிரினம் முதன் முதலில் தோன்றிய இடமான குமரிக்கண்டம் தான் தமிழர்களின் தாயகம் என்பது வரலாற்று உண்மை. இத்தொல்குடி மக்களாகிய தமிழர்கள் பயன்படுத்திய மருத்துவமாதலால் தமிழர் மருத்துவம் எனவும் அழைக்கப்படுகிறது .

உலக மொழிகளில் முதன் முதலில் செம்மையுள்ள மொழி தமிழ் மொழி ஆகும். சித்தர்கள் உடலுக்கும், உள்ளத்திற்கும் நன்மை செய்கின்ற சித்தமருத்துவத்தை பாடல் உருவிலும் மக்கள் நன்கறிந்த செந்தமிழிலும் வழங்கியதால் இம்மருத்துவம் செந்தமிழ் மருத்துவம் எனவும் அழைக்கப்படுகிறது.

உலக உயிரினங்களின் இன்னல்களை நீக்க அயராது சிந்தித்து முழு முயற்சியுடன் தெளிந்து ஆயக்கலைகள் அறுபத்தி நான்கையும் கற்றுணர்ந்த இயற்கையோடு இயைந்த எளிய வாழ்வே உடல் நலனுக்கும், உள்ள நலனுக்கும் சாலச் சிறந்தது எனக் கண்டறிந்து மக்களினத்திற்கு ஏற்ற ஒரு மருத்துவ முறையைத் தந்தவர்கள் சித்தர்கள் என்பதால் இது சித்த மருத்துவம் என்று கூறப்படுகின்றது.

உலக மருத்துவ முறைகளுக்கெல்லாம் மூல மருத்துவமாகவும், மரபு வழி மருத்துவத்திற்கு மணி மகுடமாகவும் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வானொடு முன்தோன்றி ய மூத்த குடி மக்களாகிய ஆதிகாலத்தில் வாழ்ந்த திராவிடர்களின் சொந்த மருத்துவம் தான் சித்த மருத்துவம் என்பதில் எவர்க்கும் ஐயமில்லை.

சித்த மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவமும் சிறப்பும


சித்த மருத்துவம் இவ்வுலக வாழ்வை அடிப்படையாகக் கொண்டது. அண்டம் என்னும் உலகின் ஆக்கமும் பிண்டம் என்னும் உடலின் அமைப்பும் அசைவும் ஐந்து இயற்கைத் தன்மைகளான நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு என்னும் ஐம்பூதங்களில் அடங்கும். அதனால் தான் அண்டத்தில் உள்ளதே பிண்டம் பிண்டத்தில் உள்ளதே அண்டம் என சட்டமுனி ஞானம் நூல் கூறுகின்றது.

வாதம் பித்தம் கபம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு 4448 நோய்கள் மனிதனுக்கு வரும் எனக் கணக்கிட்டுள்ளனர்.

வரும் முன் காப்போம் என்பதும் சித்த மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவமாகும்.

ஆறு பருவங்களில் (கார் கதிர் முன்பனி பின்பனி இளவேனில் முதுவேனில்) காலத்திற்கேற்ற மருந்து மாற்றி மருத்துவம் செய்வதம் இம்மருத்துவத்தின் தனிச் சிறப்பாகும்.

உலகில் வேறெந்த மருத்துவ முறைகளிலும் இல்லாத நாடி பார்த்து நோயைச் சோதித்தறியும் முறை சித்த மருத்தவத்திற்கேயுரிய தனிச் சிறப்பு ஆகும்.

மனித உடல் உள்ளம் உணர்வு ஆகியவற்றை உள்ளடகிய 96 நிலைகளில் சித்த மருத்துவம் தனது கூறுகளையுடையது. இதுவே ஐம்பூதங்களின் விரிவாக்கமாகும். இம் மனித உடலை சுகவீனம் அடையாமல் பாதுகாக்க நல்ல உணவுப் பழக்கம் சிறந்த மனப் பயிற்சி யோகா நீண்ட நாள் வாழ காய கல்ப முறை தொகை சரக்கு முறை (திரிகடுகு திரிபலா திரிகந்தம்) போன்றவை மற்ற மருத்துவத்தில் இல்லாத தனிச் சிறப்பாகும்.


Physiotherapy

பிடித்து விடுதல், உடற்பயிற்சி ஆகிய முறைகளில் பிணி தீர்க்கும் முறை

மேலும் அறியப்படுகிறது பிசியோதெரபி உடல் சிகிச்சை உடல் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு கலை மற்றும் அறிவியல் ஆகும். நவீன உடல் சிகிச்சை 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டனில் நிறுவப்பட்டது. விரைவில் பின்வரும் அமெரிக்க எலும்பியல் அறுவை சிகிச்சை ஊனமுற்ற குழந்தைகள் சிகிச்சை தொடங்கின மற்றும் உடல் கல்வி, மசாஜ், மற்றும் மாற்று பயிற்சியில் பயிற்சி பெற்ற பெண்கள் பயன்படுத்த தொடங்கினார். இந்த சிகிச்சைகள் 1916 என்ற போலியோ நோய் போது பயன்படுத்தப்படும் மேலும் உயர்த்தப்பட்டனர். போது முதல் உலக போர் பெண்கள் வேலை மற்றும் காயமடைந்த வீரர்களுக்கு உடல் செயல்பாடு மீண்டும் வேலைக்கு இருந்தது, மற்றும் உடல் சிகிச்சை துறையில் அமைப்பு இருந்தது. 1918 ஆம் ஆண்டு கால "புனரமைப்பு உதவியாளர்" உடல் சிகிச்சை பயிற்சி தனிநபர்கள் குறிக்க பயன்படுத்தப்பட்டது. உடல் சிகிச்சை முதல் பள்ளி வாஷிங்டன் DC இல் வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் நிறுவப்பட்டது முதலாம் உலக போர் வெடித்தபோது பின்வரும்

உடல் சிகிச்சை, மதிப்பிடுதல் கண்டறிய, மற்றும் நோய்கள், குறைபாடுகள், மற்றும் உடல் பொருள் பயன்படுத்தி குறைபாடுகள் ஒரு வகையான சிகிச்சை அடங்கும். இது பிசியோதெரபிஸ்ட்கள் தனிநபர்கள் மற்றும் பராமரிக்க மற்றும் அதிகபட்ச இயக்கம் மற்றும் ஆயுள்காலம் முழுவதும் செயல்படும் திறனை மீண்டும் உருவாக்க மக்களுக்கு சேவைகளை வழங்குவதன் மூலம், ஒரு முதன்மை நல சுகாதார தொழிலாக உள்ளது. இந்த இயக்கம் மற்றும் செயல்பாடு வயதான, காயம், நோய் அல்லது சுற்றுச்சூழல் காரணிகள் மிரட்டல் எங்கே சூழ்நிலையில் சேவைகளை உள்ளடக்குகிறது. இது சாம்ராஜ்யத்திற்கு வழக்கமான மருந்து க்குள் கருதப்படுகிறது. அது பொதுவாக உடல் மருத்துவர்கள் நடைமுறையில் இருந்தாலும், சில பணிகளை பயிற்சி உதவியாளர்கள் அல்லது சுகாதார நிபுணர்கள் பிற வகையான ஒதுக்கப்படும் இருக்கலாம்.
உடல் சிகிச்சை அடையாளம் மற்றும் பதவி உயர்வு, தடுப்பு, சிகிச்சை / தலையீடு, habilitation மற்றும் மறுவாழ்வு கோளங்கள் உள்ள வாழ்க்கை மற்றும் இயக்கம் சாத்தியமான தரத்தை அதிகரிக்கவும் அக்கறை உள்ளது. இந்த உடல், உளவியல் உணர்ச்சி, மற்றும் சமூக நலம் உட்கொண்டிருக்கிறது. இது நோயாளியின் நிலை ஒரு மதிப்பாய்வு தொடங்குகிறது. இந்த மதிப்பீட்டை பொதுவாக ஒரு மருத்துவ வரலாறு ஆய்வு மற்றும் ஒரு உடல் பரிசோதனை உள்ளடக்குகிறது. உடல் தேர்வு நோக்கம் கருதப்படுகிறது போது பெரும்பாலும், மருத்துவ வரலாறு ஆய்வு, ஒரு தற்சார்புடைய பரிசோதனை கருதப்படுகிறது. இரண்டு கூறுகள் வெற்றிகரமாக ஆய்வு மற்றும் நோயாளி சிகிச்சை முக்கியமான உள்ளன. மதிப்பீட்டு நிலை, சில சந்தர்ப்பங்களில், சிறந்த நோயாளியின் நிலை மதிப்பீடு மற்றும் திறன் மிக்க சிகிச்சை திட்டம் உருவாக்க கண்டறியும் சோதனைகள் தொடர்புடையதாக இருக்கலாம்

acupressure



மூளை-முதுகுத்தண்டு இவையெல்லாம் இணைந்ததே உடலின் நரம்பு மண்டலம். இந்த நரம்புகள் இல்லாத இடமே இல்லை. சூழ்நிலை மற்றும் உணவிலுள்ள நச்சுத்தன்மை மூலம் பலருக்கு நரம்புத் தளர்ச்சி உண்டாகிறது. இந்த நச்சுத் தன்மை கல்லீரலில் (Liver) மற்றும் நரம்புகளில் சேர்ந்து தேவையற்ற மன இறுக்கத்தை (Stress) ஏற்படுத்தி விடும்.



இதன் காரணமாக நரம்புத் தளர்ச்சியும் மனநோயும் ஏற்பட்டு மனத்தின் சமநலை கெட்டு மனச்சோர்வு உண்டாகிறது. மனஇயல், மனோதத்துவ சிகிச்சை பலன் அளிக்காது. ஏனென்றால், இது மனத்தின் சமநிலையை பாதிப்பதுடன் நரம்புத் தளர்ச்சியை ஏற்படுத்தி, அதன் மூலம் உடலில் சமநிலையையும் பாதித்து விடுகிறது.



நரம்புகளின் கடைசிப் பகுதியை அக்கு (Acu) என்பார்கள். இதற்குக் கொடுக்கக் கூடிய அழுத்தம்தான் அக்கு பிரஷர். இந்த நரம்புகளில் அழுத்தம் கொடுக்கப்படும்பொழுது உடலில் உள்ள நச்சுத்தன்மை (Toxins) வெளியேறி விடும்.



மற்ற உடற்பயிற்சிகள் என்பது வெளிப்புற உறுப்புகளை (External organs) சீர்செய்வதற்கானப் பயிற்சியாகும். ஆனால் உடலுக்குள்ளாக இருக்கின்ற உறுப்புகளுக்கு (Internal organs) உடற்பயிற்சி என்பது அவசியமாகிறது. உள்ளுறுப்புகளுக்கு அக்கு பிரஷர் என்ற முறையில் தான் பயிற்சி அளிக்க முடியும். எனவே, உடல் நலமாக இருக்க வெளிப்புற உறுப்புகள் மற்றும் உட்புற உறுப்புகள் இரண்டுக்கும் பயிற்சி அவசியமானதால் உடற்பயிற்சியையும் அக்கு பிரஷரையும் சேர்த்தே செய்ய வேண்டும்.



நமது உடலில் மெரிடியன் (Meridian) என்ற நரம்புகள் எல்லா இடத்திலும் உறுப்புகளில் உள்ளன. இந்த நரம்புகளில் குறிப்பிட்ட இடத்தில் அழுத்தம் கொடுக்கும்போது அதன் ஆற்றலானது அலையியக்கமாக நரம்புகள் மூலமாக சம்பந்தப்பட்ட உறுப்புகளுக்குச் சென்று தடையை நீக்கும். இந்த முறை பின்பு “அக்குபஞ்சர்” என்று ஆகி, ஊசிகளை நரம்புகளில் செலுத்தி அங்கு குறிப்பிட்ட அளவு மின்சாரத்தைச் செலுத்தி மருத்துவம் செய்யும் முறையாக வந்தது.



உடலிலுள்ள உயிராற்றல் இயங்கும் பாதையிலுள்ள மையங்களின் மீது கைவிரலால் அழுத்தம் கொடுக்கம்போது தனக்குள்ள பலவீனங்களை நோய்களை, தானே உள்நோக்கி, காலம் கடப்பதற்கு முன்பே உணரக்கூடிய அளவிற்கு உதவுகிறது. இந்த நிலையில் பழகப் பழக தனது உடல் நலத்தைத் தானே முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும்.



பலவீனத்தின் மூலகாரணத்தை அறிய அக்குபிரஷர் பயிற்சி உதவுகிறது. இப்பயிற்சி தடுப்பு மருத்துவ முறையிலும் பயன்படுகிறது. நோய் தீவிரமாகும் முன்பே பயிற்சியாளருக்கு நோயின் தன்மையை உணர்த்திவிடும். எடுத்துக் காட்டாக புற்றுநோய் உடலில் தோன்றி தீவிரமடைந்து வெளிப்படுவதற்கு நீண்டகாலமாகும். ஆனால், அக்குபிரஷர் மூலமாக நோய் வருமுன்பாகவே தவிர்த்திடலாம்.



இந்தப் பயிற்சியில் முக்கியமாக 14 மையங்கள் (Centres) உள்ளன. இந்த 14 மையங்களில் முதலிடம் கழுத்தின் பின்புறம் அதாவது, நமது இடக்கை விரல்கள் மூன்று, வலப்புறமாகச் சென்று கழுத்துக்குப் பின்னால் மூன்றாவது கழுத்து எலும்பினைப் பயிற்சி முடியும் வரை அழுத்திப் பிடித்தவாறு இருக்க வேண்டும். எப்படி என்றால் வீணை, கிட்டார் வாசிக்கும்போது நமது இடக்கை மூன்று விரல்களைக் கொண்டு மீட்டிக் கொண்டே இருப்பது போல் கழுத்தின் பின்புறம், அழுத்தியவாறு இருக்க வேண்டும். நமது மூளையின் அமைப்பு, முகுளத்தின் அமைப்பு, தண்டுவடத்தின் அமைப்பு, எல்லாமே ஒன்று சேர்ந்து இருக்குமிடம் இதுதான்.



இந்த இடத்தில் நரம்புகள் ஒன்றுகூடி பின்பு உடலுக்குள் இருபக்கமும் மூன்று ஜோடியாகப் பிரிந்து ஒவ்வொரு உறுப்பிற்கும் செல்கிறது. மீதி உள்ள மற்ற அக்குபிரஷர் உள்ள இடங்கள் நமது வயிற்றுப் பகுதியைச் சுற்றியுள்ளன. இது முக்கியமான இடம். காரணம் என்னவென்றால் உடலியக்கத்திற்குத் தேவையான சில முக்கிய உறுப்புகள் வயிற்றுப் பகுதியில் உள்ளன.



வயிற்றில் தொப்புள் பகுதியைச் சுற்றி முக்கியமான உறுப்புகளான குடல்கள், சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல் முதலிய உறுப்புகளுடன் நாளமில்லாச் சுரப்பிகளான கணையம், அட்ரீனல், பால் சுரப்பிகள் போன்றவைகளும் உள்ளன. இவை இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் முதலியனவற்றை தடுக்கும் உறுப்புகள். இந்த உறுப்புகளைத் தூண்டி சரியான முறையில் இயங்கச் செய்வதற்கு இதனோடு தொடர்புள்ள மெரிடியன் நரம்புகள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும்.



இந்தப் பயிற்சியில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் எந்த மையங்களில் விரலால் அழுத்துகின்றோமோ அந்தப் பகுதியல் நமது மனத்தையும் குவிக்க வேண்டும். மனம் அலையுமானால் மீண்டும் பயிற்சியை முதலிலிருந்து தொடங்க வேண்டும். பயிற்சியை மெதுவாகச் செய்வது நல்லது. மனம் ஒருமைப்படாமல் பயிற்சி செய்வது முழு பலனைத் தராது.



உடலை அழுத்துதல் (Acu-pressure) பயிற்சியின் நன்மைகள்:

1.உடலில் மின்சாரத் தடை நீங்கி, மின்சார ஓட்டம் சீரமைகிறது.
2.நரம்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்திச் சீராக இயங்கச் செய்கிறது.
3.வயிற்றில் உள்ளுறுப்புகள் சீரடைகின்றன. வலிமை பெறுகின்றன.
4.இரத்த அழுத்த நோய் குறைகிறது. நரம்புத் தளர்ச்சி குறைகிறது.


Hydrotherapy is the use of water to revitalize, maintain, and restore health






Water therapy is literally the treatment or relief the body receives in the daily consumption of water rather than medication. 65% of the human body consists of water. It seems a smart choice to replenish water that is lost through the day with new refreshing water yet lots of people barely replenish 1 / 2 of the water lost. Lots of people count the bottles of soda or juice as water substitute however they are poor substitutes. A lot of diseases and issues we cope with are due to poor diet so why wouldn’t you add water for your diet as water is a vital element of your body’s make-up

Water is really a nutrition, a vital supplement to keep body functions, still water is neglected, we’ve under-estimated the Therapy health benefits of drinking and taking advantage of water. A number of our health troubles are there because our body is struggling for water to hold its basic functions.
Water may be the second most important dependence on living being after air. Water therapy that we’ll go through here isn’t actually a therapy but a concept for thoughtful and purposeful utilization of water in our everyday life and find out amazing health benefits from it our-self.
Today we attempt to retain and keep health by consuming multi-vitamin and multi-mineral tablets plus a number of products available for sale. We use these products because scientific researches show that our basic food neglects to provide all the nutrition in optimum quantity which are required by our body to remain healthy.
 
Water Therapy For Health

Water Therapy Benefits

Arthritis: Joint spaces are full of some fluid (synovial fluid) which works as a lubricant, preventing friction during movements. A sufficient water intake supplies sufficient fluid towards the joint, enhancing its shock-absorbing effect. Without it cushioning effect, the ends from the bones would rub against one another, get rough and inflamed, an ailment known as arthritis. This results in a lot of pain, difficulty in movement and, sometimes, stiffness. Good intake of water, among other things, helps to relieve this pain

ELECTROTHERAPHY










RELAXATION TECHNIC








I Am Relaxed

 

 

THE HISTORY OF ACUPUNCTURE

The oldest known book on Chinese medicine is the "Neiching", also known as "The Yellow Emperor's classic of internal medicine". It is written in the form of a dialogue between the Yellow Emperor "Huang Ti" and "Chi Po" a Taoist teacher and physician. It is believed that the Yellow Emperor lived around 2700 B.C. The book indicates that acupuncture was widely practiced in China much before the time it was written.

During archaeological excavations in China, various types of gold and silver acupuncture needles were found in the tomb of Prince Liu Sheng who died around 200 B.C. This confirms that these different types of needles were in use over two thousand years ago.

THE SPREAD OF ACUPUNCTURE
Acupuncture originated in the cold north-west parts of China where herbs and other medical remedies were scarce. Acupuncture spread from there to other parts of the world through travelling physicians, scholars and pilgrims.

One of these was a famous Chinese physician called Pien Chueh who lived around 400 B.C. While visiting the province of Quo with some of his students, he arrived at a town there the people seemed very sad since their beloved prince had suddenly become unconscious. His doctors had been unable to revive him and it seemed that he was going to die.

Hearing that Pien Chueh was a great physician, the people asked him if there was anything he could do to help their prince. Pien Chueh agreed to examine the prince. Arrangements were made and he was received by the king, who willingly allowed him to examine the unconscious prince.

Pein Chueh made a thorough examination of the prince and arrived at a diagnosis. He treated the prince with acupuncture who soon regained consciousness. Pein Chueh continued to treat the prince with acupuncture, heat treatment (moxibuxtion) and various herbs till the prince recovered completely. It is said that the king rewarded him richly and directed the physicians in his Court to learn acupuncture and thus the practice of acupuncture spread.



Physical therapy


(or physiotherapy), often abbreviated PT, is a health care profession primarily concerned with the remediation of impairments and disabilities and the promotion of mobility, functional ability, quality of life and movement potential through examination, evaluation, diagnosis and physical intervention carried out by licensed Physical Therapists (known as Physiotherapists in some countries) and Physical Therapist Assistants (known as Physical Rehabilitation Therapists in some countries). In addition to clinical practice, other activities encompassed in the physical therapy profession include research, education, consultation and administration. Definitions and licensing requirements in the United States vary among jurisdictions, as each state has enacted its own physical therapy practice act defining the profession within its jurisdiction, but the American Physical Therapy Association (APTA) has also drafted a model definition in order to limit this variation, and the APTA is also responsible for accrediting physical therapy education curricula throughout the United States of America. In many settings, physical therapy services may be provided alongside, or in conjunction with, occupational therapy and speech therapy services


Hydrotherapy,


formerly called hydropathy, involves the use of water for pain-relief and treating illness. The term hydrotherapy itself is synonymous with the term water cure as it was originally marketed by practitioners and promoters in the 19th century. A hydrotherapist therefore, is someone who practices hydrotherapy.

Water cure has since come to have two opposing definitions, which can cause confusion.

(a) Water cure therapy – a course of medical treatment by hydrotherapy
(b) water cure torture – a form of torture in which a person is forced to drink large quantities of water.[1]
The sense used in this article is the first one, synonymous with the term hydrotherapy, and which precedes recorded use of the second sense.[a]

Hydrotherapy in general encompases a range of approaches and their definitions. These range from approaches and definitions which are either naturally distinct, or made so for marketing purposes, to approaches and definitions which overlap significantly, and which can be difficult to disentangle.

One such overlap pertains to spas. According to the International SPA Association (ISPA), hydrotherapy has long been a staple in European spas. It is the generic term for water therapies using jets, underwater massage and mineral baths (e.g. balneotherapy, Iodine-Grine therapy, Kneipp treatments, Scotch hose, Swiss shower, thalassotherapy) and others. It also can mean a whirlpool bath, hot Roman bath, hot tub, Jacuzzi, cold plunge and mineral bath. These treatments use physical water properties, such as temperature and pressure, for therapeutic purposes, to stimulate blood circulation and treat the symptoms of certain diseases.[2]


Historical background

Various forms of hydrotherapy have been recorded in ancient Egyptian, Greek and Roman civilizations.[3][4][5][6][7] Egyptian royalty bathed with essential oils and flowers, while Romans had communal public baths for their citizens. Hippocrates prescribed bathing in spring water for sickness. Other cultures noted for a long history of hydrotherapy include China and Japan,[4] this latter being centred primarily around Japanese hot springs, or (onsen). Many such histories predate the Roman thermae.


In the 19th century, a popular revival followed the application of hydrotherapy around 1829, by Priessnitz, a peasant farmer in Gräfenberg, then part of the Austrian Empire.[5][13][14][15] This revival was continued by a Bavarian priest, Sebastian Kneipp (1821–1897), "an able and enthusiastic follower" of Priessnitz, "whose work he took up where Priessnitz left it",[16] after he read a treatise on the cold water cure.[17][18] In Wörishofen (south Germany), Kneipp developed the systematic and controlled application of hydrotherapy for the support of medical treatment that was delivered only by doctors at that time. Kneipp's own book My Water Cure was published in 1886 with many subsequent editions, and translated into many languages.


Electrotherapy



is the use of electrical energy as a medical treatment[1] In medicine, the term electrotherapy can apply to a variety of treatments, including the use of electrical devices such as deep brain stimulators for neurological disease. The term has also been applied specifically to the use of electric current to speed wound healing. Additionally, the term "electrotherapy" or "electromagnetic therapy" has also been applied to a range of alternative medical devices and treatments.

History

During 1855 Guillaume Duchenne, the developer of electrotherapy, announced that alternating was superior to direct current for electrotherapeutic triggering of muscle contractions.[3] What he called the 'warming affect' of direct currents irritated the skin, since, at voltage strengths needed for muscle contractions, they cause the skin to blister (at the anode) and pit (at the cathode). Furthermore, with DC each contraction required the current to be stopped and restarted. Moreover alternating current could produce strong muscle contractions regardless of the condition of the muscle, whereas DC-induced contractions were strong if the muscle was strong, and weak if the muscle was weak.

Since that time almost all rehabilitation involving muscle contraction has been done with a symmetrical rectangular biphasic waveform. During the 1940s, however, the US War Department, investigating the application of electrical stimulation not just to retard and prevent atrophy but to restore muscle mass and strength, employed what was termed galvanic exercise on the atrophied hands of patients who had an ulnar nerve lesion from surgery upon a wound.[4] These Galvanic exercises employed a monophasic wave form, direct current - electrochemistry.

It has not been found to be effective in increasing bone healing.



Current useAlthough a 1999 meta-analysis found that electrotherapy could speed the healing of wounds,[5] during 2000 the Dutch Medical Council found that although it was widely used, there was insufficient evidence for its benefits.[6] Since that time, a few publications have emerged that seem to support its efficacy, but data is still scarce.[7]

The use of electrotherapy has been researched and accepted in the field of rehabilitation[8] (electrical muscle stimulation). The American Physical Therapy Association acknowledges the use of Electrotherapy for:[9]

1. Pain management

Improves range of joint movement
2. Treatment of neuromuscular dysfunction

Improvement of strength
Improvement of motor control
Retards muscle atrophy
Improvement of local blood flow
3. Improves range of joint mobility

Induces repeated stretching of contracted, shortened soft tissues
4. Tissue repair

Enhances microcirculation and protein synthesis to heal wounds
Restores integrity of connective and dermal tissues
5. Acute and chronic edema

Accelerates absorption rate
Affects blood vessel permeability
Increases mobility of proteins, blood cells and lymphatic flow
6. Peripheral blood flow

Induces arterial, venous and lymphatic flow
7. Iontophoresis

Delivery of pharmacological agents
8. Urine and fecal incontinence

Affects pelvic floor musculature to reduce pelvic pain and strengthen musculature
Treatment may lead to complete continence
Electrotherapy is used for relaxation of muscle spasms, prevention and retardation of disuse atrophy, increase of local blood circulation, muscle rehabilitation and re-education electrical muscle stimulation, maintaining and increasing range of motion, management of chronic and intractable pain, post-traumatic acute pain, post surgical acute pain, immediate post-surgical stimulation of muscles to prevent venous thrombosis, wound healing and drug delivery.[citation needed]

Some of the treatment effectiveness mechanisms are little understood, with effectiveness and best practices for their use still anecdotal.

Electrotherapy devices have been studied in the treatment of chronic wounds and pressure ulcers. A 1999 meta-analysis of published trials found some evidence that electrotherapy could speed the healing of such wounds, though it was unclear which devices were most effective and which types of wounds were most likely to benefit.[5] However, a more detailed review by the Cochrane Library found no evidence that electromagnetic therapy, a subset of electrotherapy, was effective in healing pressure ulcers[10] or venous stasis ulcers


 

Massage



is the working of superficial and deeper layers of muscle and connective tissue using various techniques, to enhance function, aid in the healing process, and promote relaxation and well-being.[1][2] The word comes from the French massage "friction of kneading", or from Arabic massa meaning "to touch, feel or handle" or from Latin massa meaning "mass, dough",[3][4] cf. Greek verb μάσσω (massō) "to handle, touch, to work with the hands, to knead dough".[5] In distinction the ancient Greek word for massage was anatripsis,[6] and the Latin was frictio.

Massage involves working and acting on the body with pressure – structured, unstructured, stationary, or moving – tension, motion, or vibration, done manually or with mechanical aids. Target tissues may include muscles, tendons, ligaments, fascia, skin, joints, or other connective tissue, as well as lymphatic vessels, or organs of the gastrointestinal system. Massage can be applied with the hands, fingers, elbows, knees, forearm, and feet. There are over eighty different recognized massage modalities.[7] The most cited reasons for introducing massage as therapy have been client demand and perceived clinical effectiveness.[8]

In professional settings massage involves the client being treated while lying on a massage table, sitting in a massage chair, or lying on a mat on the floor. The massage subject may be fully or partly unclothed. Parts of the body may be covered with towels or sheets. Those who practice massage as a career are referred to as massage therapists.[citation needed] Most states in the US have licensing requirements for massage therapists.


A relaxation technique


(also known as relaxation training) is any method, process, procedure, or activity that helps a person to relax; to attain a state of increased calmness; or otherwise reduce levels of anxiety, stress or anger. Relaxation techniques are often employed as one element of a wider stress management program and can decrease muscle tension, lower the blood pressure and slow heart and breath rates, among other health benefits.[1]

People respond to stress in different ways, namely, by becoming overwhelmed, depressed or both.[2] Yoga and other techniques that include deep breathing tend to calm people who are overwhelmed by stress, while rhythmic exercise improves the mental and physical health of those who are depressed. People who encounter both symptoms simultaneously, feeling depressed in some ways and overexcited in others, may do best by walking or performing yoga techniques that are focused on strength.[2]

Shiatsu is a kind of bodywork designed to promote health and wellbeing - distinguish from Shih Tzu - a breed of Japanese dog



Shiatsu





is Japanese for "finger pressure;" it is a type of alternative medicine consisting of finger and palm pressure, stretches, and other massage techniques. There is no scientific evidence proving that shiatsu can treat any disease,[1][2] but shiatsu practitioners promote it as a way to help people relax and cope with issues such as stress, muscle pain, nausea, anxiety, and depression. There are two main Shiatsu schools: one incorporating elements of western anatomical and physiological theory, and the other based on Traditional Chinese Medicine (TCM). Shiatsu is traditionally performed on a futon mat, with clients fully clothed.

Japanese style foot massage "Shiatsu" is a hands-on therapy technique originating in Japan .Shiatsu means “finger pressure” .Shiatsu is popular as home care among Japanese long long time ago. Shiatsu is the application of pressure to a specific area of the body that has pain. Shiatsu massage give for a variety of ailments, respiratory problems, digestive problems, headaches and leg cramps, and can bring relief to a number of everyday disorders. The shiatsu massager uses palms, fingers, thumbs, knuckles, elbows, knees and the feet, to work on the body’s acupuncture points, along what they consider the body’s meridians or energy channels. Its is a safe and effective preventive medicine. Shiatsu helps to balance a persons energy flow, and strengthen the vital organs. This site explains a Japanese-style Shiatsu foot massage techniques by Japanese shiatsu therapist, Reflexology foot charts. You can do a Japanese-style foot massage Shiatsu easily at home.Let's try

HistoryShiatsu

( (指圧?) Japanese from shi, meaning finger, and atsu, meaning pressure), as well as Teate (手当て?, pronounced te-a-te) originated in Japan. There were many hands-on therapies called Teate before traditional Chinese therapies such as Acupuncture and Tuina (called Anma in Japan) were introduced to Japan around 1000AD. The practice of this massage was a semi-mystical activity performed by women and the blind. The term shiatsu may have been first cited in a 1915 book, Tenpaku Tamai's Shiatsu Ryoho.


நோன்பு என்றால் என்ன?

அந்த நோன்பு என்ற வார்த்தைக்கு என்ன பொருள்? நோன்பு என்றால் என்ன? என்ற கேள்விகள் நம்மிலே பலருக்கும் எழலாம்.
நோன்பு என்றால் என்ன? என்பதற்கு மனோ இச்சைகளை கட்டுப்படுத்துதல், இறையச்சத்தை ஏற்படுத்துதல் என்று பலரும் அது தரும் பயன்கைளைத்தான் விளக்கிக் கொண்டே போவார்கள்.
கேள்வி விளக்கமல்ல, அதன் உண்மையான பொருள் என்ன எனபதை தெரிவதற் காகத்தான்!
அப்படிக் கேட்டால் உண்ணமால் இருப்பது என்று விளக்கம் சொல்வார்கள். நோன்பு என்றால் உண்ணமால் இருப்பது தான் அதன் பொருளா? அப்படியானால் போராட்டம் நடத்துபவர்கள் உண்ணா நோன்பு, உண்ணா விரதம் என்று கூறுகிறார்களே


Therapeutic touch


(commonly shortened to "TT"), also known as Non-Contact Therapeutic Touch (NCTT),[1] is an energy therapy which practitioners claim promotes healing and reduces pain and anxiety. Practitioners of therapeutic touch state that by placing their hands on, or near, a patient, they are able to detect and manipulate the patient's energy field.[2] One highly cited study, designed by nine year old Emily Rosa and published in the Journal of the American Medical Association found that practitioners of therapeutic touch could not detect the presence or absence of a hand placed a few inches above theirs when their vision was obstructed.[3][4][5] Simon Singh and Edzard Ernst concluded in their 2008 book Trick or Treatment that "the energy field was probably nothing more than a figment in the imaginations of the healers."






Unit-2 -Alternative Medicine and Therapies

UNIT - 2



Mud Therapy

Mud therapy is very simple and effective treatment modality. The mud used for this should be clean and taken from 3 to 4 ft. depth from the surface of the ground. There should be no contamination of stone pieces or chemical manures etc. in the mud.


Mud is one of five elements of nature having immense impact on the body both in health and sickness. Advantages of using mud:-



Its black colour absorbs all the colours of the Sun and conveys them to the body. 
Mud retains moisture for a long time, when applied over the body part it causes cooling. 
Its shape and consistency can be changed easily by adding water. 
It is cheap and easily available. 
Before using, mud should be dried, powdered and sieved to separate stones, grass particles and other impurities





Mud Pack-Local Application 



Keeping soaked mud in a thin, wet muslin cloth and making it into a thin flat brick depending on the size of the patient’s abdomen, apply it. The duration of the mud pack application is 20 to 30 minutes. When applied in cold weather, place a blanket over the mud pack and cover the body as well.



Benefits 



When applied to abdomen it relieves all forms of indigestion. It is effective in decreasing intestinal heat and stimulates peristalsis. 
A thick mud pack applied to head in congestive headache, relieves the pain immediately. Hence this is recommended whenever there is necessity for a prolonged cold application. 
Application of the pack over the eyes is useful in cases of conjunctivitis, hemorrhages in the eyeball, itching, allergy, errors of refraction like short sight and long sight and especially useful in glaucoma where it helps to reduce eyeball tension. 

Mud Pack for Face

Soaked mud is applied on the face and allowed to dry for 30 minutes. This is helpful in improving the complexion of the skin and removing pimples and open skin pores which in turn facilitate elimination. This also is helpful in eliminating dark circles around the eyes. After 30 minutes, face should be washed thoroughly with cold water.

Mud Bath

Mud may be applied to the patient in sitting or lying position. This helps to improve the skin condition by increasing the circulation and energizing the skin tissues. Care should be taken to avoid catching cold during the bath. Afterwards, the patient must be thoroughly washed with cold water jet spray. If the patient feels chill, warm water should be used. The patient is, then, dried quickly and transferred to a warm bed. The duration of mud bath may be 45 to 60 minutes.

Benefits:

The effects of mud are refreshing, invigorating, and vitalizing.
For wounds and skin diseases, application of mud is the only true bandage.
Mud therapy is used for giving coolness to body.
It dilutes and absorbs the toxic substances of body and ultimately eliminates them from body.
Mud is used successfully in different diseases like constipation, headache due to tension, high blood pressure, skin diseases etc.
Gandhiji used to take mud pack to get rid of constipation

A mud bath


is a bath of mud, commonly from areas where hot spring water can combine with volcanic ash. Mud baths have existed for thousands of years, and can be found now in high-end spas in many countries of the world.

Mud baths come from many sources

lakes
saltwater sea (e.g. Dead Sea in Jordan[2] and Israel)
hot springs (e.g. Calistoga, Napa Valley, California)
mud volcano (e.g. Pulau Tiga, Malaysia[3])
Mud baths in the United States are mostly found at the resorts in California and Miami Beach, Florida. The mud is a combination of local volcanic ash, imported Canadian peat and naturally heated mineral waters. Historically, the mud bath treatment has been used for centuries in Eastern and Western European spas as a way to relieve arthritis.

Music therapy


is an allied health profession and one of the expressive therapies, consisting of an interpersonal process in which a trained music therapist uses music and all of its facets—physical, emotional, mental, social, aesthetic, and spiritual—to help clients to improve or maintain their health. Music therapists primarily help clients improve their health across various domains (e.g., cognitive functioning, motor skills, emotional and affective development, behavior and social skills, and quality of life) by using music experiences (e.g., free improvisation, singing, songwriting, listening to and discussing music, moving to music) to achieve treatment goals and objectives. It is considered both an art and a science, with a qualitative and quantitative research literature base incorporating areas such as clinical therapy, biomusicology, musical acoustics, music theory, psychoacoustics, embodied music cognition, aesthetics of music, and comparative musicology. Referrals to music therapy services may be made by other health care professionals such as physicians, psychologists, physical therapists, and occupational therapists. Clients can also choose to pursue music therapy services without a referral (i.e., self-referral).

Music therapists are found in nearly every area of the helping professions. Some commonly found practices include developmental work (communication, motor skills, etc.) with individuals with special needs, songwriting and listening in reminiscence/orientation work with the elderly, processing and relaxation work, and rhythmic entrainment for physical rehabilitation in stroke victims. Music therapy is also used in some medical hospitals, cancer centers, schools, alcohol and drug recovery programs, psychiatric hospitals, and correctional facilities.[1]

The Turco-Persian psychologist and music theorist al-Farabi (872–950), known as "Alpharabius" in Europe, dealt with music therapy in his treatise Meanings of the Intellect, where he discussed the therapeutic effects of music on the soul.[2] Robert Burton wrote in the 17th century in his classic work, The Anatomy of Melancholy, that music and dance were critical in treating mental illness, especially melancholia

History of Music TherapyMusic


has been used as a healing force for centuries.[6] Music therapy goes back to biblical times, when David played the harp to rid King Saul of a bad spirit. As early as 400 B.C., Hippocrates, Greek father of medicine, played music for his mental patients. Aristotle described music as a force that purified the emotions. In the thirteenth century, Arab hospitals contained music-rooms for the benefit of the patients.[7] In the United States, Native American medicine men often employed chants and dances as a method of healing patients.[8] Music therapy as we know it began in the aftermath of World Wars I and II. Musicians would travel to hospitals, particularly in the United Kingdom, and play music for soldiers suffering from war-related emotional and physical trauma


Chromotherapy
Intervention
MeSH D016500
Energy medicine - edit
Acupuncture
Energy (esotericism)
Energy medicine
Polarity therapy
Reiki
Shiatsu
Therapeutic touch

NCCAM classifications
1.Alternative Medical Systems
2.Mind-Body Intervention
3.Biologically Based Therapy
4.Manipulative Methods
5.Energy Therapy

See also
Alternative medicine


Chromotherapy,(Color therapy)






sometimes called color therapy/colour therapy, colorology or cromatherapy, is a complementary medicine method. It is said that a therapist trained in chromotherapy can use light in the form of color to balance "energy" wherever a person's body be lacking, whether on physical, emotional, spiritual, or mental levels. The practice has been labelled pseudoscientific by some of its critics.

Color therapy is unrelated to light therapy, a scientifically-proven form of medical treatment for seasonal affective disorder and a small number of other conditions, and photobiology, the scientific study of the effects of light on living organisms.

Color Chakra Chakra location Alleged function Associated system


Red First Base of the spine Grounding and Survival Gonads, kidneys, spine, sense of smell


Orange Second Lower abdomen, genitals Emotions, sexuality Urinary tract, circulation, reproduction


Yellow Third Solar plexus Power, ego Stomach, liver, gall bladder, pancreas
Green Fourth Heart Love, sense of responsibility Heart, lungs, thymus


Blue Fifth Throat Physical and spiritual communication Throat, ears, mouth, hands
Indigo Sixth Just above the center of the brow, middle of forehead Forgiveness, compassion, understanding Eye, pineal glands


Violet Seventh Crown of the head Connection with universal energies, transmission of ideas and information Pituitary gland, the central nervous system and the cerebral cortex

Magnet therapy,




magnetic therapy, or magnotherapy is an alternative medicine practice involving the use of static magnetic fields. Practitioners claim that subjecting certain parts of the body to magnetostatic fields produced by permanent magnets has beneficial health effects. These pseudoscientific physical and biological claims are unproven and no effects on health or healing have been established.[1][2][3] Although hemoglobin, the blood protein that carries oxygen, is weakly diamagnetic and is repulsed by magnetic fields, the magnets used in magnetic therapy are many orders of magnitude too weak to have any measurable effect on blood flow




Flower Therapies


Bach flower remedies are dilutions of flower material developed by Edward Bach, an English bacteriologist, pathologist and homeopath, in the 1930s.[1] Bach believed that dew found on flower petals retain healing properties of that plant.[2] The remedies are intended primarily for emotional and spiritual conditions, including but not limited to depression, anxiety, insomnia and stress.

The remedies contain a very small amount of flower material in a 50:50 solution of brandy and water. Because the remedies are extremely diluted they do not have a characteristic scent or taste of the plant. It is claimed that the remedies contain "energetic" or "vibrational" nature of the flower and that this can be transmitted to the user.[3] Bach flower remedies are considered vibrational medicines, and rely on a concept of water memory. They are often labeled as homeopathic because they are extremely diluted in water, but are not true homeopathy as they do not follow other homeopathic precepts such as the law of similars or the belief that curative powers are enhanced by shaking and repeated diluting ("succussion").

Systematic reviews of clinical trials of Bach flower remedies found no efficacy beyond a placebo


Each remedy is used alone or in conjunction with other remedies, and each flower is believed by advocates to impart specific qualities to the remedy. Bach flower remedies are also used on pets and domestic animals. Remedies are usually taken orally.

Remedies may be recommended by a naturopath or by a trained Bach flower practitioner after an interview. An individual may also choose the combination they feel best suits their situation. Some vendors recommend dowsing to select a remedy.

The best known flower remedy is the Rescue Remedy combination,[5] which contains an equal amount each of Rock Rose, Impatiens, Clematis, Star of Bethlehem and Cherry Plum remedies. The product is aimed at treating stress, anxiety, and panic attacks, especially in emergencies. Rescue Remedy is a trade mark and other companies produce the same formula under other names, such as Five Flower Remedy.[6]

Rescue Cream contains the same remedies in a cream form, with the addition of Crab Apple, a remedy Bach associated with feelings of contamination and unsightliness. It is applied externally in response to minor skin problems such as itches, cuts, stings, pimples and burns.

REIKI





The word Reiki is made of two Japanese words - Rei which means "God's Wisdom or the Higher Power" and Ki which is "life force energy". So Reiki is actually "spiritually guided life force energy."

A treatment feels like a wonderful glowing radiance that flows through and around you. Reiki treats the whole person including body, emotions, mind and spirit creating many beneficial effects that include relaxation and feelings of peace, security and wellbeing. Many have reported miraculous results.

Reiki is a simple, natural and safe method of spiritual healing and self-improvement that everyone can use. It has been effective in helping virtually every known illness and malady and always creates a beneficial effect. It also works in conjunction with all other medical or therapeutic techniques to relieve side effects and promote recovery.

An amazingly simple technique to learn, the ability to use Reiki is not taught in the usual sense, but is transferred to the student during a Reiki class. This ability is passed on during an "attunement" given by a Reiki master and allows the student to tap into an unlimited supply of "life force energy" to improve one's health and enhance the quality of life.

Its use is not dependent on one's intellectual capacity or spiritual development and therefore is available to everyone. It has been successfully taught to thousands of people of all ages and backgrounds.

While Reiki is spiritual in nature, it is not a religion. It has no dogma, and there is nothing you must believe in order to learn and use Reiki. In fact, Reiki is not dependent on belief at all and will work whether you believe in it or not. Because Reiki comes from God, many people find that using Reiki puts them more in touch with the experience of their religion rather than having only an intellectual concept of it.

While Reiki is not a religion, it is still important to live and act in a way that promotes harmony with others. Dr. Mikao Usui, the founder of the Reiki system of natural healing, recommended that one practice certain simple ethical ideals to promote peace and harmony, which are nearly universal across all cultures.

Benefits Of Reiki
The benefits of Reiki are said to be many, but in general terms having a Reiki treatment is said to release Reiki energy that will assist in providing balance to the whole person in mind, body and spirit and is a non-invasive holistic therapy.

Adapts to the needs of the recipient
Helps meditative states
Promotes personal awareness
Enhances spiritual connection
Fosters natural self healing
Relaxes and reduces stress
Balances energies in the body
Relieves pain and discomfort
Examples Of Where Reiki Can Help
Acute or Chronic pain
Allergies
Arthritis
Cancer patients respond well to Reiki
Detox the body
Headaches
Heal emotional issues
Heal trauma
Help calm the mind
IBS
ME
MS
Panic Attacks
Promote deep relaxation
Reduce stress and tension
Speed up healing after surgery

urine therapy


In alternative medicine, the term urine therapy (also urotherapy, urinotherapy or uropathy) refers to various applications of human urine for medicinal or cosmetic purposes, including drinking of one's own urine and massaging one's skin with one's own urine. While there are no known health benefits of such therapeutic use for urine,[1][2][3][4][5] some chemical components of urine do have some well known commercial and other uses, like urea and urokinase.

HistorySome of the earliest human cultures used urine as a medicine.

[edit] RomeIn Roman times, there was a tradition among the Gauls to use urine to whiten teeth. A famous poem by the Roman poet Catullus, criticizing a Gaul named Egnatius, reads:[6][7]

Egnatius, because he has snow-white teeth, / smiles all the time. If you're a defendant / in court, when the counsel draws tears, / he smiles: if you're in grief at the pyre / of pious sons, the lone lorn mother weeping, / he smiles. Whatever it is, wherever it is, / whatever he's doing, he smiles: he's got a disease, / neither polite, I would say, nor charming. / So a reminder to you, from me, good Egnatius./ If you were a Sabine or Tiburtine / or a fat Umbrian, or plump Etruscan, / or dark toothy Lanuvian, or from north of the Po, / and I'll mention my own Veronese too, / or whoever else clean their teeth religiously, / I’d still not want you to smile all the time: / there's nothing more foolish than foolishly smiling. / Now you’re Spanish: in the country of Spain / what each man pisses, he's used to brushing / his teeth and red gums with, every morning, / so the fact that your teeth are so polished / just shows you’re the more full of piss./
[edit] Religious[edit] ChristianitySome advocates believe that the Bible recommends urine therapy. A verse in Proverbs (Proverbs 5:15) advises: "Drink waters from thy own cistern, flowing water from thy own well."[8] However, subsequent verses deal with warnings against adultery, commanding the husband to stay with his wife and not pursue other women, hence the interpretation of this verse as a literary device or analogy.[9]

[edit] HinduismIn Hinduism a religious Sanskrit text called the Damar Tantra contains 107 stanzas on the benefits of "pure water, or one's own urine".[10] In this text, urine therapy is referred to as Shivambu Kalpa.[10] This text suggests, among other uses and prescriptions, massaging one's skin with fresh, concentrated urine. In the Ayurvedic tradition, which is fundamentally taken from the Hindu scriptures called the Vedas, urine therapy is called amaroli which when practised requires some dietry requirements such as mixing it with water to "cure cancers" and other "diseases" along with "raw food and certain fruits like banana, papaya and citrus fruits" which are claimed to be "very good in the practice of amaroli".[11][12][13][14] One of the main aims of this system is to "prevent illness, heal the sick and preserve life".[13][15]

[edit] IslamIn Islam drinking urine is forbidden and is considered "khamr" and is punishable as in the same as if "exposed to the penalty of apostasy" due to its toxicity, with the willing drinker not being considered Muslim anymore.[16] Sunni Islamic commentators find urine to be something that is "filth in an extreme degree".[16] However scholars such as Abū Ḥanīfa have said that "it's disliked" ("makruh" or "almost" haram).[16] In two of the Hadith's written by Sahih Bukhari it states several times that the Prophet Muhammad told his followers to drink camel urine and milk for the purposes of "recovery" to use "medicinally".[17][18] However the authenticity of these verses are disputed by many scholars, with the International Institute of Islamic Thought, a representative body of scholars, commenting that the prophet recommended drinking camel milk only with the consumers drinking camel milk along with urine which was later placed in the hadiths as some of Muhammad's sayings (which were compiled years after his death) as "throughout the history of the Companions there is no reference to the uses of camel urine for theraputic purposes".[19][20] Abu Yusuf has said that "urine from camels can be consumed for medicinal purposes".[16] However drinking camel urine is generally overall considered forbidden to consume in Islam as it is an intoxicant


Therapist" redirects here. For many others types of therapists, see Therapy.
Psychology

History ·Subfields
Basic science
Abnormal ·Biological ·Cognitive ·Comparative ·Cultural ·Differential ·Developmental ·Evolutionary ·Experimental ·Mathematical ·Personality ·Positive ·Social
Applied science
Applied behavior analysis ·Clinical ·Community ·Consumer ·Educational ·Health ·Industrial and organizational ·Legal ·Military ·Occupational health ·Political ·Religion ·School ·Sport
Lists
Disciplines ·Organizations ·Outline ·Psychologists ·Psychotherapies ·Publications ·Research methods ·Theories ·Timeline ·Topics
Portal
v ·t ·e


Psychotherapy



is a general term referring to therapeutic interaction or treatment contracted between a trained professional and a client or patient; family, couple or group. The problems addressed are psychological in nature and of no specific kind or degree, but rather depend on the specialty of the practitioner.

Psychotherapy aims to increase the individual's sense of his/her own well-being. Psychotherapists employ a range of techniques based on experiential relationship building, dialogue, communication and behavior change that are designed to improve the mental health of a client or patient, or to improve group relationships (such as in a family).

Psychotherapy may also be performed by practitioners with a number of different qualifications, including psychiatry, clinical psychology, counseling psychology, clinical or psychiatric social work, mental health counseling, marriage and family therapy, rehabilitation counseling, school counseling, play therapy, music therapy, art therapy, drama therapy, dance/movement therapy, occupational therapy, psychiatric nursing, psychoanalysis and those from other psychotherapies. It may be legally regulated, voluntarily regulated or unregulated, depending on the jurisdiction. Requirements of these professions vary, but often require graduate school and supervised clinical experience. Psychotherapy in Europe is increasingly being seen as an independent profession, rather than being restricted to being practiced only by psychologists and psychiatrists as is stipulated in some countries.


Hypnotherapy



is a therapy that is undertaken with a subject in hypnosis.[1]

The word "hypnosis" (from the Greek hypnos, "sleep") is an abbreviation of James Braid's (1841) term "neuro-hypnotism", meaning "sleep of the nervous system".

A person who is hypnotized displays certain unusual characteristics and propensities, compared with a non-hypnotized subject, most notably hyper-suggestibility, which some authorities have considered a sine qua non of hypnosis. For example, Clark L. Hull, probably the first major empirical researcher in the field, wrote,

If a subject after submitting to the hypnotic procedure shows no genuine increase in susceptibility to any suggestions whatever, there seems no point in calling him hypnotised

Faith healing



"Faith healer" redirects here. For the play by Brian Friel, see Faith Healer.
Faith healing is healing through spiritual means. Believers assert that the healing of a person can be brought about by religious faith through prayer and/or rituals that, according to adherents, stimulate a divine presence and power toward correcting disease and disability. Belief in divine intervention in illness or healing is related to religious belief.[1] In common usage, faith healing refers to notably overt and ritualistic practices of communal prayer and gestures (such as laying on of hands) that are claimed to solicit divine intervention in initiating spiritual and literal healing.

Claims that prayer, divine intervention, or the ministrations of an individual healer can cure illness have been popular throughout history.[2] Miraculous recoveries have been attributed to many techniques commonly lumped together as "faith healing". It can involve prayer, a visit to a religious shrine, or simply a strong belief in a supreme being.[3]

The term is best known in connection with Christianity. Some people interpret the Bible, especially the New Testament, as teaching belief in, and practice of, faith healing. There have been claims that faith can cure blindness, deafness, cancer, AIDS, developmental disorders, anemia, arthritis, corns, defective speech, multiple sclerosis, skin rashes, total body paralysis, and various injuries.[3]

Unlike faith healing, advocates of spiritual healing make no attempt to seek divine intervention, supporting an underlying belief system concerning Humanity's access to divine energy. The increased interest in alternative medicine at the end of the twentieth century has given rise to a parallel interest among sociologists in the relationship of religion to health.[1]

The American Cancer Society states "available scientific evidence does not support claims that faith healing can actually cure physical ailments."[3] "Death, disability, and other unwanted outcomes have occurred when faith healing was elected instead of medical care for serious injuries or illnesses."[3]

Disease -unit-4


TB


காச நோய்(டி.பி.) /டியூபர்குளோஸிஸ்


டிபி எனப்படும் காசநோய், ஒரு தொற்றக்கூடிய நோய். இது மைகோபாக்டீரியம் டியூபர்குளோஸிஸ் எனப்படும் பாக்டீரியாவால் தோற்றுவிக்கப்படுகிறது.

நோய் பரவும் முறை

காசநோய் கண்ட நபரிலிருந்து காற்றின் மூலம் இந்நோய் மற்ற நபர்களுக்கு பரவுகிறது. இந்நோய் கண்ட நபர் மூலம், ஒரு வருடத்தில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபருக்கு இந்நோய் தொற்றும்.

அறிகுறிகள்

டிபிக்கான பொதுவான அறிகுறிகள்
  • மூன்று வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் இருமல், சில வேளைகளில் இரத்தம் கலந்த சளி வெளியேறுதல் இருந்தால்,
  • காய்ச்சல், குறிப்பாக இரவு நேரங்களில் இருந்தால்,
  • எடை குறைவு
  • பசி இன்மை.
எச்.ஐ.வி. (எய்ட்ஸ் உண்டாக்கும் வைரஸ்) தாக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, காசநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகம். எச்.ஐ.வி நோய் தொற்று கொண்டவர்களில், ஆரம்பத்தில் ஏற்படக்கூடிய நோய், காசநோயாகும். எச்.ஐ.வி நோய் உள்ள நபருக்கு டிபி கிருமி தொற்றும் போது, மற்ற நபர்களை விட இவர்களில் இந்நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு, ஆறு மடங்கு அதிகமாகும்.
இருந்த போதிலும், காசநோயை குணப்படுத்த முடியும். எச்.ஐ.வி நோய் கொண்ட நபர், டாட்ஸ் (டிஓடிஎஸ்) எனும் டிபிக்கான சிகிச்சையால் முறை, நோயின் நிலை மற்றும் நோயாளிகளின் இறப்பை, குறைக்கிறது.
சிறுபிள்ளைகளில் காசநோய்
  • சிறுபிள்ளைகளில் காசநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்
  • கீழ்கண்ட சூழலில் வாழும் சில குழந்தைகளில், காசநோய் மற்றவர்களை விட அதிக அளவில் தொற்றக்கூடிய அபாயம் உண்டு
 - காசநோயின் தாக்கம் அதிகம் உள்ள நபர்கள் வசிக்கும் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு.
  - எச்.ஐ.வி அல்லது மற்ற நோய் தடுப்பு தன்மையை குறைக்கும் நோய்தொற்று கொண்ட சிறு பிள்ளைகள்
  - மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள சமூகசூழ்நிலையில் உள்ள சிறு பிள்ளைகள்.
சிகிச்சை
டாட்ஸ் சிகிச்சை முறை டிபி-க்கான ஒரு முக்கிய உத்தி அல்லது சிகிச்சை முறையாகும். இச்சிகிச்சை முறையினை குறைந்தபட்சம் 6 மாதங்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
நுரையீரலுக்கு தொடர்பில்லாத காசநோய்
(எக்ஸ்ட்ரா பல்மோனரி டியூபர்குளோசிஸ்)
எக்ஸ்ட்ரா பல்மோனரி காசநோய் என்பது நுரையீரல் அல்லாத மற்ற பகுதிகளில் ஏற்படும் காசநோயினைக் குறிக்கிறது.
அறிகுறிகள்
நோய்தொற்று கொண்ட குறிப்பிட்ட பகுதி (நிணநீர்ச்சுரப்பிக் கணுக்கள்-லிம்ஸ்ப்நோட்ஸில் காசநோய்) வீக்கமடைதல், நடமாடும் திறன் குறைதல் (முதுகெலும்பு கூர்முனை-ஸ்பைனில் காசநோய்) அல்லது கடுமையான தலைவலி மற்றும் நரம்புசம்பந்தமான குறைசெயல்பாடு (டி.பி. மெனிஞ்ஜைடிஸ்) போன்றவையாகும்.
எக்ஸ்ட்ரா பல்மோனரி டிபி-யில் இருமல் இருக்காது ஏனெனில் இது நுரையீரலில் ஏற்படுவது இல்லை

உயர் இரத்த அழுத்தம் (Hypertension)
 என்பது இரத்த அழுத்தத்தை உயரச் செய்கின்ற நாள்பட்ட மருத்துவ நிலையாகும். இது உயர் இரத்த அழுத்தம் என்றும் அல்லது ஹெச்டி , ஹெச்டிஎன் அல்லது ஹெச்பிஎன் என்றும் சுருக்கமாக சொல்லப்படுகிறது. "ஹைபர்டென்ஷன்" (உயர் இரத்த அழுத்தம்) என்ற சொல், பொதுவாக, உடலமைப்பு முழுவதையும் பாதிக்கின்ற, தமனிவழி உயர் இரத்த அழுத்தம் என்பதையே குறிக்கிறது.[1]
உயர் இரத்த அழுத்தத்தை அடிப்படையானது (முதன்மையானது) என்றோ அல்லது இரண்டாம் நிலையிலானது என்றோ பிரிக்கலாம். அடிப்படையான அல்லது முதன்மையான உயர் இரத்த அழுத்தம் என்பது அதிகரித்த இரத்த அழுத்தத்தை விளக்குவதற்கு மருத்துவக் காரணம் எதையும் கண்டுபிடிக்க இயலாததாகும். இது பொதுவானது. ஏறத்தாழ 90-95 சதவிகித உயர் இரத்த அழுத்த நிலைகள் அடிப்படையான உயர் இரத்தமே.[2][3][4][5] இரண்டாம் நிலை உயர் இரத்தம் அழுத்தம் என்பது சிறுநீரக நோய் அல்லது கட்டிகள் (அட்ரினல் சுரப்பி கட்டி அல்லது ஃபியோகிராமிசட்டோமா) போன்ற மற்ற நிலைகளால் ஏற்படும் விளைவாகும் (அதாவது இரண்டாம் நிலை).
நீடித்த உயர் இரத்த அழுத்தம் பக்கவாதம், மாரடைப்பு, இதயச் செயலிழப்பு மற்றும் தமனி அளவுக்கு அதிகமாக விரிவடைதல் ஆகியவற்றிற்கான அபாய காரணிகளுள் ஒன்றாக இருப்பதுடன், நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பிற்கும் காரணமாகிறது.[6] தமனி இரத்த அழுத்தத்தில் ஏற்படும் மிதமான உயர்வு கூட குறுகிய ஆயுட்காலத்திற்கு வழிவகுக்கலாம். தமனி இரத்த அழுத்தம் 50 சதவிகிதம் அல்லது, அதற்கும் அதிகமாக இருக்கின்ற நிலை என்று வரையறுக்கப்பட்டுள்ள கடுமையான உயர் அழுத்தங்களில் உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டால் தவிர, வாழ்நாளின் கால அளவு சில வ்ருடங்களுக்கு மடடுமே.[7] 115 mmHg இதய சுருங்கியக்க அழுத்தத்தில் தொடங்கி (இதயக் கீழறைகள் சுருங்கும்போது கார்டியாக் சுழற்சியின் முடிவிற்கு அருகாமையில் ஏற்படுகின்ற தமனிகளில் ஏற்படும் உச்சபட்ச அழுத்தம்) 75 mmHg (பொதுவாக 115/75 mmHg என்று எழுதப்படுவது) இதய விரிவியக்கத்தில் (தமனிகளில் குறைந்தபட்ச அழுத்தமாக உள்ள, இதயக் கீழறைகள் இரத்தத்தால் நிரப்பப்படும்போது கார்டியாக் சுழற்சியின் தொடக்கத்திற்கு அருகாமையில் உருவாவது) கார்டியோவாஸ்குலர் நோயின் (சிவிடி) அபாயம் ஒவ்வொரு 20/10 mmHg அதிகரிப்பிற்கும் அதிகரிக்கிறது.[
Myocordial
இதயத்திசு இறப்பு

ASTHMA

சுவாசத்தின் மூலம் நமது ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு உடல் இயக்கம் எந்த தடையும் இன்றி நடந்து வருகிறது. சுவாச செயல்பாட்டில் பிரச்னை வருவதை ஆஸ்துமா என்கிறோம். சுவாசக் குழல் சுருங்குதல், நுரையீரல் வீங்குதல் போன்ற காரணங்களால் இது உண்டாகிறது. சாதாரண மூச்சு திணறல் தானே என்று கண்டுகொள்ளாமல் விட்டால், நுரையீரல் புற்று நோய்க்கு வழிவகுத்து விடும் என்கிறார் ஹோமியோ மருத்துவர் சசிக்குமார். அவர் கூறியதாவது: சுவாசப் பிரச்னைதான் ஆஸ்துமா. பெரும்பாலும் இதன் தொடக்கம் அலர்ஜிதான். நுரையீரல் நோய்களும் சுவாச தடையை உருவாக்குகின்றன. 

தூசு, மண், விலங்குகளின் ரோமம் மற்றும் குளிர் காலநிலை ஆகியவற்றால் அலர்ஜி உண்டாகிறது. இதன் மூலம் நுரையீரலை சுற்றியுள்ள சவ்வு வீங்குகிறது. சுவாசக் குழல் இறுகி சுற்றளவு குறைந்து மூச்சு திணறலை ஏற்படுத்துகிறது. சிலந்தி வலையில் உள்ள டஸ்டிநைட்டி என்ற பாக்டீரியாவும், ரைனோ வைரசும் மூச்சு திணறலை ஏற்படுத்துகின்றன. நுரையீரல் அலர்ஜி மற்றும் தொற்றின் காரணமாகவும் ஆஸ்துமா ஏற்படுகிறது. பொதுவாக இந்த அலர்ஜி பிரச்னையால் அதிகாலை மற்றும் நடு இரவு நேரங்களில் மூச்சு திணறல் ஏற்படும். சிலருக்கு அதிகாலை நேரங்களில் தொடர் தும்மல் போன்ற தொல்லைகள் தாக்க வாய்ப்புள்ளது. 

சுவாச பிரச்னையின் காரணமாக உடலுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் மூளை அமைதியற்ற நிலையில் காணப்படும். தூக்கம் வராமல் தவிப்பது, நிம்மதியின்றி இருக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இவை ஆஸ்துமாவின் அறிகுறிகளாகும். எந்த மருத்துவமும் செய்து கொள்ளாமல் இருத்தல் அல்லது பிரச்னை உண்டாகும்போது மருந்து கடையில் ஏதாவது ஒரு மருந்தை வாங்கி சுய மருத்துவம் செய்து கொள்ளுதல் போன்றவற்றால் ஆஸ்துமா குணமாகாது. மேலும் இது நுரையீரல் புற்றுநோய் வரை கொண்டுவிட வாய்ப்புள்ளது. 

குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆஸ்துமாவால் அதிகளவு பாதிப்புக்கு உள்ளாகின்றனர். குழந்தைகளுக்கு தொடக்கத்தில் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் முற்றிலும் குணமாக்க முடியும். வயதானவர்களையும் இது எளிதில் தாக்குகிறது. இவர்கள் அலர்ஜிக்கான காரணத்தை கண்டறிந்து தவிர்ப்பதுடன் உடனடியாக சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டியது அவசியம். புகை பிடிக்கும் பழக்கத்தால் நுரையீரல் பாதிப்பின் காரணமாக ஆஸ்துமா உண்டாக வாய்ப்புள்ளது. எனவே கண்டிப்பாக புகை பிடிப்பதை கைவிட வேண்டும். 

பெண்கள் அதிக நேரம் சமையல் அறையில் இருப்பது, தண்ணீரில் வேலை செய்வது போன்ற காரணத்தால் இந்நோய்க்கு அதிகளவில் ஆளாகிறார்கள். அதிகாலையில் எழுந்து சமைப்பது போன்ற அன்றாட நடைமுறைகளில் சில பாதுகாப்பு முறைகளை கையாள்வதன் மூலம் ஆஸ்துமா மற்றும் தும்மல் போன்ற பிரச்னைகளை தடுக்க முடியும்



மூட்டுவலி (Arthritis)
_

  1. தினசரி வாழ்க்கையில் நீங்கள் காலை எழுந்திருக்கும்போது முழங்காலை மடக்க முடியாமல் போய்விடுகிறதா? கால்தாங்கலாகத் தான் நடக்கவேண்டியிருக்கிறதா? கடந்த காலத்தில் இப்பிரச்னை வந்து, தீர்ந்து தீர்த்து தற்போது உறக்கத்தில் யாரோ அழுத்துவது போன்ற உணர்வு வருகிறதா? நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது பாம்ஸ் (balm) மற்றும் தைலம், பாப்பிங் பில்ஸ் ஆகியவை உபயோகிக்கும்போது மட்டும் வலியிலிருந்து நிவாரணம் பெறுகிறீர்களா? அனேகமாக நீங்கள் ‘ஆர்திரிடிஸ்’ மூலம் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
  1. பருவக் கால மாற்றங்கள் நம் உடலில் சில குறிப்பிடும்படியான மாற்றங்களை ஏற்படுத்தும். குறிப்பாக மழைக்காலம் வந்தாலே பல்வேறு நோய்த் தொல்லைகள் வந்துவிடும். மரத்துப்போன மூட்டு இணைப்பில் நடுக்கத்துடன் கால்தாங்கலாக நடக்க வேண்டிய நிலையும் மழைக்காலத்தில் வரும் மோசமான உடல் பாதிப்பாகும்.சரி, ஆர்திரிடிஸ் என்றால் என்ன?அறிவியலின்படி ‘ஆர்திரிடிஸ்’ என்பது (ஆர்த் : இணைப்புகள் ஐடிஸ் : வீக்கம்) முழங்கால் மூட்டில் ஏற்படும் வீக்கமாகும். முழங்கால் அழற்சி மூலம் வலி, முழங்கால் மடக்க முடியாமை மற்றும் வீக்கம் ஆகியவை முழங்கால் மூட்டில் உண்டாகிறது.

இன்றைய நிலையில் 100_க்கும் அதிகமான ‘ஆர்திரிடிஸ்’ நோய் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. பொதுவாக ‘ஆர்திரிடிஸ்’ இரண்டு வகையாக கீழ்க்கண்டவாறு பிரிக்கப்படுகிறது.

1. ரியூ மேட்டாய்டு ஆர்திரிடிஸ் :உடலில் இரத்த வெள்ளையணுக்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு அரணாக இருக்கின்றன. நோய் எதிர்ப்பு செல்கள், நீண்ட நேரம் உடல் செல்களுக்கும் தீங்கிழைக்கும் மற்ற பொருள்களுக்குமிடையேயான வேறுபாட்டை அறிவதில்லை. இதனால் அவை உடல் செல்களை தாக்க ஆரம்பிக்கின்றன. முழங்கால் மூட்டிலுள்ள சவ்வு இதனால் வீக்கமடைந்து விறைப்பு தன்மை அடைந்து சிவப்பாக மாறும் இவற்றுடன் மூட்டு வலியும் ஏற்படுகிறது. மோசமான நோய் பாதிப்பினால் சில நேரங்களில் மூட்டுகள் செயலிழந்து விடுகின்றன. இந்நேரத்தில் இந்நோய் ஒன்றுக்கு மேற்பட்ட மூட்டுகளைப் பாதிக்கிறது. பெரும்பாலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு இந்நோய் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

2. ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் :
இது பொதுவாக மற்றொரு வகை ஆர்திரிடிஸ் நோயாகும். இந்நோய் மேலும் வளரக்கூடியது அல்ல. உடல் எடை அதிகமாகி முழங்கால் மூலமாக அதிக எடையை தாங்கும்போது இந்நோய் முக்கியமாக வருகிறது. நன்கு உறுதியான மேற்புறமுள்ள இணக்கமான சவ்வு (முழங்கால் மூட்டு இணைப்பின் மீது மிருதுவாக இந்த திசு இருக்கிறது) கிழிந்து விடுதல் மற்றும் நீங்கிவிடுவதன் மூலமாக எலும்புகள் சொரசொரப்புடன் ஒன்றுடன் ஒன்று நேரிடையாக உராய்வதால் வலி மற்றும் வீக்கம் ஆகியவை ஏற்படுகிறது. சாதாணமாக மக்கள் ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் நோயினால் பாதிக்கப்படுவதால் மூட்டு வலி ஏற்பட்டு, அதிகமாக அசைக்க முடியாத நிலை ஏற்படும். இந்த ஆர்திரிடிஸ் நோய், ரியூமேட்டாய்டு ஆர்திரிடிஸ் போன்று உடலின் உட்புற பாகங்களை பாதிப்பதில்லை. மூட்டுகளை மட்டுமே பாதிக்கிறது.


மூட்டு வலி : காரணங்கள்
கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களால் மூட்டு வலி ஏற்படலாம்.
1-உங்களுடைய உடலுக்கு சேராத உணவுகளை சாப்பிடும்போது.

2-அதிக குளிர்ச்சி மற்றும் வெப்பமான கால சூழலில் இருத்தல்.

3-அதிக உடல் உழைப்பு, உடற்பயிற்சி மற்றும் எவ்வித உடற்பயிற்சியும் இல்லாமை ஆகியவை மூலமாக தேவையில்லாத சிரமம்.

4-குறிப்பிட்ட காலத்தில் மூட்டு இணைப்பு சவ்வு வளராமை மற்றும்
சாதாரணமாக முழங்கால் மூட்டுகள் மீது போர்த்தப்படாமை.

5-வழக்கத்திற்கு மாறாக அதிக உடல் எடை அதிகரிப்பு.

6-சமீபத்திய மோசமான உடல் பாதிப்பு மற்றும் நீண்ட நாள் நோய்வாய்பட்டிருத்தல்.

7-ஏதாவதொரு எலும்பு மூட்டு தசையில் இரத்தம் உறைந்து விடுதல்.

8-ஏதாவதொரு மூட்டு இணைப்பு சவ்வினில் வீக்எலும்பு மூட்டின் மேற்பகுதியில் சவ்வுப் பகுதி நன்கு மூடப்படா மூட்டு வீக்கம், கீல்வாதம் போன்ற நாள் பட்ட நோய்கள்.

ஆயுஷ் ஆயுர்வேதிக் அறிவியல் மையத்தின் அறிவியலறிஞரும் மருத்துவருமாகிய விஸி பன்சால் ஆயுர் வேத சிகிச்சை வழிமுறை மூலம் இந்நோயை நீக்க முடியும் என்கிறார்.

‘‘ஒருவர் தன்னுடைய வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகிய தோச காரணிகளை நடுநிலையுடன் வைப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தைப் பேணலாம். உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்பிலும் திசு மற்றும் செல்லிலும் கூட இம்மூன்று தோசக் காரணிகள் இருக்கின்றன. இல்லையேல் இக்காரணிகளே பல்வேறு நோய்கள் ஏற்பட வழிவகுத்துவிடும்’’ என்றார்.

அதிக நடை, நீண்ட தூரம் பயணம் செய்தல், அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி, போதுமான உறக்கமின்மை, குளிர், அதிகமான காற்று, வெப்பமான பகுதிகளில் இருத்தல் ஆகியவற்றின் மூலம் உணவு நன்கு செரிக்கப்படாமல் ‘ஆமா’ என்கிற தேவையற்ற (செரிக்கப்படாத பொருள்) பொருள் உடலில் சேருவதன் வாயிலாக வாதம் அதிகமாகி தலைக்குச் செல்கிறது. உடலில் வாதம் செல்லும்போது கூடவே ஆமா பொருளை மூட்டுகளில் விட்டுச் செல்கிறது. எலும்பு மூட்டு இணைப்புகளில் இவை தங்கி விடுவதால் கால் அசைவின்போது வலி ஏற்படுகிறது. இந்நோய்க்கு ஆமவாதா அல்லது ரிகியூ மேட்டாய்டு ஆர்திரிடிஸ் என்று பெயர்.

back pain
முதுகு வலி என்பது (“டார்சால்ஜியா ” என்றும் அறியப்படுவது) உடலின் பின்பக்கத்தில் உணரப்படும் வலியாகும். இது பொதுவாக முதுகெலும்பிலுள்ள தசைகள், நரம்புகள், எலும்புகள், கணுக்கள் அல்லது மற்ற அமைப்புகளில் தோன்றுகிறது.
இந்த வலி அடிக்கடி கழுத்துவலி, மேல் முதுகு வலி, கீழ்முதுகு வலி அல்லது வாலெலும்பு வலி என்று பிரிக்கப்படலாம். இது திடீரென்றும் தோன்றலாம் அல்லது நாட்பட்ட வலியாகவும் இருக்கலாம்; இது நிலையானதாக இருக்கலாம் அல்லது வந்து போவதாக இருக்கலாம், ஒரே இடத்திலிருக்கலாம் அல்லது மற்ற பாகங்களுக்கு பரவுவதாக இருக்கலாம். இது மந்தமான வலியாக அல்லது ஊடுருவிப் பாயும் அல்லது மிகுவான அல்லது எரியும் உணர்வையும் உண்டாக்கலாம். வலி கரங்களுக்கும் (கைக்கும்), மேல் முதுகு அல்லது கீழ் முதுகு (கால் அல்லது பாதத்திற்கும் செல்லக்கூடும்) பரவலாம். வலியல்லாமல் பலவீனம், உணர்ச்சியின்மை அல்லது முள் போன்று குத்துதல் போன்ற மற்ற அறிகுறிகளும் உட்படலாம்.
முதுகுவலி மனிதர்களை மிகவும் அடிக்கடி தொந்தரவு செய்யும் பிரச்சனையாகும். அமெரிக்க ஒன்றியத்தில் கீழ்முதுகுவலி (லம்பாகோ என்றும் அழைக்கப்படுவது) மருத்துவரை மிகவும் அதிகமாக சந்திப்பதற்கான ஐந்தாவது முக்கிய காரணமாகும். வயது வந்தவர்களில் பத்தில் ஒன்பது பேர் தங்கள் வாழ்க்கையில் எப்போதாவது ஒரு முறை முதுகுவலி அனுபவிக்கிறார்கள். வேலை செய்யும் பெரியவர்களில் பத்தில் ஐந்து பேர் ஒவ்வொரு வருடமும் முதுகுவலி அனுபவிக்கிறார்கள்.[1]
முதுகுத்தண்டென்பது நரம்புகள், மூட்டுகள், தசைகள், தசைநாண்கள் மற்றும் தசைநார்களுள்ள சிக்கலான ஒன்றோடொன்று இணையும் ஒரு பிணையமாகும். இவையனைத்தும் வலியை உண்டாக்கக்கூடியவையாகும். முதுகுத்தண்டில் தோன்றி கால்களுக்கும், கரங்களுக்கும் செல்லும் பெரிய நரம்புகள் வலியை முனையுறுப்புகளுக்கும் எடுத்துச் செல்லக்கூடும்
முதுகுவலி தோன்ற காரணங்களும் மூலங்களும் பல உள்ளன.[

12] எனினும், முதுகுத்தண்டிலுள்ள குறிப்பிட்ட திசுக்களை வலிக்காக நோயறுதியிடல் செய்தது சில பிரச்சனைகளை முன்வைக்கிறது. ஏனெனில் வெவ்வேறு முதுகுத்தண்டு திசுக்களிலிருந்து வரும் அறிகுறிகள் ஒரே மாதிரி தோன்றுகின்றன. ஓரிட உணர்வு நீக்கி தடுப்புக்கள் போன்ற தடை மீறிப்பாயும் நோயறுதியிடும் செயல்முறைகளை பயன்படுத்தாமல் அவைகளை வேறுபிரித்து புரிந்துக்கொள்ளுதல் இயலாத காரியமாகும்.
முதுகிலுள்ள எலும்புத்தசை முதுகுவலிக்கான ஒரு சாத்தியமான காரணமாகும். தசை இழுப்புகள் (இழுத்துப்பிடிக்கும் தசைகள்), தசைப் பிடிப்பு மற்றும் தசை சமச்சீரின்மைகள் ஆகியவை தசையில் வரும் வலிக்கான சாத்தியமான காரணங்களாகும். எனினும், பல முதுகுவலி நிகழ்வுகளில் தசைத் திசுக் கோளாறின் கருத்தை நிழற்பட ஆய்வுகள் ஆதரிப்பதில்லை. மேலும் தசைப்பிடிப்புகள் மற்றும் தசை சமச்சீரின்மைகளின் நரம்பியல் உடலியக்கங்கள் சரிவர புரிந்துக்கொள்ளப்படவில்லை
digestive disorder
லகெங்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாயுத் தொல்லையினால் அவதிப் படுகிறார்கள். இது ஒரு வியாதி அல்ல; ஆனால் ஒரு வியாதியின் அறிகுறியாக இருக்கலாம். நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம், வயிற்றுக்கும் மார்பிற்கும் நடுவே வலி – சில சமயங்களில் மார்பை அடைப்பது போன்ற உணர்வு இவையெல்லாம் வாயுத் தொல்லையின் அறிகுறிகளாக இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அறிகுறிகள் காணப்படும்.
வாயுத்தொல்லை ஏற்படக் காரணம்
நாம் உண்ணும் உணவு சரிவர செரிமானம் ஆகாமல் போவதுதான் வாயுத்தொல்லை ஏற்படக் காரணம்.
உணவு நம் இரைப்பைக்குள் சென்று அங்கு பலவிதமான செரிமான நீர்களுடன் கலந்து செரிக்கப் படுகின்றன.
அவ்வாறு செரிக்கப்படாத உணவின் மிச்சங்கள் பெருங்குடலுக்குள் சென்று வாயுவாக மாறுகிறது.

ஏன் சரிவர செரிமானம் ஆவதில்லை என்றால், நம்முடைய சாப்பிடும் பழக்கம் சரிவர இருப்பதில்லை. அதாவது தினமும் குறிப்பிட்ட நேரத்தில் நம் வயதிற்கும் நாம் செய்யும் வேலையின் அளவிற்கும் ஏற்ற சாப்பாட்டை சாப்பிடத் தவறுகிறோம். காலை உணவை தவிர்ப்பது, பசி நேரத்தில் காபி, தேநீர் முதலிய பானங்களை குடிப்பது, நீண்ட நேரத்திற்கு பட்டினி கிடப்பது அல்லது கிடைத்ததையெல்லாம் கிடைத்த போதெல்லாம் உண்பது என்று நம் வயிற்றை நாமே பாடாய் படுத்துகிறோம். ‘உனக்காக உழைக்கும் என்னை நீ சரியாக கவனிக்கவில்லை’ என்ற நம் வயிற்றின் கூக்குரல் தான் இந்த வாயுத் தொல்லை.
இன்னொரு காரணம்: சாப்பிடும்போதோ, நீர் குடிக்கும்போதோ அதிகமான காற்றையும் சேர்த்து விழுங்கிவிடுவது. அவசரமாக உணவை விழுங்குவது, சூயிங்கம், பான், புகையிலை மெல்லும்போது நிறைய காற்று நம் வயிற்றினுள் சென்றுவிடுகிறது. அதே போல கரியமில வாயு சேர்த்த குளிர் பானங்கள் உட்கொள்ளும்போது அதில் இருக்கும் வாயு நம் வயிற்றினுள் சென்று சேர்கிறது. (நாம் தினமும் பிராண வாயுவை சுவாசித்து கரியமில வாயுவை வெளியிடுகிறோம். அந்தக் கரியமில வாயுவை குளிர் பானத்தில் செலுத்தி பாட்டிலில் அடைத்து விற்கிறார்கள். அவர்கள் வியாபாரிகள் – நாம் அதை வாங்கி குடிக்கிறோமே! என்ன கொடுமை இது சரவணன் என்று கேட்க தோன்றுகிறதா?)
இப்படி கார்பனேடட் பானங்களைக் குடிப்பதாலும் வாயுத் தொல்லை ஏற்படும். காசு கொடுத்து நம் உடம்பை நாமே கெடுத்துக் கொள்ளுகிறோம்.

மலச்சிக்கல்: உணவு மிக நீண்ட நேரம் வயிற்றில் தங்குவதாலும், கழிவுப் பொருட்கள் சரியாக வெளியேற்றப் படாததும் கூட வாயுத் தொல்லைக்குக் காரணமாகலாம்.
அல்சர் எனப்படும் குடல் புண்:
இதுவும் கூட வாயுத் தொல்லைக்குக் காரணம். சரிவர மருத்துவம் செய்துகொள்ளாவிட்டால் வேறு பல சிக்கல்களை உண்டாக்கும்.

வேறு  காரணங்கள்:
  • உணவுக் குழாய், குடல், சிறுகுடலின் முற்பகுதியில் ஏற்படும் கோளாறுகள்.
  • வயிற்றில் அதிகப்படியான அமிலங்கள் சுரப்பது.
  • குடலில் இருக்கும் திசுக்கள் மெலிவடைவது.
  • பித்தப்பை, கணையம் இவற்றில் ஏற்படும் தொற்றுநோய்.

Ulcer
'அல்சர்' - சில உண்மைகள்

வயிற்றிலே ஒன்றும் இல்லை என்ற மாயத் தோற்றமும் பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்ச்சியும் தோன்றுகிறதா?  மார்புப்ப பகுதியில் எரிவது போன்ற உணர்வு  உள்ளதா?  வயிற்றிலேருந்து புளிப்புச் சுவையான நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதா?  இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்குகுடல் புண் இருக்கலாம்.
குடல் புண் என்றால் என்ன?

இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற்பகுதியில் ஏற்படும் புண் அல்லது காயத்தை குடல் புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன.  இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன.  குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டு.  இதை அமில குடல் புண்நோய் என்றும் அழைக்கிறோம்.
புண் எதனால் ஏற்படுகிறது?  

குடல் புண் தோன்றுவதற்கரிய காரணங்கள் இதுவரை தெளிவாக அறியப்படவில்லை இருப்பினும் புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன.  சாலிசிலேட் மருந்துகள், ஆஸ்பரின் முதலான வலி நிவாரண மருந்துகள், காயங்களுக்காகவும் மூட்டு வலிகளுக்காகவும் சாப்பிடும் மருந்துகள், வீக்கத்தைக் குறைக்கச் சாப்பிடும் மருந்துகள் போன்ற மருந்துகளின் காரணமாகவும் குடல் புண் வருகிறது. செரிமான தொகுதியில் எங்கு புண் ஏற்படுள்ளது என்பதைப் பொருத்து குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.  1) வாய்வுக் கோளாறால் ஏற்படும் குடல் புண் .  2)சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.  இரண்டு வகைகள் இருப்பினும் இரண்டுக்கும் உரிய நோய்க் குறிகள் பெரும்பாலும் ஒரே மாதரியானவை.
மலச்சிக்கல் (Constipation)

என்பது மனிதனுக்கு ஏற்படும் ஒரு உடல் உபாதை ஆகும். உட்கொள்ளும் உணவானது சில காரணங்களால் மலக்குடலில் தங்கிவிடுகிறது. இக்காரணத்தால் மலம் கழிக்கும் போது மலம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது

இன்னும் சிலரோ ரிஷிமூலம், நதிமூலம் கேட்கக்கூடாது என்பார்கள். இன்னும் சிலரோ மூல நட்சத்திரம் என்று பிறந்த குழந்தைக்கு சாதகம் கணித்து, ஆண்மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம் என்று ஆதிக்கத்தையும், பெண் அடிமைத்தனத்தை நிறுவவும் பாடுபடுவர். அய்வராதம் யானை ஆதிமூலமே என அழைத்தது அப்பட்டமான கட்டுக்கதை என்றாலும், மருத்துவத் துறையில், ஒரு நோய் ஆதிகாலம் தொட்டே இருந்து வருகிறது என்றால், அது மூல நோய் (Haemorrhoids) தான். அதனால் உண்மையான ஆதிமூலம் மூல நோய்தான். அதைப்பற்றிக் காண்போம். மூல நோய், மேல் மலக்குடல் சிரையில் (Superior Rectal Vein) ஏற்படும் மாறுபாடுகளால் உண்டாகும் ஒரு நோயாகும்.


நோய் கூற்றியல் (Pathology) மற்றும் நோய் காரணியம் (Aetiology) மூல நோய் உண்டாக மூன்று காரணங்கள் உள்ளன. நல் மலக்குடலில் உள்ள மேல் மலக்கடல் சிரை (Superior Rectal Vein), மலக்குடலில் உள்ள தளர்ச்சியான சவ்வுப் படலத்தில் படர்ந்துள்ள ஒரு இரத்தக் குழாயாகும். இதைச் சுற்றி கெட்டியான சதைப் பகுதியோ, வேறு உறுப்புகளோ இல்லாத நிலையில், இரத்தம் இக்குழாய் வழியே அதிக அளவு செல்லும் நிலை உண்டாகிறது.

இரண்டாவதாக உடலின் கீழ்ப்பகுதியில் உள்ள இரத்தக் குழாயாதலால் அதனாலும் இரத்தக் குழாய் அதிகம் சென்று குழாய் நிரம்பும் நிலை ஏற்படும்.

மூன்றாவதாக சில நோயாளிகளுக்குப் பரம்பரை நோயாகக் கூட வரும். மலச்சிக்கல் ஏற்படும்பொழுது, முக்கும் சமயத்தில், ஏராளமான இரத்தம் மேல் மலக்கடல் சிரைக்கு வரும் நிலை ஏற்படும். அந்த இரத்தம் சட்டென்று வடியாமல், அங்கேயே சேர்ந்து, மூலமாக உருவாகும். தொடர்ச்சியான நீண்ட நாள்களாக இருந்துவரும் இருமல், புரோஸ்டேட் சுரப்பி சுழற்சியினால் வீங்குவதால் அது மலக்குடலை அழுத்தும் நிலை ஏற்படும்.

அதனால்கூட மூல நோய் ஏற்படலாம். குண்டு உடம்புக்காரர்களுக்கு எளிதாக இந்நோய் ஏற்படக்கூடும். கருவுற்ற தாய்மார்களுக்கு, நிறைமாதங்களில் குழந்தை வளர்ச்சியினால் மலக்குடல் அழுத்தப்படலாம். அந்த நேரத்தில் இரத்தக் குழாய்களும் அழுத்தப்பட்டு சிரையில் இருந்து இரத்தம் வெளியேறாத நிலை உண்டாகி, மூல நோய் உண்டாகலாம். மலக்குடல், அடிவயிறு, பெருங்குடல் போன்ற பகுதிகளில் உண்டாகும் கட்டிகள், புற்றுநோய் கட்டிகள், இரத்தக் குழாய்களில் மாற்றத்தை உண்டாக்கி மூல நோயை உண்டாக்கலாம்.

இப்படி பல காரணங்களால் உண்டாகும் இரத்தத் தேக்கம் (Accumacalation of Blood) சிரையின் மற்ற கிளைகளிலும் பரவி, மலக்குடலில் மூலநோயாக உருவாகிறது. மேல் மலக்குடல் சிரை, இடது, மேல் மலக்குடல் சிரை (Left) வலது முன்பக்கச் சிரை (Reght Anterior Vein), வலது இடப்பக்கச் சிரை (Right Posterior Vein) மூன்று பிரிவுகளாக பிரிகிறது. அவற்றில் நிரையும் இரத்தத்தால், மூன்று மூலமாக உருமாகிறது. இதை மருத்துவர்கள் 3 மணி, 7 மணி, 11 மணி மூலம் என குறிப்பிடுவர்.

கடிகாரத்தின் சின்ன முள் காட்டும் 3, 7, 11 மணிகளில் உள்ளவாறு, குடலைச் சோதிக்கும் பொழுது மூலம் மூன்று இடங்களில் தெரியும். அதனால்தான் இவ்வாறு குறிப்பிடுவர். ஆரம்ப நிலையில் இதனை முதல் நிலை மூலம் (Primary Haemorrhoids) என்று குறிப்பிடுவர். நாளாக நாளாக மூன்று மூலக்கட்டிகள், நான்காக உருவாகும். இதை இரண்டாம் நிலை மூலம் (Secondary Haemorrhoids) எனக் குறிப்பிடுவர். இப்படி உருவாகும்மூலம், நாளடைவில், மலக்குடலை விட்டு வெளியே நீண்டு ஆசன வாயில் தெரியும்.

நோயின் அறிகுறிகளை சரி செய்யாத நிலையில், மேன்மேலும் இரத்தத் தேக்கம் ஏற்படும்பொழுது, மூலம் பெரிதாகி, ஆசன வழி (Anus)யாக வெளியேறி, (Prolapse) பார்க்கும்பொழுதே சாதாரணமாகத் தெரியும். இதை மூன்று நிலையில் குறிப்பிடுவர். முதல் நிலையில், ஆசன வழியே, இரத்தப் போக்கு இருக்கும். ஆனால், மூலம் வெளியே தெரியாது. மலக்குடல் உள்சோதனை மூலமே அறிய முடியும். இரண்டாம் நிலையில், மலம் கழிக்கும்பொழுது மூலம் வெளியே வரும். ஆனால், தானாகவே மலம் கழித்த பின் உள்வாங்கி விடும். மூன்றாம் நிலையிலோ வெளியேறிய மூலம் உள் வாங்காது. இரத்தப் போக்கும் அடிக்கடி உண்டாகும்.

அறிகுறிகள்

இந்நோயின் முதல் அறிகுறி ஆசனவாய் வழியே இரத்தம் கசிவதாகும். ஆரம்ப நிலையில் லேசான இரத்த கசிவு மலம் கழிக்கும்பொழுது உண்டாகும். நாளடைவில் லேசான நோய் முற்றும்பொழுது, அடிக்கடி இரத்தம் ஒழுகத் தொடங்கும். சில நேரங்களில் அதிகளவு இரத்தம் வெளியேறுவதால், ஆடைகளில் நனைந்து வெளியே தெரியும். மலம் கழிக்கும்போது, கழிப்பறைகளில் சொட்டு, சொட்டாக இரத்தம் கொட்டும்.

இந்நிலையை அலட்சியப்படுத்தினால், கடுமையான இரத்தப் போக்கால் ஏற்படும் பின் விளைவாக இரத்த சோகை போன்றவை ஏற்படும். பின்மூலம் பெரிதாகி ஆசனவாய் வழியே வெளியே துருத்திக் (Prolapse) கொண்டு தெரியும். வலியற்ற நிலையில் பெரும்பாலும் ஆரம்ப நிலையில் இருக்கும் மூலம், ஆசனவாய் வழியே துரத்திக் கொண்டுள்ள நிலையில், மலம் கழிக்கும்பொழுது வலியை உண்டாக்கவும் கூடும். சரியாக மருத்துவம் செய்யாத நிலையில் நாளடைவில் வெளியே துரத்தி வரும் மூலம், மீண்டும் உள்ளே செல்லாமல், இரத்தக் கட்டியாக மாறும் நிலை ஏற்படும்.

மூலம் உண்டாகும் இரத்தக் குழாயில் அடைப்பு (Thrombosis) ஏற்பட்டு இரத்தக் குழாய் நெரிக்கப்படும் நிலை ஏற்படும். சில நேரங்களில் இந்த கட்டிகளில் நோய் தொற்று, புண்கள் ஏற்படவும் கூடவும். நீண்ட நாள் மூலக்கட்டிகள் புற்றுநோயாக மாறும் நிலையும் உண்டாகலாம்
Diabetes Mellitus

நீரிழிவு (diabetes) என்பது வளர்சிதைமாற்ற நோய்களின் ஒரு தொகுப்பாகும். தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையில், இந்நோய் உள்ளவர்களின் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும். ஆனால், நீரிழிவு என்பது ஒரு நோயல்ல; இன்சுலின் சமசீர் நிலையை இழப்பதால் ஏற்படுவதாகும். மனித உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியமாக உள்ளது. குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் உயர் இரத்த அழுத்தம், நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிந்து நாளடைவில் அடைபடுதல், இருதயத் தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிகளில் ஏற்படும் நோய் மற்றும் பாரிசவாதம் ஆகியவை ஏற்படக் கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது. இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பது அடிக்கடி சிறுநீர் கழித்தல் (polyuria), அதிகமாக தாகமெடுத்தல் (polydipsia), அளப்பரிய பசி (polyphagia) ஆகிய மரபார்ந்த அறிகுறிகளை உருவாக்குகின்றது.
நீரழிவு நோயின் அனைத்து வகைகளும் 1921-ஆம் ஆண்டு இன்சுலின் உபயோகத்திற்கு வந்ததிலிருந்து சிகிச்சை அளிக்கக் கூடியவையாகவே உள்ளன. இரண்டாம் வகை நீரழிவு நோயினை மருந்துகளின் மூலம் கட்டுபடுத்த முடியும். இருந்தபோதிலும் முதலாம், இரண்டாம் வகை நீரழிவு நோய்கள் இரண்டுமே நாள்பட்ட நோய்களாததால், இவற்றைச் சாதாரணமாக முற்றிலுமாகக் குணமாக்க முடியாது. கணைய மாற்ற சிகிச்சை முதலாம் வகையில் முயற்சிக்கப்பட்டது. ஆனால், பெரும் வெற்றியைச் சாதிக்க முடியவில்லை. பல நோயுறுவான பருமனைக் கொண்டவர்களிலும், இரண்டாம் வகை நீரிழிவுக்காரர்களிலும் இரையக மாற்று வழி இணைப்பறுவை செய்வது வெற்றியைக் கொடுத்துள்ளது. கர்ப்பகால நீரிழிவானது பெரும்பாலும் குழந்தை பிறந்த பின் மறைந்துவிடுகிறது

சர்க்கரை நோய் என்பது நோய் அல்ல ஒரு நிலைதான். அதாவது இயற்கைக்கும் நோயாளிக்கும் உள்ள தொடர்பு அறுந்துவிட்டது என்று பொருள்.
யோகாசனங்கள் என்பது உடல், உள்ளம், ஆன்மா ஆகியவற்றிற்கு நலம் தரும் பயிற்சிகள், ஒவ்வொரு ஆசனமும் நோயை தீர்க்கும் குணம் உடையது. ஆழ்ந்த மூச்சுப் பழக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. அதனால் உடல் உள் உறுப்புகள், கணையம் மற்றும் நாளமில்லா சுரப்பிகளின் (ஆதார சக்கரங்கள்) ஏற்ற இறக்கங்களை சீர் செய்கிறது.
யோகாசன சிகிச்சை எப்படி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது?
நீரிழிவு நோய்க்குத் தரப்படுகின்ற நவீன மருந்துகள் சிறுநீரிலும், ரத்தத்திலும் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. குறைக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், இந்த மருந்துகள் இன்சுலினை சுரக்கச் செய்யும் கணையத்தில் பீட்டா செல்களில் செயல்புரிவது இல்லை. அவற்றைத் தூண்டி இன்சுலினைச் சுரக்கச் செய்வதும் இல்லை. இதன் காரணமாக, கணையமும், இன்சுலினைச் சுரக்கும் லாங்கர் ஹான்ஸ் திட்டுக்களும் நாளடைவில் சுருங்கி சூம்பிப்போய் விடுகின்றன.
ஓசையின்றி உயிரைப் பறிக்கும் நோய் நீரிழிவு நோய். இந்நோயால் கால் பாதங்கள், இருதயம், கண்கள், கிட்னி ஆகிய ராஜ உறுப்புகள் நேரடியாக பாதிக்கப்படும். இன்சுலினைச் சுரக்கச் செய்யும் சுரப்பி சூம்பி விடாமல் அதைத் தூண்டி அதன் செயலை ஒழுங்குபடுத்துவது யோகாசனங்கள் மட்டுமே ஆகும். நீரிழிவுக்கு ஆட்பட்ட ஒருவர் தவறாது யோகாசனங்களை தொடர்ந்து செய்யும் போது சிறுநீரிலுள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. அதே நேரத்தில் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் குறைகிறது. அத்துடன் நீரிழிவு நோயின் காரணமாக, தோன்றுகின்ற கண்பார்வைக் குறைவும், வாதத் தொந்தரவும், தலைச்சுற்றல், அசதி போன்றவையும் நீங்குகின்றன.
உடல் உறுப்பில் கண், காது, மூக்கு, வாய் போன்ற பல உறுப்புகள் வெளிப்பரப்பில் உள்ள சக்தியை வாங்கி உள் பரப்பில் கொடுக்கும், ஆனால், கணையம் மட்டும் உள்பரப்பும், வெளிப்பரப்பும் உறிஞ்சும். இதன் வேலை சக்தியை எடுப்பதுதானே ஒழிய கொடுப்பது இல்லை. கணையத்தின் மேல்பரப்பில் இருக்கும் பாசகா என்ற பித்தம் உறிஞ்சுவது நின்றால் ரத்தத்தில் சர்க்கரை நோயும், கணையத்தின் உட்பரப்பில் இருக்கும் சமாணன் என்ற வாயு உறிஞ்சுது நின்றால் சிறுநீரில் சர்க்கரை நோயும் உண்டாகும் என்கிறது யோக மருத்துவம்.
இப்பயிற்சிகளுடன் உணவுத் திட்டங்களை கடைபிடித்து, ஒழுக்கக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டால், நோயுடன் போராட வேண்டிய நிலை இருக்காது

உடல் பருமன்

உடலில் உண்டாகும் முக்கால் வாசி நோய்களுக்கு முதன்மையான காரணம் என்ன? உடல் பருமன், உடலை மட்டுமல்ல, மனதையும் பாதிக்கும், அதீத உடல் பருமன்.
உடற்பருமன், தேவைக்கு அதிகமாக உள்ள உடல் எடையை குறிக்கும் நாம் உண்ணும் உணவில், நமது தேவைக்கு அதிகமாக கலோரிகள் இருந்து, வெளியே செலவிடும் கலோரிகள் குறைவாக இருந்தால், மீந்த கலோரிகள், படிப்படியாக உடலில் படிந்து, உடல் எடையை அதிகரிக்கும்.
உங்களின் எடையை கண்டுபிடிக்க
1உடல் பருமன் ஏற்படும் காரணங்கள் (ஆயுர்வேதம் சொல்வது)
1. உடலுழைப்பு, உடற்பயிற்சி இன்மை
2. மத்தியானம் தூங்குவது
3. கபத்தை ஏற்றும் உணவு, வாழ்க்கை முறைகள்
4. இனிப்பான பொருட்களை அதிகம் உண்பது. தவறான உணவுப்பழக்கம்
உடற்பருமன் உண்டாக்கும் கோளாறுகள் பல. உடலில் சேர்ந்த கொழுப்பு, இதயம், சிறுநீரகம், கல்லீரல் இவற்றை பாதிக்கும். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, ஆர்த்தரைட்டீஸ் இவையெல்லாம் உண்டாக உடல் பருமன் முக்கிய காரணம் உடல் பருமனை பற்றி விரிவாக எழுத வேண்டுமென்றால், ஒரு புத்தகமே எழுதலாம். இங்கு அது எவ்வாறு ஜீரண மண்டல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று பார்ப்போம்.
உடல் பருமனுக்கு முக்கிய காரணம் – உணவு நாம் உண்ணும் உணவு 7 கட்டங்களில், ரத்தத்தின் மூலம் ஒவ்வொரு அவயத்திற்கும் (திசுக்களுக்கு) செலுத்தப்படுகிறது. தசை, திசுக்கள், அடிப்போஸ் (கொழுப்பு) திசுக்கள், எலும்பு மஜ்ஜை, பிறகு பிறப்புறுக்களின் திசுக்களை இவற்றுக்கு, உணவின் சாராம்சம் சென்றடைகிறது. ஆனர் குண்டானவர்களுக்கு இந்த செயல்பாடு, சரிவர நடப்பதில்லை. கொழுப்பு திசுக்களோடு நின்று விடுகிறது. இதனால் உடலின் சில இடங்களில் கொழுப்பு தேங்கி நிற்கும். எலும்பு மஜ்ஜை திசுக்கள், ஜனனேந்திரிய திசுக்கள் இவற்றுக்கெல்லாம் ஊட்டச்சத்து சேருவதில்லை. மனிதர் குண்டாக தோன்றினாலும், உண்மையில் சக்தி குறைவானவராக இருப்பார்.
ஜீரண மண்டலத்தை பொறுத்தவரை உடற்பருமனால் அஜீரணம், பௌத்திரம், மூலம் ஏற்படும்.
ஆயுர்வேதம், வியாமம் (உடற்பயிற்சி), உதிவர்த்தனம் (உலர் பொடியால் மசாஜ் செய்வது) மற்றும் அப்யங்கம் (எண்ணை மசாஜ்) என்று மூன்று சிகிச்சை முறைகளில் உடற்பருமனை கட்டுப்படுத்தும்.
வியாமம் – எல்லா உடற்பயிற்சிகளை விட சுலபமானது. நடப்பது, தினமும் நடக்க வேண்டும். ஒரு கிலோமீட்டர் நடப்பதிலிருந்து ஆரம்பித்து 5 கி.மீ. வரை தினமும் நடக்க வேண்டும். நீச்சல் கூட நல்ல உடற்பயிற்சி யோகாசனங்களும் பலன் தரும்.
உத்வர்த்தனம் – இந்த சிகிச்சை முறை கொழுப்பை ‘கரைக்கும்’. இதை 2 அல்லது 3 வாரங்கள், (ஒரு நாளில் ஒரு மணி நேரம்) செய்து கொண்டால் உடல் எடை குறையும். திரிபாலா சூரணமும், கொள்ளும் மசாஜ்ஜீக்கு உபயோகிக்கப்படும்.
அப்யங்கம் –  இதனால் கபம், கொழுப்பு குறைகிறது. திசுக்கள் வலுவடைகின்றன. இந்த மூன்றுடன், தேவைக்கேற்ப ஸ்வேதனம் (ஒத்தடம்) சிகிச்சையும் தரப்படும். இதர சிகிச்சைகள் – வமனம் (வாந்தி) வரேசனம் (மலமிளக்கிகள்) கஷாய வஸ்தி (எனிமா), பஞ்சகர்மா சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும்.
ஆயுர்வேதம், வறுத்த கொள்ளுப்பொடி அல்லது சூப், பார்லி, பச்சைப்பயறு, தேன் கலந்த தண்ணீர் இவற்றை தினமும் உட்கொள்ளலாம் என்கிறது.
தவிர ப்ரெட், சர்க்கரை, இறைச்சி, வறுத்த, பொரித்த, கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கவும்.
ஆயுர்வேத மருந்துகள் /அறிவுரைகள்
1. த்ரிபால சூரணம் (ஒரு மேஜைக்கரண்டி) தேனுடன் குழைத்து சாப்பிடவும்.
2. குடூச்சி (சீந்தில்), கடுக்காய் மற்றும் முஸ்தா இவற்றின் கஷாயங்களை குடிக்கலாம்.
3. உணவில் உப்பை குறைக்கவும். உணவுக்கட்டுப்பாடு பருமனை குறைக்கும்
4. உண்ணும் உணவிலிருந்து கிடைக்கும் கலோரிகளை விட, அதிக கலோரியை உழைப்பில் செலவழிக்க வேண்டும்.
அதீத உடற்பருமன் ஆபத்தானது. எனவே பல முறைகளில் முயன்று எடையை குறைக்கவும். ஆயுர்வேத மருந்துகள் உங்களுக்கு உதவும்.
உடல் பருமன், உடற்பருமன், உடல் எடையை, பெண்கள், உடலுழைப்பு, உடற்பயிற்சி, கொழுப்பு, இதயம், சிறுநீரகம், கல்லீரல், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, ஆர்த்தரைட்டீஸ், ஜீரண மண்டலம், தசை, திசுக்கள், அடிப்போஸ் திசுக்கள், எலும்பு மஜ்ஜை, பிறப்புறுக்களின், ஜனனேந்திரிய திசுக்கள், அஜீரணம், பௌத்திரம், மூலம், ஆயுர்வேதம், வியாமம், சிகிச்சை, பஞ்சகர்மா,
.skin disease
அரிக்கும் தோலழற்சி என்பது ஒரு வகை சருமவழல் வியாதியாகும்,[2] இதை மேல்தோல் அழற்சி என்றும் கூறலாம்.[3] அரிக்கும் தோலழற்சி என்ற சொல்லானது நாட்பட்ட தோல் வியாதி நிலைகள் பலவற்றைக் குறிக்க பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. வறட்சி மற்றும் பின்வரும் இயல்புகளில் ஒன்று அல்லது மேற்பட்ட அறிகுறிகளுடன் காணப்படும் அதிகரிக்கும் தோல் தடிப்புகள் ஆகியவை இதில் அடங்கும்: சிவத்தல், தோல் எடிமா (வீக்கம்), நமைச்சல் மற்றும் வறட்சி, பக்கு உதிர்வு, செதில் செதிலாக மாறுதல், கொப்புளம், வெடிப்பு விடுதல், கசிதல் அல்லது இரத்தம் வருதல். தற்காலிக தோல் நிறமிழப்பு காணப்படலாம், சில நேரங்களில் இவை குணமான காயங்களால் கூட உருவாகலாம். குணமாகும் ஒரு காயத்தை சொறிந்தால் அது புண்ணாகலாம். அரிப்புத்தோல் வியாதியுடன் அரிக்கும் தோலழற்சியைக் குழப்பிக்கொள்ளக்கூடாது. தடிப்புத் தோல் அழற்சியைப் போலன்றி, அரிக்கும் தோலழற்சியானது பெரும்பாலும் மூட்டுகளின் மடக்குப் பகுதிகளிலேயே காணப்படுகிறது.
எக்ஸீமா சிரங்கை தமிழில் கரப்பான் புண் என்று கூறுவர்

Throid disease
Thyroid:-

கேடயச் சுரப்பி
கேடயச் சுரப்பி அல்லது தைராய்டுச் சுரப்பி என்பது உடலில் உள்ள மிகப்பெரிய அகச்சுரப்பி களுள் ஒன்று. இது கழுத்துக்குக் கீழ் கேடயக் குருத்தெலும்பு வரை மோதிரவுருக் குருத் தெலும்பின் மட்டத் தில் அமைந்துள்ளது. எவ்வளவு விரைவாக உடல் சக்தியை எரியூட்டு கிறது, புரதத்தை உருவாக்குகிறது, பிற வளரூக்கிகளுக்கு உடல் எவ்வளவு உணர் திறன் கொண்டதாக உள்ளது போன்றவற்றை கேடயச் சுரப்பி கட்டுப்படுத்துகின்றது. தைரொக்சீன் (T4), மூவயடோதைரோனைன் (T3) ஆகிய வளரூக்கிகளைச் சுரப்பதன்மூலமே மேற்படி செயற்பாடுகளில் பங்கு கொள்கிறது. இவ்வளரூக்கிகள், வளர்சிதை மாற்றத்தை நெறிப்படுத்து வதுடன், உடலின் பிற தொகுதிகளின் வளர்ச்சி யையும், செயற்பாட்டு வீதத்தை யும் பாதிக்கின் றது. (T3), (T4) ஆகிய இரு வளரூக்கிகளிலும் அயடீன் முக்கிய கூறாக உள்ளது. கேடயச் சுரப்பி கல்சிட்டோனின் என்னும் வளரூக்கியையும் சுரக்கின்றது. இது உடலில் கால்சியச் சம நிலையைப் பேண உதவுகின்றது.
What Does the Thyroid Do?
The hormones produced by the thyroid gland regulate how the body's cells use energy and how "fast" the body's metabolism works. This gland also affects the rate of growth on the hair and bones; the body's weight, temperature and energy level; as well as the function of the heart and digestive system. Thyroid disease is a very common endocrine disorder, especially in women.

Types of Thyroid Disease
Hypothyroidism, or underactive thyroid, is a disease in which the thyroid produces less hormones than needed for normal body function. Symptoms include thin, brittle nails and hair, weight gain, fatigue, decreased heart rate, constipation, and feeling cold.

Hyperthyroidism, or thyrotoxicosis, is a disease in which the thyroid produces too many hormones. Symptoms include hair loss, weight loss, increased heart rate, nervousness, frequent bowel movements, perspiration, and menstrual irregularities in women.

There are several types of thyroid disorders:
1) Hypothyroidism (underactive thyroid)   2) Hyperthyroidism (overactive thyroid)   3) Postpartum thyroidis   4) Thyroid cancer.
Headache
ஒற்றைத் தலைவலியா? இரட்டைத் தலைவலி, மண்டையிடி, மண்டைக் குத்தல், தலைபாரம். ?

எவ்வளவு பொதுவாக ஏற்படுகிறது? மாத்திரைகளால் கட்டுப்படுத்திவிடலாமா? எத்தனை வகைகள் இருக்கிறது? எந்தவிதமாக இருக்கும் போது ஒரு டாக்டரைச் சந்திக்க வேண்டும்? நாம் சாப்பிடுகிற உணவு தலைவலியை உருவாக்க கூடுமா?



உலகம் முழுக்க இப்பொழுது கவனிக்கப்படுகிற பிரச்னை, இல்லாதது போல பிரச்னை ஆகிற விஷயங்களில் மருத்துவ உலகின் கவனத்தைக் கவர்வது தலைவலி. தலைவலியா? என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்.

ஆனால் உண்மை அதுதான். 90 சதவிகித மக்களை எந்தப் பாகுபாடும் இல்லாமல் பாதிப்பதில் தலைவலி முக்கிய இடத்தைப் பெறுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி உலகில் முன்னணியில் இருக்கிற டிஸ்எபிலிடி ஏற்படுத்தும் முதல் இருபது காரணங்களில் மைக்ரேன் தலைவலியும் இருக்கிறது!

தலைவலிக்கென்று தனி மருத்துவமனைகள் உலகின் முக்கிய நகரங்களில் வர ஆரம்பித்துவிட்டன. தலைவலிக்கு மட்டும் தனியாக டாக்டர்கள் வந்துவிட்டார்கள்.

டாக்டர் ஜெயஸ்ரீ கைலாசம் இதில் சென்னையில் கவனத்திற்கு உரியவர். இன்டர்னல் மெடிசனில் அமெரிக்க பட்டம் பெற்றவர். சிக்காகோ, ஆஸ்டின் மருத்துவமனைகளில் பயிற்சி பெற்றவர். ஹாஸ்டன் தலைவலி மருத்துவமனையில் பல்வேறு ஆய்வுகளில் பங்கு பெற்றவர். தற்சமயம் அப்பல்லோ மருத்துவமனையில் பணி.

தலைவலி பற்றி சில அடிப்படையான கேள்விகளுக்கு அவர் தந்திருக்கும் எளிமையான பதில்கள் இவை...

தலைவலி என்பது எவ்வளவு பொதுவாக ஏற்படுகிறது?
மிக மிக அதிகமாக, மிக மிகப் பொதுவாக ஏற்படுகிற பிரச்னைகளில் தலைவலி தலையானது! உங்கள் குடும்ப மருத்துவரைச் சந்திக்கும் மிக அதிகமான பத்து காரணங்களில் தலைவலியும் ஒன்று என்பதை நீங்கள் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்! ஆனால் உண்மை அதுதான்.

தவிர பொதுமக்களால் அலட்சியமாகக் கையாளப்படுகிற பிரச்னைகளில் தலைவலியும் அதிகமாக இருக்கிறது என்பது மற்றொரு ஆச்சரியமானது!

தலைவலியில் எத்தனை வகைகள் இருக்கிறது?இரண்டு வகை. முதல் வகையை ப்ரைமரி ஹெட் ஏக் என்கிறார்கள். உடல் ரீதியாக ஒரு மாற்றம் ஏற்படும் போது தலையில் மூளையைச் சுற்றி உள்ள இரத்தக் குழாய்கள் விரிவடைந்து தளர்ந்து மூளையிலும் அதைச் சுற்றிலும் உள்ள நரம்புகளை அழுத்துகின்றன. இந்த நேரத்தில் ஏற்படும் தலைவலியை ப்ரைமரி ஹெட்ஏக் என்கிறோம்.

மற்றபடி மூளையில் கட்டி, அடிபட்டிருத்தல், நோய்த் தொற்று இருத்தல் போன்ற காரணங்களால் ஏற்படுகிற தலைவலியை செகன்டரி ஹெட்ஏக் என்கிறோம். பொதுவாக முதல் வகை தலைவலிக்கு எந்த வகையான நேரடி காரணமும் இருக்காது.

எந்தவிதமாக இருக்கும் போது ஒரு டாக்டரைச் சந்திக்க வேண்டும் என்று நீங்கள் அறிவுறுத்துவீர்கள்?
ஒரு தலைவலி கூடவே துணையாக பார்வையில் மாற்றம், இரத்த ஓட்டம் குறைந்த நமநமப்பு, குமட்டல், வாந்தி, மயக்கம் போன்ற ஏதோ ஒன்றோ இருக்குமானால் நீங்கள் கண்டிப்பாக உடனே ஒரு மருத்துவரைச் சந்திக்க வேண்டும். இது மூளைக்கட்டி, இரத்தக் கசிவு, நோய்த் தொற்று போன்ற ஏதோ ஒன்றோடு தொடர்பில் இருக்கலாம்.

மைக்ரேன் தலைவலி எப்படி இருக்கும்?

தலைவலியில் பிரபலமான ஒற்றைத் தலைவலிதான் இந்த மைக்ரேன் தலைவலி. தாங்க முடியாத ஒருபுறத் தலைவலி ஏற்பட்டு குமட்டல், வாந்தி, வெளிச்சம், தாங்க முடியாத நிலை என கலந்து வரும் இந்தத் தலைவலியில். இந்த வகை தலைவலி 18 சதவிகித பெண்களையும், 6 சதவிகித ஆண்களையும் தாக்குகிறது.

முதல்தர தலைவலியில் ஏதேனும் வகைகள் இருக்கின்றனவா?

இருக்கிறது. இதில் மைக்ரேன் தலைவலி வருகிறது. டென்ஷன் டைப் தலைவலி வருகிறது. கிளஸ்டர் ஹெட் ஏக் என்று சொல்லக் கூடிய கொத்துத் தலைவலி போன்றவை கூட வருகிறது.

முதல் வகை தலைவலிக்கு பிரதான காரணமாக இருப்பது எது? டென்ஷனால் வருகிற தலைவலிதான் முதல் வகை தலைவலிகளில் பிரதானமானது.

இப்படி டென்ஷனால் வருகிற தலைவலி மூன்றில் இரண்டு பங்கு ஆண்களையும், ஏறக்குறைய 80 சதவிகித பெண்களையும் பாதிக்கிறது என்று வளர்ந்த நாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு சர்வே தெரிவிக்கிறது.

மன அழுத்தம் அல்லது டென்ஷன் தலைவலியை உருவாக்குகிறது என்பதல்ல. இது ஒரு வசதிக்காகவே சொல்லப்படுகிறது. டென்ஷனால் ஏற்படுகிற தசை இறுக்கமே அந்த தலைவலிக்கு முக்கிய காரணம்.

கொத்து தலைவலி எப்படி இருக்கும்?
தலையில் ஒரு பக்கம் வலி ஏற்பட்டு அதே பகுதி கண்ணில் சிவப்பும், நீர்ச் செறிவும் நிறைந்து காணப்படும். கை, காலில் வெட்டு ஏற்பட்டால் ஏற்படும் வலியை விட இந்த வகையில் அதிக வலி இருக்கும். பெண்களைவிட ஆண்களையே இந்தத் தலைவலி அதிகம் தாக்குகிறது.

மைக்ரேன் வகை தலைவலியைக் கண்டறிய ஏதேனும் பரிசோதனைகள் செய்ய வேண்டுமா?

இந்த வகைத் தலைவலியைக் கண்டறிய குறிப்பிட்ட பரிசோதனைகள் எதுவும் இல்லை. மற்ற கவலைப்படக் கூடிய காரணங்களால் தலைவலி ஏற்பட்டிருக்கிறதா என்பதை மட்டும் அறிந்து தவிர்க்க சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், அடிப்படை இரத்தப் பரிசோதனைகள் சிலருக்குத் தேவைப்படலாம்.

அடிக்கடி மாத்திரை சாப்பிடுவதால் கூட சிலருக்கு தலைவலி ஏற்படும் என்கிறார்களே?
ஆம். உண்மைதான். சிலர் இஷ்டத்திற்கும் மாத்திரைகள் பயன்படுத்துகிறார்கள். இதனைக் குறைக்க முயலும் போது தலைவலி ஏற்படும். இந்த வகை தலைவலியிலிருந்து விடுபட நிச்சயம் ஒரு மருத்துவரின் உதவி தேவை.
Headache

பலரு‌க்கு‌ம் கால‌ம் காலமாக தலைவ‌லி‌ப் ‌பிர‌ச்‌சினை இரு‌க்கு‌ம். ஆனா‌ல் அவ‌ர்களோ எ‌ளிதாக வ‌லி ‌நிவாரண மா‌த்‌திரை ஒ‌ன்றை வா‌ங்‌கி போ‌ட்டு‌க் கொ‌ண்டு கால‌த்தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள்.
ஆனா‌ல் உலக‌த்‌தி‌ல் பலரு‌க்கு‌ம் தலைவ‌லி எ‌ன்ற ஒரு ‌வியா‌தி ‌நி‌ச்சய‌ம் வ‌ந்‌திரு‌க்கு‌ம். ஒ‌வ்வொரு தலைவ‌லி‌க்கு‌ம் ப‌ல்வேறு காரண‌ங்க‌ள் இரு‌க்கலா‌ம். மாணவ‌ர்களு‌க்கு ‌சில சமய‌ங்க‌ளி‌ல் அ‌திகமான தலைவ‌லி வரு‌ம். அத‌ற்கு‌க் அவ‌ர்களது கண் கோளாறு காரணமாக இரு‌க்கு‌ம். க‌ண் கோளாறு காரணமாக தலைவலி வந்தால் கண்ணாடி போட்டுக் கொள்ளலாம்.

கண் நீர் அழுத்த நோய் இருந்தால் காலையில் தூங்கி எழுந்தவுடன் தலைவலி வரும். சாதாரணமாக கண் மூடி உட்கார்ந்தாலோ அல்லது இருட்டில் உட்கார்ந்தாலோ தலைவலி வரும் நப‌ர்களு‌ம் உ‌ண்டு.

ரத்த அழுத்தம் அதிகரித்தல் அ‌ல்லது பல் சொத்தை, சைனஸ் பிரச்சினை ஆகிய காரணங்களாலும் தலைவலி வரும். எ‌ந்த காரண‌த்‌தி‌ற்காக தலைவ‌லி வரு‌கிறது எ‌ன்பதை அ‌றி‌ந்து அத‌ற்கு‌ண்டான மரு‌ந்துகளை உ‌ட்கொ‌ள்வதுதா‌ன் ஆரோ‌க்‌கிய வா‌ழ்‌‌வி‌ற்கு வகை செ‌ய்யு‌ம்

SEMINAL DISORDERS
seminal vesicles profile in touch with the prostate, the vas deferens, urethra, bladder and other adjacent, and each other traffic, so Seminal often secondary to other organs, reproductive system, urinary tract infection.
Seminal pure rare, but chronic inflammation of the seminal vesicle can cause infertility. 90% of semen seminal vesicle secretions, which can be sperm use fructose as a power source; seminal vesicle inflammation reduce these secretions, can affect sperm motility; semen volume is not enough filling posterior fornix of the semen pool can also cause infertility .
Seminal can be divided into acute and chronic types. Jing Nangyan more with prostatitis occur together, we must strictly distinguish prostatitis or Jingnang Yan is sometimes difficult, Seminal often involving both sides of the inflammation than by bacteria along the urethra through the ejaculatory duct after retrograde infection or epididymitis bacterial invasion of seminal vesicles along the vas deferens caused. Common E. coli bacteria infection, followed by staphylococcus, streptococcus, type diphtheria bacilli.
Seminal vesicle inflammation seminal vesicle mucosa congestion and edema, glandular inflammation may be due to blocking the formation of abscess, seminal vesicle abscess will spread to adjacent tissue after perforation of seminal vesicle invasion of surrounding tissue.
Seminal clinical manifestations of acute and symptoms similar to acute prostatitis. The performance of perineal pain, pain radiating to the groin, and suprapubic lumbosacral; there with fever and increased white blood cell, etc.; sometimes accompanied by semen retention, swelling the patient a sense of urgency; if associated with adjacent organs, infection, may cause abdominal pain; chronic Seminal, often concurrent with chronic prostatitis, and blood-based sperm, semen, pink, red or with a blood clot, sexual intercourse may be painful; as mental fear, tension and other reasons there may be sexual loss and other sexual dysfunction and other symptoms
iMPOTENCY
ஆண்மையின்மை

ஆண் உறுப்பு விரைப்படையாத நிலைக்குத் தள்ளப்படுவதை ஆண்மை யின்மை என்கிறார்கள். ஆண் களைப்பாகவோ, நோயாகவோ அல்லது மனம் சார்ந்த பாதிப்புகள், நரம்பு மண்டலக் கோளாறுகள், சில மருந்து மாத்திரைகள், புதிய சூழல்கள் போன்றவற்றால் விரைப்புத் தன்மையை இழந்துவிடும் போது இந்த நிலை உண்டாகிறது.

Erectile dysfunction, also called impotence, is defined as a man’s inability to get an erection or maintain it long enough to have sex with a partner. For some men, impotence means they are unable to ejaculate during sex.

Erectile dysfunction or impotence happens to most men at one time or another, but studies indicate that erectile dysfunction is more common in older men, so it is often associated with the aging process in men.

Occasional impotence is often not seen as a problem, but when impotence continues for awhile, it can bring on great emotional distress for both the man and his partner.
ommon Causes of Impotence or Erectile Dysfunction
Erectile dysfunction can be caused by emotional problems:
  • Worry
  • Fear
  • Stress
  • Anger
  • Depression
  • Lack of interest in sex, or in the sexual partner
Erectile dysfunction can also have physical causes:
  • Reduced testosterone level, which can be treated with hormone therapy
  • A side-effect from some medications, including meds for depression, heart disease, high blood pressure and epilepsy
  • An injury to the groin, or nerve damage
  • Illnesses including kidney or heart disease, or diabetes, can cause erectile dysfunction
  • A reduction in blood flow to the penis, common in men who have hardening of the arteries
  • Overuse or abuse of drugs including alcohol, tobacco and recreational drugs
  • A possible side-effect of some medical procedures, including prostate or urinary tract surgery
வலிப்பு நோய்
வலிப்பின் பிரிவுகள்
வலிப்பு மற்றும் காக்காய் வலிப்பின் பிரிவுகள்.

வலிப்புகளைப் பிரதானமாக இரு வகைப்படுத்தலாம்.
உடல் முழுவதுமான வலிப்பு
பகுதியான வலிப்பு.
காக்காய் வலிப்பின் போது ஒரே வகையான வலிப்புகள் மீண்டும் மீண்டும் உருவாகும். ஆயின் சிலரில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வகையான வலிப்புகள் உருவாகின்றன.
உடல் முழுவதுமான வலிப்பின் வகைகள்
உடல் விறைப்பு நடுக்கத்துடன் கூடிய வலிப்பு (Tonit clonic seizure)
மிக அதிகமானோரில் காணப்படும் உடல் முழுவதுமான வலிப்பு ஆகும். வலிப்பின் போது உடல் விறைப்படைகிறது, மூர்ச்சை இழக்கப்படுகிறது, தசைச் சுருக்கங்கள் காரணமாகப் உடல் நடுக்கங்கள் ஏற்பட ஆரம்பிக்கின்றன.

சடுதியான மூர்ச்சை இழப்புடன் கூடிய வலிப்பு (Absense seizure)
மற்றுமொரு வகையான உடல் முழுதுமான வலிப்பாகும். இதன் போது மிகச்சொற்ப நேரத்துக்கு மூர்ச்சை இழத்தல் ஏற்படுகிறது. ஆயின் தசைச் சுருக்கங்கள் காரணமான உடல் நடுக்கங்கள் காணப்படாது. இது பொதுவாக சில செக்கன்களே நீடிக்கும். இது பிரதானமாக சிறிவர்களிலேயே ஏற்படுகிறது.
தசைச் சுருக்கத்துடனான வலிப்பு. (Myoclonic seizure)

சடுதியாக ஏற்படும் தசைச் சுருக்கங்கள் காரணமாக ஏற்படும் திடீர் அங்க அசைவுகளாகும். இது முழு உடலையும் பாதிக்கலாம். ஆயின் பொதுவாக ஒருபக்கத்திற்குரிய கைகளிலோ இரு கைகளிலுமோ ஏற்படுகிறது.

 விறைப்படைகின்ற வலிப்பு (Tonic seizure)

இது சொற்ப நேர மூர்ச்சை இழப்பினை ஏற்படுத்தும். அத்துடன் அந்நபரில் உடல் விறப்படைந்து கீழே விழக்கூடும்.

சடுதியான நிறுத்த வலிப்பு (Atonic seizure)

இது தொடர்ந்து நடக்க முடியாத நிலையினையும் மயக்க நிலையினையும் ஏற்படுத்தும். பொதுவாக சொற்ப நேர மூர்ச்சை இழப்பினையே ஏற்படுத்தும்.
 
வலிப்பு நோய் அறிமுகம்
வலிப்பு நோய் அறிமுகம்:
வலிப்பு என்றால் என்ன?
வலிப்பு என்பது மூளையில் ஏற்படும் சடுதியான மின்கணத்தாக்க செயற்பாடு காரணமான நோய்க்குணங்குறியாகும். பொதுவாக வலிப்பானது சில செக்கன்கள் அல்லது விநாடிகளே நீடிக்கும்.
மூளையில் பல மில்லியன் கணக்கான நரம்புக்கலங்கள் காணப்படுகின்றன. சாதாரணமாக நரம்புக்கலங்கள் தொடர்ச்சியாக மிகச்சிறிய மின்கணத்தாக்கங்களை தமது நரம்பு நாரினூடாக உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் கடத்துகின்றன. மூளையின் வெவ்வேறு பகுதிகள் உடலின் வெவ்வேறு பகுதிகளையும் அவற்றின் தொழிற்பாடுகளையும் கட்டுப்படுத்துகின்றன. எனவே வலிப்பின் போது ஏற்படும் குணங்குறிகள் மூளையின் எப்பகுதியில் மின்கணத்தாக்கமானது உருவாகின்றது என்பதைப்பொறுத்து அமைகின்றது.
இவ்வலிப்பின் போதான குணங்குறிகள் தசைத் தொழிற்பாட்டையோ, உடல் உணர்ச்சிகளையோ, நபரின் நடத்தைகளையோ, உணர்ச்சிகளையோ பாதிக்கலாம் அத்துடன் மூர்ச்சையிழக்கும் நிலையையோ இவற்றில் பலவற்றின் கூட்டான குணங்குறிகளையோ ஏற்படுத்தலாம். இதன்படி பல்வேறுவகையாக இவ்வலிப்பு நோயை வகைப்படுத்தலாம்.

காக்காய் வலிப்பு/வலிப்புநோய் என்றால் என்ன?
வலிப்பு நோய்/காக்காய் வலிப்பு என்பது மீண்டும் மீண்டும் ஏற்படும் வலிப்பு ஆகும்.
ஒரே ஒரு தடவை மட்டுமே வலிப்பு ஏற்பட்டிருப்பின் அது காக்காய் வலியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 20 பேரில் ஒருவரில் வாழ்நாளில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வலிப்பு ஏற்பட்டிருக்க முடியும். காக்காய்வலிப்பை வரைவிலக்கணப்படுத்தும் போது ஒன்றுக்கு மேற்பட்ட வலிப்புகள் உருவாகும் நிலை எனக்கொள்ளப்படும்.
வலிப்பு ஏற்படும் தடவைகள் வேறுபடும். சிலரில் ஆண்டுகள் இடைவெளியிலும் வேறு சிலரில் நாளாந்தமும் ஏற்படலாம்.
காக்காய் வலிப்பானது மூளையினுள்ளிருந்து ஆரம்பிக்கிறது. ஆயின் வலிப்பானது வெளிக்காரணிகள் மூளையினைப் பாதிப்பதாலும் உருவாகலாம். உ-ம். மிக உயர் காய்ச்சல் வலிப்பினை ஏற்படுத்தக்கூடியது. மற்றும் வலிப்பை ஏற்படுத்தக்கூடிய காரணிகளாக, போதுமான ஒட்சிசன் வாயு கிடைக்காமை, மிகத்தாழ்வான குருதி குளுக்கோசின் அளவு, சில மருந்து வகைகள், நச்சுப்பொருட்கள், உயர்ந்த மதுபானப்பாவனை போன்றவை காணப்படுகின்றன. இவ்வாறு வெளிக்காரணிகளால் ஏற்படும் வலிப்புகள் காக்காய்வலிப்பாக கொள்ளப்படுவதில்லை
சுவாசத்தின் மூலம் நமது ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு உடல் இயக்கம் எந்த தடையும் இன்றி நடந்து வருகிறது. சுவாச செயல்பாட்டில் பிரச்னை வருவதை ஆஸ்துமா என்கிறோம். சுவாசக் குழல் சுருங்குதல், நுரையீரல் வீங்குதல் போன்ற காரணங்களால் இது உண்டாகிறது. சாதாரண மூச்சு திணறல் தானே என்று கண்டுகொள்ளாமல் விட்டால், நுரையீரல் புற்று நோய்க்கு வழிவகுத்து விடும் என்கிறார் ஹோமியோ மருத்துவர் சசிக்குமார். அவர் கூறியதாவது: சுவாசப் பிரச்னைதான் ஆஸ்துமா. பெரும்பாலும் இதன் தொடக்கம் அலர்ஜிதான். நுரையீரல் நோய்களும் சுவாச தடையை உருவாக்குகின்றன.

தூசு, மண், விலங்குகளின் ரோமம் மற்றும் குளிர் காலநிலை ஆகியவற்றால் அலர்ஜி உண்டாகிறது. இதன் மூலம் நுரையீரலை சுற்றியுள்ள சவ்வு வீங்குகிறது. சுவாசக் குழல் இறுகி சுற்றளவு குறைந்து மூச்சு திணறலை ஏற்படுத்துகிறது. சிலந்தி வலையில் உள்ள டஸ்டிநைட்டி என்ற பாக்டீரியாவும், ரைனோ வைரசும் மூச்சு திணறலை ஏற்படுத்துகின்றன. நுரையீரல் அலர்ஜி மற்றும் தொற்றின் காரணமாகவும் ஆஸ்துமா ஏற்படுகிறது. பொதுவாக இந்த அலர்ஜி பிரச்னையால் அதிகாலை மற்றும் நடு இரவு நேரங்களில் மூச்சு திணறல் ஏற்படும். சிலருக்கு அதிகாலை நேரங்களில் தொடர் தும்மல் போன்ற தொல்லைகள் தாக்க வாய்ப்புள்ளது.

சுவாச பிரச்னையின் காரணமாக உடலுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் மூளை அமைதியற்ற நிலையில் காணப்படும். தூக்கம் வராமல் தவிப்பது, நிம்மதியின்றி இருக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இவை ஆஸ்துமாவின் அறிகுறிகளாகும். எந்த மருத்துவமும் செய்து கொள்ளாமல் இருத்தல் அல்லது பிரச்னை உண்டாகும்போது மருந்து கடையில் ஏதாவது ஒரு மருந்தை வாங்கி சுய மருத்துவம் செய்து கொள்ளுதல் போன்றவற்றால் ஆஸ்துமா குணமாகாது. மேலும் இது நுரையீரல் புற்றுநோய் வரை கொண்டுவிட வாய்ப்புள்ளது.

குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆஸ்துமாவால் அதிகளவு பாதிப்புக்கு உள்ளாகின்றனர். குழந்தைகளுக்கு தொடக்கத்தில் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் முற்றிலும் குணமாக்க முடியும். வயதானவர்களையும் இது எளிதில் தாக்குகிறது. இவர்கள் அலர்ஜிக்கான காரணத்தை கண்டறிந்து தவிர்ப்பதுடன் உடனடியாக சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டியது அவசியம். புகை பிடிக்கும் பழக்கத்தால் நுரையீரல் பாதிப்பின் காரணமாக ஆஸ்துமா உண்டாக வாய்ப்புள்ளது. எனவே கண்டிப்பாக புகை பிடிப்பதை கைவிட வேண்டும்.

பெண்கள் அதிக நேரம் சமையல் அறையில் இருப்பது, தண்ணீரில் வேலை செய்வது போன்ற காரணத்தால் இந்நோய்க்கு அதிகளவில் ஆளாகிறார்கள். அதிகாலையில் எழுந்து சமைப்பது போன்ற அன்றாட நடைமுறைகளில் சில பாதுகாப்பு முறைகளை கையாள்வதன் மூலம் ஆஸ்துமா மற்றும் தும்மல் போன்ற பிரச்னைகளை தடுக்க முடியும்

women disease -unit5




1. Ths monthly period
பெண்கள் படும்பாட்டில் தலையானது மாதவிடாய் கோளாறுகள். ஆரோக்கியமான பெண்ணின் அடையாளம் ஒழுங்காக குறிப்பிட்ட நாட்களில் நிகழும் “மூன்று நாட்கள்” மாத விலக்கு சரிவர நிகழ வேண்டும். மருத்துவம் முன்னேறிய இந்த நாட்களிலும் ஒரு தற்காலத்திய நவீன பெண்கள் இந்த மாத சுழற்சி கோளாறுகளுக்கு, பழங்கால கிராமத்துப் பெண்களை விட அதிகம் ஆளாகிறார்கள். அந்த காலத்திய அமைதியான வாழ்க்கையும் இந்த கால பரபரப்பு வாழ்க்கையும் காரணமாகலாம்.

* மாதச் சுழற்சி சரியான நாள்களில் ஏற்படும். ஆனால் உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். இதை மெனோராகியா என்பார்கள். இது சராசரி உதிரப்போக்கை விட அதிகமாக போகிறது என்று எப்படி தெரிந்து கொள்வது நீங்கள் ‘சாணிடரி பேடுகளை’/ நாப்கின் பயன்படுத்துவராக இருந்தால் எவ்வப்போது மாற்றுகீர்கள், அடிக்கடி மாற்றும் படி நேர்கிறதா? என்பதை கவனித்தாலே தெரிந்து விடும். இந்த உதிரப்போக்கு ஒரு வாரம் வரை இருந்தாலும் அணிந்த ஒரு மணி நேரத்துக்குள் நேப்கின் முழுவதும் ரத்தக் கசிவு இருந்தால் அபரிமித ரத்தப்போக்கு எனலாம்.

* இது வலி, வேதனையுடன் கூடிய உதிரப்போக்கை குறிக்கும். முதல் கட்டத்தில்அடிவயிற்றில் இனந்தெரியாத வலி. இது மாதவிடாய் ஆரம்பிக்கும் முன் தோன்றலாம். இல்லை மாதவிடாயுடன் வரலாம். கூடவே தலைசுற்றல், வாந்தி, தலைவலி, மயக்கம், மலச்சிக்கல் இல்லை எதிர்மாறாக பேதி இவைகள் உண்டாகும். இதன் காரணம் சரியாக தெரியவில்லை. அதிகமான (கர்பப்பை சுருங்கி விரிய காரணமான ஹார்மோன்) சுரப்பினால் ஏற்படும் என்று கருதப்படுகிறது.

இரண்டாம் நிலையில் வயதானவர்களை பாதிக்கும். அடிவயிறு இறுக்கம், வலி, இடுப்பு, மூட்டுவலிகள், மாதவிடாய்க்கு 2-3 நாட்கள் முன்பே தோன்றும் 2 வாரங்கள் வரை கூட இந்த வலிகள் இருக்கும். காரணம் – இடுப்பு எலும்புகளின் நோய் கர்பப்பை, ஓவரீஸ் இவற்றின் திசுக்கள் வியாதிப்படுதல்,  கட்டிகள், கர்பப்பை சிதைவு போன்றவை. மாதவிடாய் கால விளைவுகள் இவைகளும் மாதவிடாய் காலங்களில் வேதனையை உண்டாக்கும்.

* மாதவிலக்கு நார்மலாக வரும் சமயங்களில் வராமல் வேறு நாட்களில், அடிக்கடி, இடைவெளிகள் சரியாக இல்லாமல் ஏற்படும் உதிரப்போக்கை மெட்ரோராகியா  என்பார்கள்.

* மாதவிலக்கு 21 நாட்களுக்குள் ஏற்பட்டால் அது ‘பாலி மெனோரியா’ எனப்படும்
Absence of of mother milk- ?
If your not follows below -this will happen
தாய் பால் சுரக்க அதிக புரத சத்துள்ள மிதமான மாவு சத்துள்ள உணவுப்பொருட்களை சாப்பிட வேண்டும. தானியங்கள், முளைகட்டிய தானியங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால், பால்வகைப் பொருட்கள், மீன் ஆகியவற்றை உணவில் அதிக  அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.  
வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் அதிகமாகவுள்ள கேரட், பீட்ரூட், கோஸ், பச்சைக்காய்கறிகள், கீரை வகைகள் இவற்றில் தினமும் கண்டிப்பாக ஒவொன்றாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  தாய் தினமும் 5 அல்லது 6 கப் பால்  குடித்தால் குழந்தைக்கு அதிக அளவு தாய்ப்பால் கிடைக்கும்.  
இரும்புச்சத்தும், வைட்டமின் பி12ம் அதிகமுள்ள உணவுப்பொருட்களான அவல், கோதுமை, சோயாபீன்ஸ், சுண்டைக்காய், கொத்தமல்லி, பேரீச்சம்பழம், திராட்சை பழம், வெல்லம், கேழ்வரகு, சீரகம் போன்றவற்றை உணவில் அதிக அளவு சேர்த்து கொள்ளும் போது குழந்தைக்கு போதுமான அளவிற்கு பால் கிடைக்கும்.  
கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையில் அதிக புரதமும், மாவுச்சத்தும், வைட்டமின்களும் இருப்பதோடு பிரோகஸ்ட்ரான், ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியை இது பெருக்குகிறது. இது பால் நிறைய சுரக்க அதிகம் உதவுகிறது.  
இக்கீரையை தினமும் சேர்த்துக் கொள்வதன் மூலம் குழந்தையின் வயிறு நிறையும். அசைவ உணவில் கல்லீரல், மண்ணீரல், மிகவும் சிறந்தது. மீனும் பால் சுரக்க வழி வகுக்கும். குழந்தைகள் ஆரோக்கியமாக வளர தாய்ப்பால் மிகவும் அவசியம்.  
அதனை நல்ல முறையில் தருவது தாயின் கடமை ஆகும். எனவே சத்துள்ள உணவினை தாய் சாப்பிட்டுவதன் மூலம் எதிர்கால சந்ததியினை நோய்கள் தாக்காமல் பார்த்து கொள்ளலாம்

மெனோபாஸ் – மாதவிடாய் மறையும் காலம்

பெண்களுக்கு பொதுவாக 45 லிருந்து 55 வயதுக்குள் ஒவ்வொரு மாதமும் ஏற்படும் முட்டை உற்பத்தி குறைந்து மாதவிடாய் வருவது நின்று விடுகிறது. இதனையே மெனோபாஸ் (விமீஸீஷீஜீணீusமீ) எனவும் இறுதி மாதவிடாய் நிறுத்தம் எனவும் கூறுகின்றோம். இது பெரும்பாலான பெண்களுக்கு இயல்பாக தெரியாமலேயே எந்த தொந்தரவும் இல்லாமல் ஏற்படுகின்றது. மாதவிடாய் நிரந்தரமாக நின்ற பிறகு பெண்களுக்கு குழந்தை இனி பிறக்காது. மருத்துவரீதியாக இந்த நிலை ணிறீமீஸ்ணீtமீபீ திஷீறீறீவீநீறீமீ ஷிtவீனீuறீணீtவீஸீரீ பிஷீக்ஷீனீஷீஸீமீ லிமீஸ்மீறீ (திஷிபி) என்றும் குறிப்பிடப்படுகிறது.
மாதவிடாய் நிரந்தரமாக நிற்பதை பல பெண்மணிகள் அதுவும் வேலைக்கு செல்பவர்கள் விரும்பி வரவேற்பார்கள். இந்தநிலையால் மாதாந்திர விலக்கு தொல்லை மற்றும் எதிர்பாராமல் கர்ப்பம் ஏற்படும் பயத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது. சில பெண்களுக்கு நமக்கு வயதாகி விட்டதே என்ற உணர்வு வரலாம்.
சுமார் 30 சதவிகித பெண்களுக்கு விமீஸீஷீ-றிணீusமீ பல தொல்லைகளை தரலாம். மருத்துவம் மிகவும் முன்னேறிய இந்த காலத்தில் பெண்கள் விமீஸீஷீ-றிணீusமீ பற்றி தெரிந்து வைத்திருப்பது நல்லது.
மெனோபாஸ் தரும் தொல்லைகள்
• திடீரென சூடாக உணர்வது
• திடீரென இரவில் வியர்ப்பது
• இனப்பெருக்க உறுப்பு உலர்ந்து காணப்படுவது
• தேவையற்ற ரோமங்கள் வளர்வது (குறிப்பாக முகத்தில்)
• சருமம் உலர்ந்து காணப்படுவது
• பின்னர் எலும்புகள் வலுவிழந்து எளிதாக உடையும் தன்மையை அடைவது
• இரத்த நாளங்கள் குறுகி விடுவது.
இத்தகைய பாதிப்புகள் வராமல் தவிர்ப்பதற்கும் வந்த பிரச்சனைகள் குறைவாக ஆகுவதற்கும் அதிக பால் அருந்துவது மிக மிக அவசியம் பாலில் அதிக கால்ஷியம் மற்றும் வைட்டமின் ஏ சத்து உள்ளதால் மாதவிடாய் இறுதியாக நிற்கும் சமையத்தில் ஏற்படக்கூடிய கால்ஷியம் இழப்பை ஈடு செய்கின்றது.
உடற்பயிற்சி மேற்கொள்வது நிலைமை மேலும் மோசமடைவதை தவிர்க்கும். மெல்லோட்டம், நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் பயிற்சி, போன்றவை நல்ல பலன் தரும்.
பெண்மணிகளின் இயல்பு பாலுணர்வு சம்மந்தப்பட்ட ஹார்மோன்கள் ணிstக்ஷீஷீரீமீஸீ மற்றும் றிக்ஷீஷீரீமீstமீக்ஷீஷீஸீமீ. உடல் இயக்கத்துக்கும், குழந்தைகள் பெறுவதற்கும் ணிstக்ஷீஷீரீமீஸீ தேவை. ளிஸ்ணீக்ஷீவீமீs (சினைப்பை) இந்த இரண்டு ஹார்மோன்களையும் உற்பத்தி செய்கிறது. விமீஸீஷீ-றிணீusமீ இந்த 2 ஹார்மோன்களின் உற்பத்தி குறையும்போது ஏற்படுகிறது.
விமீஸீஷீ-றிணீusமீ ஏற்படும் சராசரி வயது 52. சாதாரணமாக 45 வயதிலிருந்த 55 வயதுக்குள் ஏற்படுகிறது. இதற்கு முன்பாகவே மாதவிடாய் நின்றுவிடலாம். ஒரு பெண்ணிற்கு 40 வயதுக்கு முன்பே மாதவிடாய் நின்றுவிட்டால் காரணங்கள். கதிரியக்கம் (ஸிணீபீவீணீtவீஷீஸீ), புற்றுநோய் மருந்துகளின் பக்கவிளைவுகளால், புகைபிடித்தல், சினைப்பைக்கு (ளிஸ்ணீக்ஷீவீமீs) ரத்தஒட்டம் சில அறுவை சிகிச்சைகளால் குறைந்துவிடுவது போன்றவை. ஒவரிகளும், கருப்பப்பையும் அறுவை சிகிச்சையால் நீக்கப்பட்டிருந்தாலும் மாதவிடாய் நின்றுவிடும். இதற்கு ஷிuக்ஷீரீவீநீணீறீ விமீஸீஷீஜீணீusமீ என்பார்கள்.
மாதவிடாய் நிரந்தரமாக நிற்கபோகும் அறிகுறிகள்
பெண் ஹார்மோன்கள் உற்பத்தி குறைய, குறைய மாதவிடாய் சுழற்சி ஏறுமாறாகும். இந்த மாற்றங்கள், கடைசி மாதவிலக்கு வருவதற்கு 3-5 வருடங்களுக்கு முன்பிருந்தே, தோன்ற ஆரம்பிக்கும். இந்த காலகட்டத்தில் பல அறிகுறிகள் தோன்றும். இந்த மாறுதல்கள் பெண்ணிற்கு பெண் வித்யாசப்படும்.
பல பெண்களுக்கு எந்த மாற்றமும் தோன்றுவதில்லை. சில பெண்களுக்கு குறைவான மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஏனைய பெண்களுக்கு இந்த மாற்றங்கள் தீவிரமாக இருக்கும். இதனால் விமீஸீஷீஜீணீusமீ ஐப் பற்றிய அறியாமையால் பெண்களுக்கு பயமும் பீதியும் உண்டாகி பலதொல்லைகளை சந்திக்க நேரிடும். எனவே, இதைப்பற்றி அறிந்துக் கொண்டு, தவிர்க்க முடியாத இந்த இயற்கையின் நியதியுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.
அறிகுறிகள்
மெனோ-பாஸ் (விணிழிளி-றிகிஹிஷிணி) நெருங்க நெருங்க உங்கள் மாதவிடாய் சுழற்சி ஒரே ரீதியாக இல்லாமல் மாறுபடும். வழக்கத்தைவிட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உதிரபோக்கு உண்டாகலாம்.
• இரண்டு மாதவிலக்கின் நடுவில் உள்ள நாட்கள் குறையலாம், அல்லது கூடலாம்.
• இல்லாவிட்டால் வழக்கமான முறையான மாதவிடாய் சுழற்சி தொடர்ந்து, திடீரென்று எவ்வித அறிகுறியுமின்றி நின்று விடலாம்.
• வழக்கத்துக்கு மாறாக அதிக உதிரப்போக்கு ஏற்பட்டால் உங்கள் டாக்டரை நாடவும்.
உடல்ரீதியான மாற்றங்கள்
1. பிஷீt திறீணீsலீமீs எனப்படும் வேதனையான சூடு உணர்வுகள் உடம்பில் உண்டாகி, முகம் சிவந்து, முகத்தில் கழுத்தில் உடலில் வேர்வை ஏற்படும். படபடப்பு, தலை சுற்றல் இல்லை… மயக்கமே ஏற்படலாம். இந்த பிஷீt திறீணீsலீமீs சில நிமிடங்களில் மறையலாம், இல்லை மணிக்கணக்கில் இருந்து தொல்லை தரலாம். ஒன்றிரண்டு வருடங்கள் இல்லை 5 வருடங்கள் கூட இந்த பிஷீt திறீணீsலீமீs தொடரலாம். இதற்கு நிவாரணம் – பிஷீt திறீணீsலீமீs தாக்கும்போது ‘ஜில்’ என்று குளிர்ந்த பழரசங்கள் அல்லது தண்ணீரை பருகவும். இரவில் எப்போதும் கிடைக்குமாறு, படுக்கை அருகில் பழரசங்கள்/தண்ணீர் இவற்றை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
2. இரவில் வியர்த்தல்
இரவில் அதிக வியர்வை ஏற்பட்டு உங்கள் தூக்கம் தடைப்படும்.
நடுஇரவில் நீங்கள் எழுந்து உடைகளை மாற்றவோ இல்லை ‘ஷவரில்’ குளிக்கவோ நேரிடும். இதனால் உங்கள் தூக்கமும் உங்கள் துணைவரின் தூக்கமும் கெடும். தளர்வான பருத்தி ஆடைகளை உபயோகியுங்கள்.
3. யோனி உலர்தல்
யோனியின் ‘சுவர்கள்’ தங்கள் மென்மையையும், ‘எலாஸ்டிக்’ (ணிறீணீstவீநீ) தன்மையையும் இழந்துவிடும். நமைச்சல், சொறி ஏற்பட்டு, யோனியில் தொற்றுநோய் உண்டாகலாம். சாதாரணமாக உடல் உறவின்போது, யோனியை ஈரமாக வைக்க சுரக்கும் திரவம், இந்த விமீஸீஷீஜீணீusமீ சமயத்தில், சரிவர சுரக்காது. இதனால் யோனி காய்ந்துவிடும் உடல்உறவு மகிழ்ச்சியை விட அதிக வேதனையை உண்டாக்கும். எனவே, உடலுறவை தவிர்க்கவும்.
4. இதர உடல் பாதிப்புகள்
தலைவலி, உடல்வலி, களைப்பு, வயிற்று தொல்லைகள், மார்பகம் மென்மையடைதல், தூக்கமின்மை, எடைகூடுதல் இவையெல்லாம் உண்டாகும். தோல்கள் சுருக்கமடைந்து ‘கோடுகள்’ (கீக்ஷீவீஸீளீறீமீs) உண்டாகும். தலை முடி அதன் பளபளப்பை இழக்கும். முகத்தில் உள்ள முடிகள் முரடாகி அதிகரிக்க கூடும். தலைமுடி உதிர்ந்து குறைந்து விடலாம். ஆஸ்டியோ – போரேசிஸ் (ளிstமீஷீ-றிஷீக்ஷீஷீsவீs) என்ற எலும்பு நோய் தோன்றலாம்.
மனோரீதியான பாதிப்புகள்
• உடல் தொல்லைகளால் எரிச்சலும் களைப்பும் ஏற்படும். அடிக்கடி எரிந்து விழுவீர்கள்.
• மறதி, அடிக்கடி மனநிலை (விஷீஷீபீ) மாறுவது, ஒரு விஷயத்தில் ஈடுபாடு (சிஷீஸீநீமீஸீtக்ஷீணீtவீஷீஸீ) இல்லாமல் போவது, இனந்தெரியாத பலஉணர்வுகள் காரணமில்லாமல் அழுகை இவையெல்லாம் ஏற்படும்.
• உங்கள் ‘டென்ஷனால்’ சிறிய பிரச்சனைகள் பூதாகாரமாக பெரிதாக தெரியும். ஞிமீஜீக்ஷீமீssவீஷீஸீனும் உண்டாகலாம்.
இதர சிக்கல்கள்
1. இதய சம்மந்த நோய்கள்
நல்ல கொலஸ்ட்ராலையும், தீய கொலஸ்ட்ராலையும் ஒருகட்டுப்பாட்டில் வைப்பது ணிstக்ஷீஷீரீமீஸீ ஹார்மோன். இது நிரந்தரமாக மாதவிடாய் நின்றிடும்போது சுரப்பது குறைந்துவிடும். இதனால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த முடியாமல் போகும். தீய கொலஸ்ட்ரால் அதிகரித்து இதய நோய்கள் உண்டாகும்.
2. ஆஸ்டியோ போரோசிஸ்
இந்த எலும்பு மண்டல நோய் அதிகவயதினால் ஏற்படுவதைவிட விமீஸீஷீ-றிணீusமீ ஆல் அதிகம் ஏற்படுகிறது. இதற்கும் ணிstக்ஷீஷீரீமீஸீ தான் காரணம். இந்த ஹார்மோன் ‘கால்சியம்’ உடலில் படிவதற்கு உதவுகிறது. ணிstக்ஷீஷீரீமீஸீ குறைந்தால் எலும்பிலிருந்த கால்ஷியம் குறையும். நாளடைவில் எலும்புகள் வலுவிழந்து எலும்புகள் அடிக்கடி முறிய நேரிடும். விமீஸீஷீஜீணீusமீக்கு பிறகு வரும் முதல் அல்லது இரண்டாவது ஆண்டுகளில் அதிகமான எலும்பு இழப்பு நேருகிறது. ஆசிய பெண்கள் தான் அதிக அளவு ளிstமீஷீ-றிஷீக்ஷீஷீsவீs நோய்க்கு உள்ளாகுகிறார்கள்.
3. நரம்பு சம்மந்த மறதிநோய் (கிலிஞீபிணிவிணிஸி’ஷி ஞிவீsமீணீsமீ)
இது நரம்புத்தளர்ச்சி நோய். இது தொடர்பான ஞாபகசக்தி குறைந்து முழு மறதியை உண்டாக்கிவிடும். இதனால் மனச்சோர்வும் (ஞிமீஜீக்ஷீமீssவீஷீஸீ) வரும்.
அலோபதிக் மருந்துகள்
மாதவிடாய் நிரந்தரமாக நிற்கும்போது ஏற்படும் தொல்லைகளில் முக்கிய காரணம் ணிstக்ஷீஷீரீமீஸீ மற்றும் றிக்ஷீஷீரீமீstமீக்ஷீஷீஸீமீ ஹார்மோன்களின் குறைபாடு. எனவே, இந்த ஹார்மோன்களை வாய் வழியாக ஊசிபோட்டோ, உடலுக்கு செலுத்தப்படுவது முதன்மையான சிகிச்சை. இது பிஷீக்ஷீனீஷீஸீமீ ஸிமீஜீறீணீநீமீனீமீஸீt ஜிலீக்ஷீமீக்ஷீணீஜீஹ் (பிஸிஜி) எனப்படுகிறது.
இதன் பயன்கள்
• பிஷீt திறீணீsலீமீs, இரவு வியர்த்தல் முதலிய தொல்லைகளை தடுக்கிறது.
• சருமம், தலைமுடி பாதிப்புகளை சரிசெய்கிறது.
• இதய, இரத்தக்குழாய் நோய்களிலிருந்து நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
• யோனியின் சுவர்களை மென்மையாக்கி, ஈரப்பசை குறையாமல் பாதுகாக்கிறது. பிஸிஜி யின் சில பக்க விளைவுகள்.
• இந்த ஹார்மோன் சிகிச்சையால், விமீஸீஷீஜீணீusமீக்கு பிறகு ரத்தப்போக்கு ஏற்படலாம். ரத்தப்போக்கு நிற்க வேண்டும்போது மறுபடியும் உதிரப்போக்கு தொடர்வது வேதனையை உண்டாக்கும்.
• மார்பு மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படலாம்.
• கல்லீரல், மண்ணீரல் (லிவீஸ்மீக்ஷீ, நிணீறீறீ தீறீணீபீபீமீக்ஷீ) நோய்கள் உண்டாகலாம்.
• அதிக இரத்த அழுத்தம் உள்ள பெண்கள் குடும்பத்தில் புற்றுநோய்கள் நேர்ந்திருந்தால், இந்த ஹார்மோன் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டாம்.
ஆயுர்வேதம்
ஆயுர்வேதம் பாதுகாப்பான பயனளிக்கும் சிகிச்சை முறைகளால் விமீஸீஷீஜீணீusமீ தொல்லைகளை போக்கவல்லது உடல்ரீதியாகவும் மனோரீதியாகவும் ஏற்படும் மாறுதல்களை பாதிப்புகளை ஆயுர்வேத மருந்துகளால் முற்றிலும் சரி செய்ய முடியும்.
ஆயுர்வேதம் ஒரு தொன்மையான, விஞ்ஞான ரீதியான மருத்துவ முறை, இயற்கையின் வரப்பிரசாதங்களான மூலிகைகளையும், இயற்கையான தாதுப்பொருட்களையும் உபயோகிப்பதால் பக்க விளைவுகள் இல்லை.
வியாதியிலிருந்து குணப்படுத்துவது மட்டுமல்லாமல், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மூன்று தோஷங்கள் – வாதம், பித்தம், கபம். இவைகள் சரிசமமாக உடலில் இயங்கினால் ஆரோக்கியமும், இவை மாறுபட்டால் நோய்கள் உண்டாகும் என்பது ஆயுர்வேத சித்தாந்தம்.
ஆயுர்வேதத்தின் படி, விமீஸீஷீஜீணீusமீ ஏற்படுவது. வாத, பித்த தோஷங்களின் மாறுபட்டால் தான் ஏற்படுகிறது.
நிரந்தரமாக நிற்கும் மாதவிடாய் கோளாறுகளுக்கு ஆயுர்வேத சிகிச்சை மூலிகைகள் ‘றிலீஹ்tஷீமீstக்ஷீஷீரீமீஸீ’ என்ற பொருள் உள்ள சிறந்த மூலிகைகள்.
இவை ணிstக்ஷீஷீரீமீஸீ ஹார்மோன்கள் போன்றவையே. ஆனால் ணிstக்ஷீஷீரீமீஸீ சிகிச்சையால் ஏற்படும் பக்க விளைவுகள் இல்லாதவை.
இதனால் பெண்கள் இந்த காலகட்டத்தில் எந்த வித தொல்லைகளும் இன்றி ஆயுர்வேத மருந்துகளால் பயனடையலாம்.
மருத்துவம்
பாதிப்பு அதிகமாக உடைய பெண்கள் அதிமதுரம் வேரை சுத்தம் செய்து பொடியாக்கி வைத்துக் கொண்டு தினசரி இரு வேளை (காலை, இரவு) ஒரு ஸ்பூன் அளவு சூடான பாலில் கலந்து பருகி வரலாம். அதிமதுரம் ( லிமினிஹிளிஸிமிசிணி – நிலிசீசிசீஸிவிமிஞீகி நிலிகிஙிஸிகி) வேரில் பெண் இன ஹார்மோன் ‘இஸ்ட்ரோஜென்’ போன்ற பொருள்கள் காணப்படுவதால் அது இறுதியாக மாதவிடாய் நிற்கும் சமயம் ஏற்படக் கூடிய திடீர் ஹார்மோன் குறைபாடை சீர் செய்கின்றது.
நிரந்தர மாதவிடாய் நிற்கும் போது கவனிக்க வேண்டியவை
• சரிசம விகித உணவை உட்கொள்ளவும், பச்சை காய்கறிகள், கீரை, அவரைக்காய், உருளைக்கிழங்கு, ஆப்பிள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
• கால்சியம் செறிந்த தயிர், ஆடை இல்லாத பால், பால் பொருட்கள், பீட்ரூட், கேரட், முட்டை கோஸ் போன்ற உணவுகள் ளிstமீக்ஷீஷீ – ஜீஷீக்ஷீஷீsவீs வராமல் பாதுகாக்கும்.
• மசாலா, வறுத்த பொருட்கள், வெங்காயம், பூண்டு, மிளகாய், தக்காளி, வினிகர் போன்ற உடலை சூடாக்கும் உணவுகளை தவிர்க்கவும்.
• உடற்பயிற்சி, தியானம், யோகா இவை உதவும் குறைந்த பட்சம் தினசரி நடக்கவும்.
• உடற்பயிற்சி யோகாசனங்களை உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மேற்கொள்ளவும்.
• விமீஸீஷீஜீணீusமீ தவிர்க்க முடியாத இயற்கையின் நியதி. நல்ல மருத்துவம், உணவு வகைகள் இவற்றால் நீங்கள் இந்த கால கட்டத்தில் ஏற்படும் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.

Abortion and Miscarriage





கருச்சிதைவு என்பது பெண்கள் கர்ப்பமாக இருக்கும் நிலையில், முளையமோ அல்லது முதிர்கருவோ. மேலும் உயிருடன் இருக்க முடியாத ஒரு நிலையில் தானாகவே அழிந்துபோதல் அல்லது சிதைந்துபோதலைக் குறிக்கும். இது பொதுவாக கருத்தரிப்பின் ஆரம்ப காலத்தில், அதாவது கருக்காலத்தின் 24 கிழமைகளுக்குள் தன்னிச்சையாக நிகழும் ஒரு சிக்கலான நிலையாகும்
கர்ப்பம் தரித்த எல்லா கர்ப்பங்களும் ஒன்பது மாதங்கள் (40 வாரங்கள்) முடிவுற்று அதன் விளைவாக குழந்தை பிறப்பதில்லை.

சில நேரங்களில் கர்ப்ப காலத்திற்குள்ளேயே தானாக கலைந்து விடுகிறது. இதனை கருச்சிதைவு என்கிறோம். இது தானாக ஏற்படும் கருச்சிதைவு ஆகும்.


பொதுவாக இந்த கருச்சிதைவு 26 வாரங்களுக்கு முன்னதாகவே ஏற்படும்.

கருவில் குழந்தை உயிர்வாழும் சாத்தியம் இல்லாதபோதுதான் கருச்சிதைவு ஏற்படுகிறது.


webdunia photo WD
பெரும்பாலும் கருவுற்ற முட்டையில் கோளாறு இருப்பின் கருச்சிதைவு ஏற்படுகிறது. ஒரு சில வேளைகளில் அவ்வாறு குறையுள்ள கருவுற்ற முட்டை தொடர்ந்து வளர்ச்சியடையும் போது உருக்குலைந்த அல்லது ஊனம் போன்ற குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்க நேரிடுகிறது. ஒரு வகையில் பார்த்தால் இதுபோன்ற பிறப்புகளை தடுக்கிறது கருச்சிதைவு என்று சொல்லலாம்.

மலேரியா, சிபிலிஸ், கர்ப்பவதி கீழே விழுவதினால், இனப்பெருக்க உறுப்புகளில் உள்ள பிரச்சினை போன்ற காரணங்களினாலும் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

சில நேரங்களில் கருப்பையில் வளர வேண்டிய கரு, கருப்பையில் அல்லாமல், கருவகத்திற்குச் செல்லும் குழாயில் வளர்ச்சியடைவதால் ஒரு கட்டத்தில் அதன் இயக்கம் தடைபட்டு கருச்சிதைவு ஏற்படுகிறது.

கருப்பை அல்லாத பகுதிகளில் வளர்ச்சியடையும் கருமுட்டையினாலும் ஏற்படும் கர்ப்பமானது பாதியிலேயே கருச்சிதைவு ஆகிறது.

இந்த கருச்சிதைவு ஏற்படுவதற்கு இரண்டு அறிகுறிகள் உள்ளன. ஒன்று பெண் உறுப்பில் இருந்து ரத்தப்போக்கு ஏற்படுதல், மற்றொன்று அடிவயிற்றில் ஏற்படும் அதிகமான வலி. இரத்தப் போக்கு முதலில் குறைவாக இருக்கும். பின் அதிகரிக்கும். ஓரிரு மாதங்கள் ஆகியிருந்தால் ரத்தம் கட்டி கட்டியாக வெளிப்படும். ஆனால் கர்ப்ப காலத்தின் ஆரம்ப நாட்களில் ஏற்படும் கருச்சிதைவு, வலி மற்றும் இரத்தப்போக்கு பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படுவது போலத்தான் இருக்கும்.

கருப்பையில் உருவான கரு சிதைவடைந்து முழுமையாக வெளியேற்றப்பட்ட பின்னர்தான் ரத்தப்போக்கு நிற்கும். அதுவரை ரத்தப்போக்கு இருந்து கொண்டுதான் இருக்கும். இவ்வாறு கருச்சிதைவடைந்த பெண்கள், 2 முதல் 4 வாரங்களுக்கு கனமான பொருட்களைத் தூக்கக் கூடாது. இவர்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். இந்த நாட்களில் உடலுறவை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

சிலருக்கு முழுமையாக கருச்சிதைவு ஆகாமல், சில திசுக்கள் கருப்பையிலேயே இருக்கும். இதனால் தொடர்ந்து ரத்தப்போக்கு, அடிவயிற்றில் வலி இருக்கும். அந்த சூழ்நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகி எஞ்சியுள்ள திசுக்களை வெளிக்கொண்டு வர முடியுமோ அவ்வளவு விரைவாக சுத்தம் செய்ய வேண்டும்.

கருச்சிதைவு முழுமை அடையாமல் தேங்கியிருக்கும் திசுக்களால், நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, கருக்குழாயில் பாதிப்புகள் ஏற்பட்டு எதிர்காலத்தில் கருவுறும் தன்மையையே இழக்கச் செய்யும் அளவிற்கு செல்லும்.

கருச்சிதைவு ஆன பெண்கள், அடுத்து கர்ப்பம் தரிப்பதற்கு சில மாதங்கள் காத்திருத்தல் அவசியம். இந்நாட்களில் கருவுருவதைத் தடுக்க, கருத்தடை முறைகளை கடைபிடிக்க வேண்டும்.

ஒரு சில பெண்களுக்கு கருச்சிதைவானது திரும்பத்திரும்ப ஏற்படும். ஒன்று அல்லது இரண்டு முறை ஆரம்பநிலையிலேயே கருச்சிதைவு ஏற்படின், கவலைப்பட வேண்டாம். ஆனால் மூன்றாவது அல்லது நான்காவது முறை இதுபோன்ற கருச்சிதைவு ஏற்படின், அடுத்த கர்ப்ப காலத்திற்குள் அந்த பெண், மருத்துவரின் முழுமையான பரிசோதனைக்குட்பட்டு, மருத்துவரின் ஆலோசனையின்படி மட்டுமே கர்ப்பம் தரித்தல் நிகழ வேண்டும்.

இவை அல்லாமல் குண்டாக இருக்கும் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே அதிக உடல் எடை கொண்ட பெண்களுக்கு, கர்ப்பம் தரித்த பின் ஏற்படும் பல்வேறு மாற்றங்களினால் இயற்கையாகவே கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு ஏற்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. எனவே பெண்கள் தங்களது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதும் அவசியமாகிறது.

பொதுவாக கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்ததை அறிந்ததும் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது மிக மிக அவசியம்.

அடுத்த கட்டுரையில் சிசேரியனுக்கான காரணங்களை அறியலாம்.



1 comment:

  1. Your post is very great.I read this post. It’s very helpful. You can check more about Adapalene and Benzoyl Peroxide Manufacturer here

    ReplyDelete